12-10-2003, 03:10 PM
mohamed Wrote:உதுக்குள்ளை காலை வைக்கிறேல்லை எண்டு நானும் பார்த்தால் நீங்கள் விடிறியள் இல்லை. சரி சில கேள்விகள் அதற்கு ஆண்கள் பதிலை தாருங்கோ!!!!
உலகத்தில் எங்காவது ஒரு பெண் ஒரு ஆணின் தலையீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு ஆணின் ஆமோதிப்பின்றி முடிவெடுக்க முடியுமா?
எனது பதில் இல்லை, காரணம் அவர்கள் வாழ்வது ஆண்களின் உலகில்!
பாரதி கண்ட புதுமைப் பெண்? எங்காவது இருக்கிறாளா?
இன்றும் பெண்கள் உலகின் எந்த மூலைக்கும் தனியே செல்ல முடியாத நிலை!!!
ஆண்களின் உலகில் வசிக்கும் பெண்கள்!!!
திருமணம் செய்யும் ஒரு பெண் திருமதி என்று அவள் திருமணமாகி விட்டதை உலக சட்டமே வெளிக்காட்டுகிறது.. ஆண்களுக்கு ஏதாவது உண்டா?
அவை முதலும் தான் பிறகும் தான் காரணம் இது ஆண்களின் உலகம்.
கலாச்சாரம், கற்பு, களிமண் உதையெல்லாம் காப்பாற்ற தான் பெண்கள் அவைக்கு தான் அனைத்து கட்டுப்பாடும். சமூக ஒழுக்கம், தாய்மை, புனிதம் எண்டு அவைக்கு தான் முழு அவஸ்தையும், அனால் சமூகத்திலை முழு அந்தஸ்து பெறுவது ஒரு ஆண்தான்..
தமிழ் தேசிய இனத்தை பெரும்பான்மையான சிங்கள தேசம் அடக்குகிறது, ஆனால் அடக்கும் அந்த இனம் தான் தமிழினத்தை அடக்குவதாக ஒரு போதும் ஒப்புக்ககொள்ளபோவது, ஒப்புக்கொண்டதும் கிடையாது. மாறக தமிழினத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் காணாது எண்டு சிங்கள் இனம் கால கால மாக குற்றம் சொல்லுது. ஆனால் அதை தமிழ் தேசியமான நாம் ஒப்புக்கொள்ள தயாரா? அதே போல தான் ஆண்ஆதிக்கமும். அடக்கும் ஆண்களுக்கு அடக்குமுறை மட்டும் தான் தெரியும், அடக்கப்படுவதன் வலி தெரியாது அதை உணரவும் முடியது (சிங்கள தேசியம் போல).
பெண்களுக்கு உரிமை கொடுப்பது பற்றி பலர் எழுதுகிறீர்கள். அப்ப நீங்கள் என்ன கடவுளா அவர்களுக்கு உரிமையை கொடுக்க! இதிலிருந்து தெரியவில்லை நீங்கள் கொடுப்பதை தான் அவர்கள் ஏற்கும் நிலையில் இன்னும் இருக்கிறார்கள் என்று, எனவே ஆண்களே ஒப்பக்கொள்ளுங்கள் நீங்கள் கால காலமாக பெண்களை அடக்கும் ஒரு இனம் தான். அவர்களுக்கு உரிமையை நீங்கள் கொடுத்தது போதும், அவர்கள் தாமக தமது உரிமையை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது தேசியம் அடக்கப்பட்ட போது தமிழினம் எப்படி வீறீட்டு எழுந்ததோ, அது போல் இப்போ பெண்கள் காலம், அவர்கள் உரம் பெற்று தம் உரிமைகளை பெறுகையில் நாம் வசறும் சருகுகளாக பறந்திட வேண்டியது தான்!!
ஆணியம் என்ற ஒன்று இல்லை! ஆண் அடக்கும் இனம், அதற்கு அடக்குமுறை பற்றிதான் தெரியும்! பெண்ணியத்தின் வரலாறு தெரியாது அதை மாசு படுத்த வேண்டாம், அது உங்களை தயை மாசுபடுத்துவது போன்றது.
உதுக்குள்ளை காலை வைக்கிறேல்லை எண்டு நானும் பார்த்தால் நீங்கள் விடிறியள் இல்லை. சரி சில கேள்விகள் அதற்கு ஆண்கள்/பெண்கள் பதிலை தாருங்கோ!!!!
உலகத்தில் எங்காவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் தலையீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு பெண்ணின் ஆமோதிப்பின்றி முடிவெடுக்க முடியுமா?
எனது பதில் இல்லை, காரணம் அவர்கள் வாழ்வது பெண்களின் உலகில்!
பாரதி கண்ட புதுமைப் பெண்? எங்காவது இருக்கிறாளா?
ஓ ஓ....மூலைக்கு மூலை வீட்டுக்கு வீடு...பாரதி கண்டதைவிட அதிகமாக...!
இன்று ஆண்கள் உலகின் எந்த மூலைக்கும் தனியே செல்ல முடியாத நிலை!!!
பெண்களின் உலகில் வசிக்கும் ஆண்கள்!!!
திருமணம் செய்யும் ஒரு பெண் திருமதி என்று அவள் திருமணமாகி விட்டதை உலக சட்டமே வெளிக்காட்டுகிறது.. ஆண்களுக்கு ஏதாவது உண்டா? அதுதான் ஏன் என்று கேட்கிறோமே....அங்கே ஆண்களுக்கான மாற்றம் ஏன் புறக்கணிக்கப்படுகிறது...!
கலாச்சாரம், கற்பு, களிமண் உதையெல்லாம் காப்பாற்ற தான் பெண்கள் அவைக்கு தான் அனைத்து கட்டுப்பாடும். சமூக ஒழுக்கம், தாய்மை, புனிதம் எண்டு அவைக்கு தான் முழு அவஸ்தையும், அனால் சமூகத்திலை முழு அந்தஸ்து பெறுவது ஒரு ஆண்தான்....
ஆணுக்கு எங்கே அந்தஸ்து எல்லாம் சலுகைக்களில் பெண்ணுக்கெல்லோ முதலிடம் 'லேடிஸ் வெஸ்ற்'....இப்ப பெண்கள் உந்தக் கலாசாரம் கற்பு அது இது மண்ணாங்கட்டி எல்லாம் விட்டு கனகாலம்... அதுதானே அபோசன் மாத்திரையளை கண்டுபிடிச்சு அபரிமிதமா தாயாரிக்கிறமே...தேவை அவ்வளவுக்கு இருக்கு....!
நீங்கள் எங்க இருக்கிறியள் பூமியிலையோ செவ்வாயிலையோ....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

