12-18-2005, 06:15 PM
சைபர் கிரைம்: சாதித்த சென்னை போலீஸ்
டிசம்பர் 18, 2005
சென்னை:
மிரட்டல் இமெயில் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் டெல்லி போலீஸார் திணறிய நேரத்தில், அதை முதலில் கண்டுபிடித்து சாதனை படைத்தது சென்னை போலீஸார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் தகவலால் நாடே கதிகலங்கிப் போனது. இந்த இ மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறிய டெல்லி போலீஸார் உடனடியாக களத்தில் இறங்கினர்.
மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து அவர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் மெயில் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்க ¬முடியவில்லை.
இதே நேரத்தில் சென்னை சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் சென்னை போலீஸார் களத்தில் குதித்தனர். சைபர் கிரைம் தொடர்பான, குறிப்பாக இமெயில் மிரட்டல், எஸ்.எம்.எஸ். குற்றங்களை மிகவும் லாவகமாக கண்டுபிடிக்கும் திறமை படைத்தவர் உதவி ஆணையர் பாலு.
சம்பந்தப்பட்ட மெயில் எங்கிருந்து வந்தது என்ற ஆய்வில் இறங்கிய சில நிமிடங்களிலேயே அதை பாலு தலைமையிலான குழு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. சென்னையிலிருந்து வந்ததாக ¬முதலில் கூறப்பட்ட இமெயில், பாளையங்கோட்டை மற்றும் ¬முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள இன்டர்நெட் மையங்களிலிருது சிபி இணையதளம் மூலம் அனுப்பப்பட்டதை பாலு கண்டுபிடித்து மாநகர ஆணையர் நடராஜிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இந்தத் தகவலை வெளியிடாத நடராஜ், ¬முதலில் மத்திய அரசுக்கு மட்டும் தகவல் தெரிவித்தார். இதையடுத்தே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, மெயில் சென்னையிலிருந்து வரவில்லை, நெல்லையிலிருந்து வந்துள்ளது தெரிய வந்தது.
சென்னை சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் தற்போது டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்புப் படை அதிகாரிகள் குற்றவாளிகள் என சந்தேகப்படுபவர்களிட¬ம், சம்பந்தப்பட்ட இன்டர்நெட் மையங்களிலும் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Thatstamil
டிசம்பர் 18, 2005
சென்னை:
மிரட்டல் இமெயில் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் டெல்லி போலீஸார் திணறிய நேரத்தில், அதை முதலில் கண்டுபிடித்து சாதனை படைத்தது சென்னை போலீஸார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் தகவலால் நாடே கதிகலங்கிப் போனது. இந்த இ மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறிய டெல்லி போலீஸார் உடனடியாக களத்தில் இறங்கினர்.
மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து அவர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் மெயில் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்க ¬முடியவில்லை.
இதே நேரத்தில் சென்னை சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் சென்னை போலீஸார் களத்தில் குதித்தனர். சைபர் கிரைம் தொடர்பான, குறிப்பாக இமெயில் மிரட்டல், எஸ்.எம்.எஸ். குற்றங்களை மிகவும் லாவகமாக கண்டுபிடிக்கும் திறமை படைத்தவர் உதவி ஆணையர் பாலு.
சம்பந்தப்பட்ட மெயில் எங்கிருந்து வந்தது என்ற ஆய்வில் இறங்கிய சில நிமிடங்களிலேயே அதை பாலு தலைமையிலான குழு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. சென்னையிலிருந்து வந்ததாக ¬முதலில் கூறப்பட்ட இமெயில், பாளையங்கோட்டை மற்றும் ¬முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள இன்டர்நெட் மையங்களிலிருது சிபி இணையதளம் மூலம் அனுப்பப்பட்டதை பாலு கண்டுபிடித்து மாநகர ஆணையர் நடராஜிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இந்தத் தகவலை வெளியிடாத நடராஜ், ¬முதலில் மத்திய அரசுக்கு மட்டும் தகவல் தெரிவித்தார். இதையடுத்தே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, மெயில் சென்னையிலிருந்து வரவில்லை, நெல்லையிலிருந்து வந்துள்ளது தெரிய வந்தது.
சென்னை சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் தற்போது டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்புப் படை அதிகாரிகள் குற்றவாளிகள் என சந்தேகப்படுபவர்களிட¬ம், சம்பந்தப்பட்ட இன்டர்நெட் மையங்களிலும் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

