Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டனில் மீண்டும்..........
#1
கடந்த சில நாட்களாக லண்டனின் புறநகர் பகுதிகளான "கரோ, றெயினர்ஸ்லேன், பினர்,..." பகுதிகளில் எம்மவர்களின் வீடுகளைக் குறிவைத்து மீண்டும் களவுகள் ஆரம்பமாயிருக்கின்றனவாம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னம் மிகப் பெரிய அளவில் இப்பகுதிகளில் களவுகள் நடைபெற்றன. முன்பு குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள பெரும்பான்மையான எம்மவர்களின் வீடுகள் மிக திட்டமிட்டு, வீட்டுரிமையாளர்கள் வெளியில் செல்வது அவதானிக்கப்பட்டு, அவ்வீடுகளிலுள்ள ஏறக்குறைய எல்லா விலையுயர்ந்த பொருட்களும் களவாடப்பட்டிருந்தன. மீண்டும் அதே பாணியிலான செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

முன்பு நடைபெற்ற சம்பவங்களின் பின்னனி பற்றி எம்மவர்கள் மத்தியில் பல ஊகங்கள்/சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. குறிப்பாக ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த "எம்மின வீரர்கள்" குறிப்பிடப்பட்ட பகுதிகலில் ஒரூரு வீடுகளை வாடகைக்கு எடுத்திருந்து இச்சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்றும், வார இறுதி நாட்களில் இப்படியானவர்கள் வந்து செய்து போட்டு சென்று விடுகிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் அடிபட்டன. எவை எப்படியிருப்பினும் இக்களவுகள் நிச்சயமாக எம்மினத்தவர்களாலேயே நடைபெறுகின்றன.

ஆனால் இக்களவுகளுக்கு பின்னனியில் வேறுசில சக்திகளும் உள்ளனவா என்ற ஐயமும் மக்கள் மத்தியில் இருக்கின்றது. காரனாம் தேசியத்திற்கான நிதி சேகரிப்பு மும்முரமாக உள்ள நிலையில், அதனை எவ்விதத்திலாவது குழப்புவதற்கு தமிழ்த் தேசியத்திற்கெதிரான கூலிகள்/எதிரிகள்பெருமுயற்சியுடன் ஈடுபடுவது எல்லோரும் அறிந்ததே!! இதன் பின்னனியில் இக்களவுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கலாம்.

குறிப்பாக "ஜேர்மன்" நாட்டிலிருந்து சில கூலிகள் இதே பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னம் வந்து, தமது எஜமானர்களுடனும் வலம் வந்தது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
" "
Reply


Messages In This Thread
லண்டனில் மீண்டும்.......... - by cannon - 12-18-2005, 08:57 PM
[No subject] - by shanmuhi - 12-18-2005, 09:37 PM
[No subject] - by kuruvikal - 12-19-2005, 12:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)