12-16-2005, 09:19 AM
அன்று என் கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக மாணவர்கள் வரும் நாள், ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது எங்கள் கல்லூரி நிர்வாகம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் நடத்தும் பொறுப்பு எங்களுக்கு. எல்லா ஏற்பாடுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே முடிந்திருந்தது. சில கடைசி நேர விஷயங்கள் பாக்கியிருந்தன. இரண்டு மணிநேரக் கலைநிகழ்ச்சிகள், 90 சதவீத பொறுப்புகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, நடத்துவதை மட்டும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா நிகழ்சிகளையும் ரிகர்ஸல் பார்த்தாகிவிட்டது. மேடையும், நிகழ்ச்சியை நடத்துவதும் என் பொறுப்பில் இருந்தது.
காலையில் போனதுமே, பிரின்ஸிபால், "தாஸ், எல்லாம் முடிஞ்சிருச்சா, ஒன்னும் தப்பில்லையே. ஏடாகூடமாச்சுன்னா சேர்மன் கோச்சுக்குவார் பார்த்துக்கோ!".
"இல்லை சார், எல்லாம் சூப்பராக வந்திருக்கு, இந்த வருஷம் அசந்திரப் போறீங்க பாருங்க," என்று சொன்னேன்.
நிகழ்ச்சிகளெல்லாம் நன்றாக நடந்தது, சொல்லப்போனால் மற்ற ஆண்டுகளைவிட மிகச் சிறப்பாக இருந்தது, மற்ற ஆண்டுகளில் ரிகர்ஸல் பார்க்காமல் வந்து விடுவார்கள்; அதனால் கடைசிநேரக் குழப்பங்கள் இருக்கும், இது தெரிந்துதான் நான் எல்லா நிகழ்சிகளுக்கும் ரிகர்ஸல் தரவேண்டும் என்று கட்டாயமாகக் கூறிவிட்டேன், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் நன்றாகச் செய்திருந்தார்கள், ஆக மொத்தம் எல்லாம் சிறப்பாக நடந்தது.
வாழ்த்துரை கூறவந்த சேர்மன், ரொம்ப சந்தோஷமாகி மேடையில் நின்று கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து, "இவரு மோகன், மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன், வருஷாவருஷம், இவர் மற்றும் இவரோட குழுவால் கல்லுரிக்கு நிறைய பரிசு, நிறைய கேடயங்கள், நல்ல பேரு கிடைச்சுக்கிட்டிருக்கு, எனக்குத் தெரியும் இந்த வருஷம் விழா நல்லாயிருக்குமுன்னு. புது மாணவர்களாகிய நீங்கள் இவரை மாதிரித்தான் வரணும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நீங்க கேட்கலாம்,' அப்பிடின்னு ஒரே பாராட்டு மழை.
அப்புறம் "உங்கள்ளேர்ந்து (புதிய மாணவர்களிடம்) ஒருத்தர் வந்து விழா எப்படியிருந்தது. நீங்கள் கல்லூரிகிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்றீங்கன்னு சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!" சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த புதிய மாணவர்களைப் பார்த்தார். நானும் அப்போதுதான் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தேன். மூன்றாம் நான்காம் வரிசையில் உட்கார்ந்திருந்த அவள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
கொஞ்ச நேரம் யாருமே வரவில்லை, கடைசியில் நான் நினைத்ததைப் போலவே அவள் தான் மேடையேறி வந்தாள்.
நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாகவும், சீனியர்கள், ஜூனியர்களுக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றாள். நன்றியுரை கூறவந்த நான் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு (அவளையும் சேர்த்து), 'நானும் சீனியர் என்பதால் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவதாக'க் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தேன்.
நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே அவள் என்னிடம் வந்து அப்படிப்பட்ட ஒன்றை கேட்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.
----------
"உங்களோட நோட்ஸ் எனக்கு வேண்டும், கிடைக்குமா?".
