12-16-2005, 06:58 AM
<b>வலி தெரியாக்காயங்கள் பாகம் 12</b>
வேணியின் மனதில் மெலிதான ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. சண் யோசிக்க வேண்டாம் என்று சொன்னாலும் சராசரி ஒரு இளம் பெண்ணின் ஆசாபாசங்கள் இருக்கும் தானே.? கூட படிப்பவர்கள் வேறு பகிடியாக சண் ணுடன் இணைத்து பேசும் போது அவள் அறியாமல் மனதில் சண் மேல் அன்புவளர்ந்தது என்னவோ நிஜம் தான்.
ஒரு நாள் எதேச்சையாக சண்ணை யாழ் டவுணுக்குள் கண்ட போது குப்பென்று மனது துடிக்கத் தொடங்கியது. அருகேவந்த சண் "என்ன வேணி சுகமா?" என்று அன்புடன் கேட்டு விட்டு "அவசரமாக வீட்டை போறீங்களோ?இல்லை நேரம் இருக்கோ?" என்று கேட்டான்.
அவள் "இல்லை அவசரம் ஒன்றும் இல்லை" என்று சொன்னாள். "அப்ப சரி வாங்கோ ஐஸ்கிறPம் குடிக்க கூல்பாருக்கு போவோம்" என்று கேட்டான். சரி என்று ஏதும் மறுப்புச் சொல்லாமல் அவனின் பின்னாலே போனாள் வேணி. அவனுக்கு சமனாக நடக்கும் படி சொன்ன சண் அவளிடம் சொன்னான் "துர்க்கையம்மன் கோவிலில் ஐஸ்கிறிம் சாப்பிட்ட பிறகு இப்போ தான் உங்களுடன் தனியா கதைக்கிறேன்" என்று விட்டு வேணியின் முகத்தை பார்த்தான்.அவள் முகத்தில் ஒரு சந்தோசம் மனதுக்கு பிடித்தவன் கூட நடக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம் மறுபக்கம் தெரிந்தவர்கள் யாரும் பார்த்தால் வீட்டுக்கு தெரிய வருமே என்ற பயமும் அவள் மனதை சற்றே குழப்பியது.
ராஜா கூல்பார் கூல்பாரினுள் வந்து எதிர் எதிராக அமர்ந்தர்கள் இருவரும். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த சண் முகத்தை பார்க்க முடியாமல் சைட்டில் இருந்த கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்தாள் வேணி. அவர்களின் அமைதியை குழப்பியபடி வந்த வெயிட்டர் என்ன சாப்பிட போறீங்கள் என்று கேட்ட போது சண் வேணியிடம் "உங்களுக்கு என்ன விருப்பம் சொல்லுங்கோ" என்று கேட்டான். அவளுக்கு அவன் தன்னை மதித்துக் கேட்டது பிடித்து இருந்தது. இல்லை "உங்களுக்கு பிடித்ததை சொல்லுங்கோ " என்று சொன்ன வேணியிடம் "சரி உங்களுக்கு பிடித்தது என்ன என்று தெரியும்" என்று சொல்லிவிட்டு ஒரு புருட் சலாட்ஜெலிவனிலா ஐஸ்கிறீமும் தனக்கு ஜஸ்கிறீம் சர்பத்தும் ஓடர் பண்ணினான். அவைகள் வரும் வரை அவளுடன் கதைத்தபடியே மேசையில் அவள் கை வைத்து இருந்த போது யாரும் பக்கத்திலோ பார்வையிலோ இல்லை என்ற தைரியத்தில் ஆசையாக அவள் கைகளைப்பற்றினான் சண். அதிர்ந்து விட்டாள் வேணி அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவன் கை பட்ட போது என்னவோ செய்தது கையை விடுங்கோ யாரும் வர போகினமெல்லெ என்று சொன்னலும் வேணிக்கு அவன் கையை அப்படியே பிடித்து இருக்க வேணும் என்று ஆசையாக இருந்தது கையை பிடித்த சண் உங்க கை சரியான மென்மையாக இருக்கு வேணி என்று தடவினான் மெல்ல அவள் விரல்களை தடவிய படியே பேசினான் சண் ரகசியமாய் "வேணி என்கூட பழகவிருப்பமா" என்று கேட்ட சண்னை சின்ன பிள்ளையை பார்ப்பது போல் பார்த்து விட்டு நாணத்துடன் கேட்டாள் "பிடிக்காமல நான் உங்களுட்ன் இங்கே வந்தேன் இது தான் முதல் முறை நான் கூல் பாருக்கு வந்தது" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது வெயிட்டர் ஐஸ்கிறிம் கொண்டு வருவது கண்டு "கையை விடுங்கோ" என்று சொன்னாள் வேணி. ஆள் வருகுது என்டு கையை பிடித்து இருந்த சண் இக்கு கையை விட மனமில்லை இருந்தாலும் வேணிக்கு சங்கடம் வேணாமே என்று கையை விட்டான் இப்படி எத்தனை ஜோடியை பார்த்த அந்த வெயிட்டர்க்கு இவர்கள் தவிப்பு புரிந்தது. புரியாத மாதிரி ஐஸ்கிறீமை கொடுத்து விட்டு அகன்றார். இருவரும் மௌனமாக ஐஸ்கிறீம் சாப்பிடத் தொடங்கினர்கள். அப்போது சண் கேட்டான் "வேணி நீங்க சாபிட்ட ஐஸ்கிறீமை எனக்கு தாங்கோ" என்று "சீ என்ன இது நான் சாப்பிட மிச்சம் வேண்டாம்" என்று வேணி மறுத்தாள்.
