12-10-2003, 12:49 AM
sOliAn wrote...
இப்படிப்பார்த்தால்.. பெற்றோருக்கு பிள்ளைகள் அடிமையா? முதலாளிக்குத் தொழிலாளி அடிமையா?
இங்கு சொல்லப்பட்டிருக்கும் 'அடிமைத்தனத்திற்கும்' ஆண்-பெண் இடையிலான ஏற்றத்தாழ்வு வாழ்வுமுறைக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. தாய் பிள்ளை 'அடிமைத்தனத்தில்' இரண்டுபேருக்கும் இடையில் அறிவு, அனுபவம், வயது என பல விடயங்களில் வேறுபாடு உள்ளது. அத்துடன் அந்தப்பிள்ளை வளர்ந்து ஒரு வயதை அடையும் மட்டும்தான் இந்த வழிகாட்டல்கள் இருக்கும். அதன்பின்னர் பெற்றோரின் கட்டளைகளை ஏற்று நடப்பதா அல்லது விடுவதா என பிள்ளைதான் தீர்மானிக்கும். அங்கே ஒரு தேர்வுக்கு இடமுண்டு. முதலாளி-தொழிலாளி இடையிலான உறவு ஒரு நிர்வாகமுறைமை. அங்கு முதலாளிக்கு தான் பணம் கொடுக்கும் தொழிலாளிக்கான வேலையைத் தீர்மானிப்பதில் அவனுக்கு உரிமையுண்டு. தொழிலாளியின் கூலியை அவன் பணம் கொடுத்து தனது வேலைகளைச் செய்வதற்காகவே வாங்குகின்றான். இங்கு கூட தொழிலாளியின் உரிமைகளைப் பேனவென பலசட்டதிட்டங்கள் நடைமுறையிலுள்ளன. இங்கும் தொழிலாளி தனது விருப்பு வெறுப்புக்கேற்றவாறு தனது முதலாளியுடனான உறவைப்பேணுவதில் அல்லது முறிப்பதில் அவனுக்கு பலவழிகள் உண்டு. ஆனால் இந்த ஆண் பெண் உறவில் தனியே எங்கள் மூதாதையர் (ஒரு சில பத்து தலைமுறையாக) பேணிவந்தனர் என்பதற்காக ஒன்றிற்காக மட்டுமே இந்த ஏற்றத்தாழ்வு முறைமை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றது.
kuruvikal wrote.....
ஆண்விடுதலைக்கும் ஆணியத்துக்கும் அதே தொடர்பும் பலமும் இருக்குமே...............
ம்கூம் புரியவேயில்லை. ஆண்விடுதலை......... யாரிடமிருந்து???? உறுமயக்காரர் சிங்களவிடுதலை வேண்டும் என்று கூக்கிரலிடுவதற்கு ஒப்பாயுள்ளது. தமிழர் விடுதலை என்று நம்மவர் கேட்டால், சிங்களவர் தமிழர் எங்கே அடக்கப்படுகின்றார்கள் என்று கேட்பதுண்டு. அடக்குபவன் ஒருபோதும் தான் அடக்குமுறையாளன் என்று ஒத்துக்கொள்ள முன்வருவதில்லை. அப்படி வந்திருந்தால் மனித வரலாற்றில் எத்தனையோ போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் சிங்களவர்களி;ல் எத்தனைபேர் இன்று தமிழன் அடக்கப்படுகின்றான் என்று ஒத்துக்கொள்வான் என எண்ணுகின்றீர்கள். சிங்களவர் தலைநகர் கொழும்பில் தமிழன் கோட்டைகட்டி கொடிபறக்கவிடுகின்றளவிற்கு சிங்களவன் தமிழனை அனுமதித்திருக்கும்போது தமிழனுக்கு எங்கே பிரச்சணை இருக்கின்றது என்று சிங்களவன் கேட்பதில் நியாயமிருப்பதுபோல் தென்படுகின்றதா? நீண்ட பெரும்போரின் பின் 90 றின் நடுப்பகுதியில்தான் ஒருசில சிங்களத்தலைமைகள் தமிழனுக்கு பிரச்சனையுண்டு என்றே ஒத்துக்கொண்டன. நாம் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும்போது அதற்காக நாம் என்னமாய் போராடுகின்றோம். அதேநேரம் இன்னொருவர் எங்களால் அடக்கப்படுகின்றோம் என்று குழறி அழும்போது அதனை காதில்கூட போட்டுக்கொள்ள நாம் தயாரில்லை. பெண்களை ஆண்கள் அடக்குவதில்லை என்று பெண்கள்தான் சொல்லவேண்டும். அப்படியான சூழ்நிலை ஆண்களால் உருவாக்கப்படவேண்டும். சிங்களவனால் தான் அடக்கப்படவில்லை என்று தமிழன் சொல்லவேண்டும். அப்படியான நிலையை சிங்களவன் உருவாக்கவேண்டும். அதைவிடுத்து நாங்கள் தமிழரை அடக்குவதில்லை என்று அமெரிக்கா தொடக்கம் ஐ.நா சபைவரை சிங்களவன் கூச்சலிடுவதால் தமிழர் சிக்கல் தீர்ந்துவிடப்போவதில்லை. சிங்களவனையும் ஒருவரும் நம்பிவிடப்போவதில்லை. அது போலத்தான் பெண்கள் தங்கள்வாயால் தாங்கள் ஆண்களால் அடிமைக்குள்ளாக்கப்படவில்லை என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஆண்கள் உருவாக்கவேண்டும். அதைவிடுத்து ஜேஆர்கள் சந்திரிகாக்கள் போல் காலம்காலமாக கூக்கிரலிட்டுகொண்டு உலகமெங்கும் திரிவதனால் எந்த பயனும் கிட்டிவிடப்போவதில்லை.