மேடையிலிருந்து இறங்கியதும் நேராக ஆயாக்கடைக்குப் போய் சாப்பாடு ஃபுல் கட்டு, கட்டிவிட்டு, கிளாசுக்கு வந்தால், வருகின்ற வழியிலேயே நின்று கொண்டிருந்தாள். என்னடா இது இவளைப் பார்க்க வேண்டியிருக்கிறதேன்னு நினைச்சுக்கிட்டே கிராஸ் பண்ணினா, இப்படிக் கேட்டாள்.
நான் உடனே, "முதல்ல நான் உங்களோட சீனியர்ன்னு தெரியுமா, நீங்க முதல் வருடம் படிக்க வந்திருக்கிறீங்க. சொல்லப்போனால் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் தான் கேட்கணும். எங்கிட்ட கேட்கிறீங்க. நோட்ஸ் என்கிட்டயிருந்தாலுமே யார்க்கு தரணும்னு நான் முதல்ல யோசிக்கணும். உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது, நான் நோட்ஸ் தருவேன்னு எப்படி நினைச்சீங்க, ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க முதலாம் ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க, நான் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அவ்வளவுதான் நமக்குள்ள உள்ளது. முன்னாடி நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டாச்சு, அவ்வளவுதான்!" என்று சொல்லிட்டு கிளாசுக்குப் போய்ட்டேன்.
கிளாசுக்கு போனால் அங்கே என்னுடைய ஜூனியர்கள்(இரண்டாம் ஆண்டு) இருந்தார்கள்.
"ம்ம்ம்... சொல்லுங்கண்ணே!!" என்றேன் நான்.
"அண்ணே, எங்க ஜூனியரைப் வரவேற்க போறோம், உங்களையும் கூட்டிக்கிட்டு போகச் சொல்லி பிரின்ஸி சொன்னாரு, வரீங்களா?"
"என்னடா வம்பாப் போச்சு, உன் ஜூனியரை வரவேற்க நான் எதற்கு, பிரின்ஸிக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏனாம்?"
"ராகிங் பிராப்ளம் இருப்பதால் உங்களையும் கூட்டிக்கிட்டு போகச்சொல்லி சேர்மன் சொன்னாராம்."
"சரி வந்து தொலையுறேன், ஆனா ஒன்னும் பேசமாட்டேன். இங்கையே சொல்லிட்டேன்".
எல்லா புதுசுங்களும் உட்கார்ந்திருந்ததுங்க, இவள் முதல் ஸீட்டிலேயே உட்கார்ந்திருந்தா, முகம் வாடியிருந்தது. என்னைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.
"இவர்களெல்லாம் உங்க சீனியர்கள், இவன் பேரு சுந்தரம், கிளாஸ் ரெப். இனிமே சுந்தரம் உங்ககிட்ட பேசுவான்". நான் விலகி பின்னால் நின்றேன்.
அவன் நன்றாகவே பேசினான், பேச்சின் இடையே விஷயம் நோட்ஸ் பக்கம் வந்தது. சுந்தரம் என்னவோ பதில் சொன்னான், அப்போது நான் எதேச்சையாக அவளைப் பார்க்க அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்தது.
"அண்ணே..." சுந்தரம் கூப்பிட்டதும் தான் உணர்ச்சி வந்தது.
"ம்ம்ம்... சொல்லு சுந்தரம்".
"இவங்க சிலபஸ் மாறியிருக்காம், பர்ஸ்ட் செமஸ்டர்ல சி-யும், டேட்டா ஸ்ட்ரெக்சரும் இருக்காம். அது எங்களுக்கும் இப்பத்தான்(மூன்றாம் செமஸ்டரில்) இருக்கு. நோட்ஸ் வேண்டுமாம். எங்களிடம் இல்லையே? அதான் என்ன செய்வதுன்னு..."
இது நான் எதிர்பாராதது, அவள் இதைத் தெரிந்து கொண்டுதான் என்னிடம் கேட்டாளா, ஐயோ என்னடா இது சோதனைன்னு நினைச்சிக்கிட்டே...