வேணியின் மனதில் மெலிதான ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. சண் யோசிக்க வேண்டாம் என்று சொன்னாலும் சராசரி ஒரு இளம் பெண்ணின் ஆசாபாசங்கள் இருக்கும் தானே.? கூட படிப்பவர்கள் வேறு பகிடியாக சண் ணுடன் இணைத்து பேசும் போது அவள் அறியாமல் மனதில் சண் மேல் அன்புவளர்ந்தது என்னவோ நிஜம் தான்.
ஒரு நாள் எதேச்சையாக சண்ணை யாழ் டவுணுக்குள் கண்ட போது குப்பென்று மனது துடிக்கத் தொடங்கியது. அருகேவந்த சண் "என்ன வேணி சுகமா?" என்று அன்புடன் கேட்டு விட்டு "அவசரமாக வீட்டை போறீங்களோ?இல்லை நேரம் இருக்கோ?" என்று கேட்டான்.
அவள் "இல்லை அவசரம் ஒன்றும் இல்லை" என்று சொன்னாள். "அப்ப சரி வாங்கோ ஐஸ்கிறPம் குடிக்க கூல்பாருக்கு போவோம்" என்று கேட்டான். சரி என்று ஏதும் மறுப்புச் சொல்லாமல் அவனின் பின்னாலே போனாள் வேணி. அவனுக்கு சமனாக நடக்கும் படி சொன்ன சண் அவளிடம் சொன்னான் "துர்க்கையம்மன் கோவிலில் ஐஸ்கிறிம் சாப்பிட்ட பிறகு இப்போ தான் உங்களுடன் தனியா கதைக்கிறேன்" என்று விட்டு வேணியின் முகத்தை பார்த்தான்.அவள் முகத்தில் ஒரு சந்தோசம் மனதுக்கு பிடித்தவன் கூட நடக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம் மறுபக்கம் தெரிந்தவர்கள் யாரும் பார்த்தால் வீட்டுக்கு தெரிய வருமே என்ற பயமும் அவள் மனதை சற்றே குழப்பியது.
ராஜா கூல்பார் கூல்பாரினுள் வந்து எதிர் எதிராக அமர்ந்தர்கள் இருவரும். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த சண் முகத்தை பார்க்க முடியாமல் சைட்டில் இருந்த கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்தாள் வேணி. அவர்களின் அமைதியை குழப்பியபடி வந்த வெயிட்டர் என்ன சாப்பிட போறீங்கள் என்று கேட்ட போது சண் வேணியிடம் "உங்களுக்கு என்ன விருப்பம் சொல்லுங்கோ" என்று கேட்டான். அவளுக்கு அவன் தன்னை மதித்துக் கேட்டது பிடித்து இருந்தது. இல்லை "உங்களுக்கு பிடித்ததை சொல்லுங்கோ " என்று சொன்ன வேணியிடம் "சரி உங்களுக்கு பிடித்தது என்ன என்று தெரியும்" என்று சொல்லிவிட்டு ஒரு புருட் சலாட்ஜெலிவனிலா ஐஸ்கிறீமும் தனக்கு ஜஸ்கிறீம் சர்பத்தும் ஓடர் பண்ணினான். அவைகள் வரும் வரை அவளுடன் கதைத்தபடியே மேசையில் அவள் கை வைத்து இருந்த போது யாரும் பக்கத்திலோ பார்வையிலோ இல்லை என்ற தைரியத்தில் ஆசையாக அவள் கைகளைப்பற்றினான் சண். அதிர்ந்து விட்டாள் வேணி அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவன் கை பட்ட போது என்னவோ செய்தது கையை விடுங்கோ யாரும் வர போகினமெல்லெ என்று சொன்னலும் வேணிக்கு அவன் கையை அப்படியே பிடித்து இருக்க வேணும் என்று ஆசையாக இருந்தது கையை பிடித்த சண் உங்க கை சரியான மென்மையாக இருக்கு வேணி என்று தடவினான் மெல்ல அவள் விரல்களை தடவிய படியே பேசினான் சண் ரகசியமாய் "வேணி என்கூட பழகவிருப்பமா" என்று கேட்ட சண்னை சின்ன பிள்ளையை பார்ப்பது போல் பார்த்து விட்டு நாணத்துடன் கேட்டாள் "பிடிக்காமல நான் உங்களுட்ன் இங்கே வந்தேன் இது தான் முதல் முறை நான் கூல் பாருக்கு வந்தது" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது வெயிட்டர் ஐஸ்கிறிம் கொண்டு வருவது கண்டு "கையை விடுங்கோ" என்று சொன்னாள் வேணி. ஆள் வருகுது என்டு கையை பிடித்து இருந்த சண் இக்கு கையை விட மனமில்லை இருந்தாலும் வேணிக்கு சங்கடம் வேணாமே என்று கையை விட்டான் இப்படி எத்தனை ஜோடியை பார்த்த அந்த வெயிட்டர்க்கு இவர்கள் தவிப்பு புரிந்தது. புரியாத மாதிரி ஐஸ்கிறீமை கொடுத்து விட்டு அகன்றார். இருவரும் மௌனமாக ஐஸ்கிறீம் சாப்பிடத் தொடங்கினர்கள். அப்போது சண் கேட்டான் "வேணி நீங்க சாபிட்ட ஐஸ்கிறீமை எனக்கு தாங்கோ" என்று "சீ என்ன இது நான் சாப்பிட மிச்சம் வேண்டாம்" என்று வேணி மறுத்தாள்.
inthirajith