இப்படிப்பார்த்தால்.. பெற்றோருக்கு பிள்ளைகள் அடிமையா? முதலாளிக்குத் தொழிலாளி அடிமையா?
இங்கு சொல்லப்பட்டிருக்கும் 'அடிமைத்தனத்திற்கும்' ஆண்-பெண் இடையிலான ஏற்றத்தாழ்வு வாழ்வுமுறைக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. தாய் பிள்ளை 'அடிமைத்தனத்தில்' இரண்டுபேருக்கும் இடையில் அறிவு, அனுபவம், வயது என பல விடயங்களில் வேறுபாடு உள்ளது. அத்துடன் அந்தப்பிள்ளை வளர்ந்து ஒரு வயதை அடையும் மட்டும்தான் இந்த வழிகாட்டல்கள் இருக்கும். அதன்பின்னர் பெற்றோரின் கட்டளைகளை ஏற்று நடப்பதா அல்லது விடுவதா என பிள்ளைதான் தீர்மானிக்கும். அங்கே ஒரு தேர்வுக்கு இடமுண்டு. முதலாளி-தொழிலாளி இடையிலான உறவு ஒரு நிர்வாகமுறைமை. அங்கு முதலாளிக்கு தான் பணம் கொடுக்கும் தொழிலாளிக்கான வேலையைத் தீர்மானிப்பதில் அவனுக்கு உரிமையுண்டு. தொழிலாளியின் கூலியை அவன் பணம் கொடுத்து தனது வேலைகளைச் செய்வதற்காகவே வாங்குகின்றான். இங்கு கூட தொழிலாளியின் உரிமைகளைப் பேனவென பலசட்டதிட்டங்கள் நடைமுறையிலுள்ளன. இங்கும் தொழிலாளி தனது விருப்பு வெறுப்புக்கேற்றவாறு தனது முதலாளியுடனான உறவைப்பேணுவதில் அல்லது முறிப்பதில் அவனுக்கு பலவழிகள் உண்டு. ஆனால் இந்த ஆண் பெண் உறவில் தனியே எங்கள் மூதாதையர் (ஒரு சில பத்து தலைமுறையாக) பேணிவந்தனர் என்பதற்காக ஒன்றிற்காக மட்டுமே இந்த ஏற்றத்தாழ்வு முறைமை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றது.
kuruvikal wrote.....
ஆண்விடுதலைக்கும் ஆணியத்துக்கும் அதே தொடர்பும் பலமும் இருக்குமே...............
ம்கூம் புரியவேயில்லை. ஆண்விடுதலை......... யாரிடமிருந்து???? உறுமயக்காரர் சிங்களவிடுதலை வேண்டும் என்று கூக்கிரலிடுவதற்கு ஒப்பாயுள்ளது. தமிழர் விடுதலை என்று நம்மவர் கேட்டால், சிங்களவர் தமிழர் எங்கே அடக்கப்படுகின்றார்கள் என்று கேட்பதுண்டு. அடக்குபவன் ஒருபோதும் தான் அடக்குமுறையாளன் என்று ஒத்துக்கொள்ள முன்வருவதில்லை. அப்படி வந்திருந்தால் மனித வரலாற்றில் எத்தனையோ போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் சிங்களவர்களி;ல் எத்தனைபேர் இன்று தமிழன் அடக்கப்படுகின்றான் என்று ஒத்துக்கொள்வான் என எண்ணுகின்றீர்கள். சிங்களவர் தலைநகர் கொழும்பில் தமிழன் கோட்டைகட்டி கொடிபறக்கவிடுகின்றளவிற்கு சிங்களவன் தமிழனை அனுமதித்திருக்கும்போது தமிழனுக்கு எங்கே பிரச்சணை இருக்கின்றது என்று சிங்களவன் கேட்பதில் நியாயமிருப்பதுபோல் தென்படுகின்றதா? நீண்ட பெரும்போரின் பின் 90 றின் நடுப்பகுதியில்தான் ஒருசில சிங்களத்தலைமைகள் தமிழனுக்கு பிரச்சனையுண்டு என்றே ஒத்துக்கொண்டன. நாம் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும்போது அதற்காக நாம் என்னமாய் போராடுகின்றோம். அதேநேரம் இன்னொருவர் எங்களால் அடக்கப்படுகின்றோம் என்று குழறி அழும்போது அதனை காதில்கூட போட்டுக்கொள்ள நாம் தயாரில்லை. பெண்களை ஆண்கள் அடக்குவதில்லை என்று பெண்கள்தான் சொல்லவேண்டும். அப்படியான சூழ்நிலை ஆண்களால் உருவாக்கப்படவேண்டும். சிங்களவனால் தான் அடக்கப்படவில்லை என்று தமிழன் சொல்லவேண்டும். அப்படியான நிலையை சிங்களவன் உருவாக்கவேண்டும். அதைவிடுத்து நாங்கள் தமிழரை அடக்குவதில்லை என்று அமெரிக்கா தொடக்கம் ஐ.நா சபைவரை சிங்களவன் கூச்சலிடுவதால் தமிழர் சிக்கல் தீர்ந்துவிடப்போவதில்லை. சிங்களவனையும் ஒருவரும் நம்பிவிடப்போவதில்லை. அது போலத்தான் பெண்கள் தங்கள்வாயால் தாங்கள் ஆண்களால் அடிமைக்குள்ளாக்கப்படவில்லை என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஆண்கள் உருவாக்கவேண்டும். அதைவிடுத்து ஜேஆர்கள் சந்திரிகாக்கள் போல் காலம்காலமாக கூக்கிரலிட்டுகொண்டு உலகமெங்கும் திரிவதனால் எந்த பயனும் கிட்டிவிடப்போவதில்லை.