"ஸ்டுடண்ட்ஸ், இங்கே லக்சரர்ஸ் தற்ற நோட்ஸே போதும், அப்புறம் புக்ஸ் இருக்கும். உங்களுக்கு சீனியர் நோட்ஸ் தேவைப்படாது, தேவைப்பட்டால் உங்க லெக்சரர் மூலமா மூவ் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். இப்பவும் அவள் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்புறம் அவர்கள் ஒவ்வொருவருடைய பெயர், ஊர், அப்பாவின் தொழில் இன்னபிற விவரங்களை கேட்டார்கள். கேட்காமல் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு அவள் சொல்லும் விவரங்களை கூர்மையாகக் கேட்டேன். பெயர் அகிலாண்டேஸ்வரி, ஊர் ஸ்ரீரங்கம், அப்பா புரோகிதர்.
சுந்தரம் கேட்க கூடாத ஒரு கேள்வியைக் கேட்டான்.
"உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேட்கலாம்" என்று சொன்னான்.
உடனே அகிலா எழுந்து "நான் பேச்சுப்போட்டியில் கலந்துப்பேன், அதுக்கு யார்கிட்ட கேட்கணும்?" என்று கேட்டுவிட்டு என்னை வேறு பார்த்தாள்.
"தாஸ் அண்ணாதான் கல்ச்சுரல் லீட், அவர்கிட்டத் தான் சொல்லணும். ஆனா உங்களுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அண்ணா வருஷாவருஷம் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கி வருவார்," என்று சொல்லி பெருமையாக வேறு என்னைப் பார்த்தான்.
தலையெழுத்தே வம்புல மாட்டிவிட்டுட்டானேன்னு நினைச்சு, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, உங்கள் பெயரையும் பதிவு செய்யலாம். போட்டிக்கு முன்பு கல்லுரியில் ஒரு போட்டி நடக்கும். அதில் வென்றவர்கள் தான் யுனிவர்சிட்டி போட்டியில் கலந்திக்கணும். அதானால உங்கள்ல யார் யாரெல்லாம் பேசுவீங்களோ அவங்களெல்லாம் கலந்துக்கலாம். அதுக்கு மாலை நேரத்தில என்னை தனியா பாருங்க" என்று சொன்னேன். (அவளுக்காக இல்லை, அதுதான் முறை).
என்னடா இது சுத்தி சுத்தி அடிக்குதேன்னு நினைச்சுக்கிட்டே திரும்பியும் கிளாசுக்கு வந்தேன்.
------------------
சாயந்திரம் அஞ்சு மணியிருக்கும், கல்லூரி எப்பொழுதும் நாலே காலுக்கு முடிந்துவிடும், ஆனால் அன்று கொஞ்சம் வேலையிருந்ததால் கிளம்பவில்லை. ஐந்து மணிக்கு இவள் பர்ஸ்ட் ப்ளோரிலுள்ள என் வகுப்பறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது தான் என்னவோ நினைப்பாய் வாசல் பக்கம் திரும்ப நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதிலிருந்து நிற்கிறாளோ தெரியவில்லையென்று நினைத்து உள்ளே கூப்பிட்டேன்.
"மறந்தே போயிட்டேன், கூப்பிட்டுயிருக்கலாம்ல."
"இல்ல இன்னொரு பையனும் வந்தான், இப்ப கீழே போயிருக்கான் வரட்டுமேன்னு பார்த்தேன். அதுமட்டுமில்லாம உங்களை கூப்பிட பயமாயிருந்தது" என்று சொன்னாள்.
நான் அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கவனிக்காதது போல விட்டுவிட்டேன்.
"சரி சொல்லு, நான் உனக்கு என்ன பண்ணனும்"
"இல்ல நீங்கதான் பேச்சுப்போட்டியில கலந்துக்கணும்னா உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னீங்க, ஆனா நான் பேச்சுப்போட்டியில கலந்துக்கல; வேற என்ன போட்டியிலெல்லாம் கல்லூரி கலந்துக்கும்னு தெரிஞ்சா, எதிலாவாது கலந்துக்கலாமேன்னுதான்"
வேணும்னே என்னைக் கிண்டுறான்னு, நான் ஏன் பேச்சுப்போட்டியில கலந்துக்கலைன்னு கேட்கலை.
"நாங்க அது இல்லாம, ஸ்கிட்(நாடகம்), மைம்(ஊமை நாடகம்) இரண்டுலையும் கலந்துப்போம், டான்ஸ் மற்றதெல்லாம் என்கிட்ட இல்லை"
"நான் டான்ஸ் ஆடமாட்டேன், நாடகத்தில் கலந்துக்கிறேன், முன்னாடி எங்க ஸ்கூல் நாடகத்திலெல்லம் நடிச்சிருக்கேன்"
நான் அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சரி உன் பேரை சேர்த்துக்கிறேன், தேவையிருந்தால் கூப்பிடுகிறேன். நன்றி" என்று சொல்லிவிட்டு என் நோட்டில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன்.
ஆனா ஒரு இரண்டு நிமிஷம் ஆகியிருக்கும் அவள் கிளம்பாததால்,
"ம்ம்ம்... அப்புறம்?"
"இல்லை, நோட்ஸ்..."
"நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன், பின்னாடி கிளாஸ்லையும் சொன்னேன்... இதுக்கு மேல உனக்கு என்ன தெரியணும்."
"இல்லை, கனிமொழி அக்காத்தான் உங்க கிட்ட கேட்கச் சொன்னாங்க, அவங்க எனக்கு அக்கா முறை வரும். ஆனா இதை உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நமக்குள்ள என்னன்னமோ நடந்திருச்சி, உங்களுக்கும் என்னை பிடிக்காமப் போச்சு..." கொஞ்சம் விட்டா அழுதுறுவான்னு நினைச்சேன்.
"கனிமொழியா?" கனிமொழி என்னோட ஜூனியர், சொல்லப்போனா ஒரேயொரு பெண் நண்பி, நாடகத்தில் எல்லாம் என்கூட நடிக்கிற பொண்ணு, இன்னும் சொல்லப்போனால் இந்தக் கல்லுரியிலேயே என்னை கிண்டல் அடிக்கக்கூடிய அளவு உரிமையுள்ளவள் அவள் ஒருத்தி தான்.
"கனிமொழிக்கு என்ன ஆச்சு, இன்னிக்கு ஆளையே காணோம்?"
"உடம்புக்கு கொஞ்சம் சரியில்லை, நாளைக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்" இன்னும் அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டிருந்தது. நல்ல நேரம் அவள் சொன்ன அந்த மற்றொரு பையன் வந்தான்; நான் தப்பித்தேன்.
"அண்ணா நானும் நல்லா பேசுவேன், நீங்க நாடகமெல்லாம் போடுவீங்கன்னு கேள்விப்பட்டேன், நானும் நடிக்கலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்."
"சரி உன்பேரு சொல்லு, எழுதிக்கிறேன், வாய்ப்பிருந்தா கூப்பிடுறேன்"
"அண்ணா, உங்க நோட்ஸத்தான் லெக்சரர்ஸ் யூஸ் பண்ணுவாங்களாமே, நோட்ஸ் கிடைக்குமா சி-க்கும், டேட்டா ஸ்ட்ரெக்சருக்கும்"
"யேய், அப்படியெல்லாம் உன்கிட்ட யார் சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை, என்னடா இது ஜூனியரா வந்த இரண்டாவது நாளிலேயே எனக்கும் என் வாத்தியாருங்களுக்கும் சண்டை மூட்டிவிட்ருவீங்க போலிருக்கே? இந்தப் பொண்ணுக்கிட்ட நோட்ஸ் கொடுக்கிறேன் வாங்கிக்க, எனக்கு கொஞ்ச வேலையிருக்கு அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லிட்டு அவளைப் பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பவும் நோட்ஸ் எழுதத் தொடங்கினேன்.
அன்னிக்கென்னமோ கீழே விழுந்து இன்னும் கீழே போய்க்கிட்டேயிருக்கிற மாதிரி தோன்றியது.
காலையில் போனதுமே, பிரின்ஸிபால், "தாஸ், எல்லாம் முடிஞ்சிருச்சா, ஒன்னும் தப்பில்லையே. ஏடாகூடமாச்சுன்னா சேர்மன் கோச்சுக்குவார் பார்த்துக்கோ!".
"இல்லை சார், எல்லாம் சூப்பராக வந்திருக்கு, இந்த வருஷம் அசந்திரப் போறீங்க பாருங்க," என்று சொன்னேன்.
நிகழ்ச்சிகளெல்லாம் நன்றாக நடந்தது, சொல்லப்போனால் மற்ற ஆண்டுகளைவிட மிகச் சிறப்பாக இருந்தது, மற்ற ஆண்டுகளில் ரிகர்ஸல் பார்க்காமல் வந்து விடுவார்கள்; அதனால் கடைசிநேரக் குழப்பங்கள் இருக்கும், இது தெரிந்துதான் நான் எல்லா நிகழ்சிகளுக்கும் ரிகர்ஸல் தரவேண்டும் என்று கட்டாயமாகக் கூறிவிட்டேன், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் நன்றாகச் செய்திருந்தார்கள், ஆக மொத்தம் எல்லாம் சிறப்பாக நடந்தது.
வாழ்த்துரை கூறவந்த சேர்மன், ரொம்ப சந்தோஷமாகி மேடையில் நின்று கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து, "இவரு மோகன், மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன், வருஷாவருஷம், இவர் மற்றும் இவரோட குழுவால் கல்லுரிக்கு நிறைய பரிசு, நிறைய கேடயங்கள், நல்ல பேரு கிடைச்சுக்கிட்டிருக்கு, எனக்குத் தெரியும் இந்த வருஷம் விழா நல்லாயிருக்குமுன்னு. புது மாணவர்களாகிய நீங்கள் இவரை மாதிரித்தான் வரணும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நீங்க கேட்கலாம்,' அப்பிடின்னு ஒரே பாராட்டு மழை.
அப்புறம் "உங்கள்ளேர்ந்து (புதிய மாணவர்களிடம்) ஒருத்தர் வந்து விழா எப்படியிருந்தது. நீங்கள் கல்லூரிகிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்றீங்கன்னு சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!" சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த புதிய மாணவர்களைப் பார்த்தார். நானும் அப்போதுதான் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தேன். மூன்றாம் நான்காம் வரிசையில் உட்கார்ந்திருந்த அவள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
கொஞ்ச நேரம் யாருமே வரவில்லை, கடைசியில் நான் நினைத்ததைப் போலவே அவள் தான் மேடையேறி வந்தாள்.
நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாகவும், சீனியர்கள், ஜூனியர்களுக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றாள். நன்றியுரை கூறவந்த நான் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு (அவளையும் சேர்த்து), 'நானும் சீனியர் என்பதால் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவதாக'க் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தேன்.
நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே அவள் என்னிடம் வந்து அப்படிப்பட்ட ஒன்றை கேட்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.
----------
"உங்களோட நோட்ஸ் எனக்கு வேண்டும், கிடைக்குமா?".
மேடையிலிருந்து இறங்கியதும் நேராக ஆயாக்கடைக்குப் போய் சாப்பாடு ஃபுல் கட்டு, கட்டிவிட்டு, கிளாசுக்கு வந்தால், வருகின்ற வழியிலேயே நின்று கொண்டிருந்தாள். என்னடா இது இவளைப் பார்க்க வேண்டியிருக்கிறதேன்னு நினைச்சுக்கிட்டே கிராஸ் பண்ணினா, இப்படிக் கேட்டாள்.
நான் உடனே, "முதல்ல நான் உங்களோட சீனியர்ன்னு தெரியுமா, நீங்க முதல் வருடம் படிக்க வந்திருக்கிறீங்க. சொல்லப்போனால் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் தான் கேட்கணும். எங்கிட்ட கேட்கிறீங்க. நோட்ஸ் என்கிட்டயிருந்தாலுமே யார்க்கு தரணும்னு நான் முதல்ல யோசிக்கணும். உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது, நான் நோட்ஸ் தருவேன்னு எப்படி நினைச்சீங்க, ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க முதலாம் ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க, நான் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அவ்வளவுதான் நமக்குள்ள உள்ளது. முன்னாடி நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டாச்சு, அவ்வளவுதான்!" என்று சொல்லிட்டு கிளாசுக்குப் போய்ட்டேன்.
கிளாசுக்கு போனால் அங்கே என்னுடைய ஜூனியர்கள்(இரண்டாம் ஆண்டு) இருந்தார்கள்.
"ம்ம்ம்... சொல்லுங்கண்ணே!!" என்றேன் நான்.
"அண்ணே, எங்க ஜூனியரைப் வரவேற்க போறோம், உங்களையும் கூட்டிக்கிட்டு போகச் சொல்லி பிரின்ஸி சொன்னாரு, வரீங்களா?"
"என்னடா வம்பாப் போச்சு, உன் ஜூனியரை வரவேற்க நான் எதற்கு, பிரின்ஸிக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏனாம்?"
"ராகிங் பிராப்ளம் இருப்பதால் உங்களையும் கூட்டிக்கிட்டு போகச்சொல்லி சேர்மன் சொன்னாராம்."
"சரி வந்து தொலையுறேன், ஆனா ஒன்னும் பேசமாட்டேன். இங்கையே சொல்லிட்டேன்".
எல்லா புதுசுங்களும் உட்கார்ந்திருந்ததுங்க, இவள் முதல் ஸீட்டிலேயே உட்கார்ந்திருந்தா, முகம் வாடியிருந்தது. என்னைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.
"இவர்களெல்லாம் உங்க சீனியர்கள், இவன் பேரு சுந்தரம், கிளாஸ் ரெப். இனிமே சுந்தரம் உங்ககிட்ட பேசுவான்". நான் விலகி பின்னால் நின்றேன்.
அவன் நன்றாகவே பேசினான், பேச்சின் இடையே விஷயம் நோட்ஸ் பக்கம் வந்தது. சுந்தரம் என்னவோ பதில் சொன்னான், அப்போது நான் எதேச்சையாக அவளைப் பார்க்க அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்தது.
"அண்ணே..." சுந்தரம் கூப்பிட்டதும் தான் உணர்ச்சி வந்தது.
"ம்ம்ம்... சொல்லு சுந்தரம்".
"இவங்க சிலபஸ் மாறியிருக்காம், பர்ஸ்ட் செமஸ்டர்ல சி-யும், டேட்டா ஸ்ட்ரெக்சரும் இருக்காம். அது எங்களுக்கும் இப்பத்தான்(மூன்றாம் செமஸ்டரில்) இருக்கு. நோட்ஸ் வேண்டுமாம். எங்களிடம் இல்லையே? அதான் என்ன செய்வதுன்னு..."
இது நான் எதிர்பாராதது, அவள் இதைத் தெரிந்து கொண்டுதான் என்னிடம் கேட்டாளா, ஐயோ என்னடா இது சோதனைன்னு நினைச்சிக்கிட்டே...
"ஸ்டுடண்ட்ஸ், இங்கே லக்சரர்ஸ் தற்ற நோட்ஸே போதும், அப்புறம் புக்ஸ் இருக்கும். உங்களுக்கு சீனியர் நோட்ஸ் தேவைப்படாது, தேவைப்பட்டால் உங்க லெக்சரர் மூலமா மூவ் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். இப்பவும் அவள் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்புறம் அவர்கள் ஒவ்வொருவருடைய பெயர், ஊர், அப்பாவின் தொழில் இன்னபிற விவரங்களை கேட்டார்கள். கேட்காமல் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு அவள் சொல்லும் விவரங்களை கூர்மையாகக் கேட்டேன். பெயர் அகிலாண்டேஸ்வரி, ஊர் ஸ்ரீரங்கம், அப்பா புரோகிதர்.
சுந்தரம் கேட்க கூடாத ஒரு கேள்வியைக் கேட்டான்.
"உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேட்கலாம்" என்று சொன்னான்.
உடனே அகிலா எழுந்து "நான் பேச்சுப்போட்டியில் கலந்துப்பேன், அதுக்கு யார்கிட்ட கேட்கணும்?" என்று கேட்டுவிட்டு என்னை வேறு பார்த்தாள்.
"தாஸ் அண்ணாதான் கல்ச்சுரல் லீட், அவர்கிட்டத் தான் சொல்லணும். ஆனா உங்களுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அண்ணா வருஷாவருஷம் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கி வருவார்," என்று சொல்லி பெருமையாக வேறு என்னைப் பார்த்தான்.
தலையெழுத்தே வம்புல மாட்டிவிட்டுட்டானேன்னு நினைச்சு, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, உங்கள் பெயரையும் பதிவு செய்யலாம். போட்டிக்கு முன்பு கல்லுரியில் ஒரு போட்டி நடக்கும். அதில் வென்றவர்கள் தான் யுனிவர்சிட்டி போட்டியில் கலந்திக்கணும். அதானால உங்கள்ல யார் யாரெல்லாம் பேசுவீங்களோ அவங்களெல்லாம் கலந்துக்கலாம். அதுக்கு மாலை நேரத்தில என்னை தனியா பாருங்க" என்று சொன்னேன். (அவளுக்காக இல்லை, அதுதான் முறை).
என்னடா இது சுத்தி சுத்தி அடிக்குதேன்னு நினைச்சுக்கிட்டே திரும்பியும் கிளாசுக்கு வந்தேன்.
------------------
சாயந்திரம் அஞ்சு மணியிருக்கும், கல்லூரி எப்பொழுதும் நாலே காலுக்கு முடிந்துவிடும், ஆனால் அன்று கொஞ்சம் வேலையிருந்ததால் கிளம்பவில்லை. ஐந்து மணிக்கு இவள் பர்ஸ்ட் ப்ளோரிலுள்ள என் வகுப்பறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது தான் என்னவோ நினைப்பாய் வாசல் பக்கம் திரும்ப நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதிலிருந்து நிற்கிறாளோ தெரியவில்லையென்று நினைத்து உள்ளே கூப்பிட்டேன்.
"மறந்தே போயிட்டேன், கூப்பிட்டுயிருக்கலாம்ல."
"இல்ல இன்னொரு பையனும் வந்தான், இப்ப கீழே போயிருக்கான் வரட்டுமேன்னு பார்த்தேன். அதுமட்டுமில்லாம உங்களை கூப்பிட பயமாயிருந்தது" என்று சொன்னாள்.
நான் அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கவனிக்காதது போல விட்டுவிட்டேன்.
"சரி சொல்லு, நான் உனக்கு என்ன பண்ணனும்"
"இல்ல நீங்கதான் பேச்சுப்போட்டியில கலந்துக்கணும்னா உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னீங்க, ஆனா நான் பேச்சுப்போட்டியில கலந்துக்கல; வேற என்ன போட்டியிலெல்லாம் கல்லூரி கலந்துக்கும்னு தெரிஞ்சா, எதிலாவாது கலந்துக்கலாமேன்னுதான்"
வேணும்னே என்னைக் கிண்டுறான்னு, நான் ஏன் பேச்சுப்போட்டியில கலந்துக்கலைன்னு கேட்கலை.
"நாங்க அது இல்லாம, ஸ்கிட்(நாடகம்), மைம்(ஊமை நாடகம்) இரண்டுலையும் கலந்துப்போம், டான்ஸ் மற்றதெல்லாம் என்கிட்ட இல்லை"
"நான் டான்ஸ் ஆடமாட்டேன், நாடகத்தில் கலந்துக்கிறேன், முன்னாடி எங்க ஸ்கூல் நாடகத்திலெல்லம் நடிச்சிருக்கேன்"
நான் அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சரி உன் பேரை சேர்த்துக்கிறேன், தேவையிருந்தால் கூப்பிடுகிறேன். நன்றி" என்று சொல்லிவிட்டு என் நோட்டில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன்.
ஆனா ஒரு இரண்டு நிமிஷம் ஆகியிருக்கும் அவள் கிளம்பாததால்,
"ம்ம்ம்... அப்புறம்?"
"இல்லை, நோட்ஸ்..."
"நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன், பின்னாடி கிளாஸ்லையும் சொன்னேன்... இதுக்கு மேல உனக்கு என்ன தெரியணும்."
"இல்லை, கனிமொழி அக்காத்தான் உங்க கிட்ட கேட்கச் சொன்னாங்க, அவங்க எனக்கு அக்கா முறை வரும். ஆனா இதை உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நமக்குள்ள என்னன்னமோ நடந்திருச்சி, உங்களுக்கும் என்னை பிடிக்காமப் போச்சு..." கொஞ்சம் விட்டா அழுதுறுவான்னு நினைச்சேன்.
"கனிமொழியா?" கனிமொழி என்னோட ஜூனியர், சொல்லப்போனா ஒரேயொரு பெண் நண்பி, நாடகத்தில் எல்லாம் என்கூட நடிக்கிற பொண்ணு, இன்னும் சொல்லப்போனால் இந்தக் கல்லுரியிலேயே என்னை கிண்டல் அடிக்கக்கூடிய அளவு உரிமையுள்ளவள் அவள் ஒருத்தி தான்.
"கனிமொழிக்கு என்ன ஆச்சு, இன்னிக்கு ஆளையே காணோம்?"
"உடம்புக்கு கொஞ்சம் சரியில்லை, நாளைக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்" இன்னும் அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டிருந்தது. நல்ல நேரம் அவள் சொன்ன அந்த மற்றொரு பையன் வந்தான்; நான் தப்பித்தேன்.
"அண்ணா நானும் நல்லா பேசுவேன், நீங்க நாடகமெல்லாம் போடுவீங்கன்னு கேள்விப்பட்டேன், நானும் நடிக்கலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்."
"சரி உன்பேரு சொல்லு, எழுதிக்கிறேன், வாய்ப்பிருந்தா கூப்பிடுறேன்"
"அண்ணா, உங்க நோட்ஸத்தான் லெக்சரர்ஸ் யூஸ் பண்ணுவாங்களாமே, நோட்ஸ் கிடைக்குமா சி-க்கும், டேட்டா ஸ்ட்ரெக்சருக்கும்"
"யேய், அப்படியெல்லாம் உன்கிட்ட யார் சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை, என்னடா இது ஜூனியரா வந்த இரண்டாவது நாளிலேயே எனக்கும் என் வாத்தியாருங்களுக்கும் சண்டை மூட்டிவிட்ருவீங்க போலிருக்கே? இந்தப் பொண்ணுக்கிட்ட நோட்ஸ் கொடுக்கிறேன் வாங்கிக்க, எனக்கு கொஞ்ச வேலையிருக்கு அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லிட்டு அவளைப் பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பவும் நோட்ஸ் எழுதத் தொடங்கினேன்.
அன்னிக்கென்னமோ கீழே விழுந்து இன்னும் கீழே போய்க்கிட்டேயிருக்கிற மாதிரி தோன்றியது.

