12-14-2005, 07:35 PM
இந்த முறை கீழ் வீட்டில் வசிக்கும் அந்த இரண்டு இளைஞர்களைபற்றியும் பார்ப்போம்
கதவை திறந்து உள்ளே நுளைந்த சிறி சிவாடேய் எனக்கு ஒரு கடிமொண்டு வந்திருக்கு இதென்ணெண்டு ஒருக்கா வாசியடா என்று ஒரு கடிதத்தை சிவாவிடம் நீட்டினான்
படம்பார்த்து கொண்டிருந்த சிவா. இவனொருத்தன் பெட்டிக்கை போடுற விளம்பரத்தையெல்லாம் தூக்கியந்து படி படியெண்டு தொல்லைஅதுகளை வேறை சேத்து வைச்சு வீட்டுக்கை கடதாசி சேந்து போச்சு அடசீ இதுவும் விளம்பரம்:தானடா கொண்டு போய் குப்பையிலை போடு. என்று அந்த கடதாசியை எறிந்தான்
அட ஏதோ படிக்கிறனெண்டு ஒரு கொப்பியை தூக்கி கொண்டு திரியிறாய் பிரெஞ்சு தெரிஞ்சிருக்குமெண்டு கேட்டன்.உன்னை மாதிரி நானும் அண்ணன் கூப்பிட்டு விட்டிருந்தா பாசை படிக்க போயிருப்பன் நான் கடன் பட்டு வந்திட்டதாலை..........................என்று சிறி தொடங்க
அடடா தொடங்கிட்டான் சோக கதை சொல்ல நிப்பாட்டு அது சரி மேலை ரவியருக்கு மனிசி வந்திட்டுது தெரியுமோ? உனக்கு சொன்னவனோ ? நான் இரண்டு மூண்டுதரம் கண்டனான் தனக்கு ஏற்ற மாதிரித்தான் தேடிப்பிடிச்சிருக்கிறான்.சரியான திமிர்அவாக்கும். முதல்நாள் கண்டு வணக்கம் சொன்னன் பதிலுக்கு ஒரு வணக்கம் ஊகும் சரி ஒரு சிரிப்பு அதுகூட இல்லை நீ கண்டனியோ ஆளை ?
ஓ நான் பின்நேரத்திலை வேலையாலை வரேக்கை காணுறனான் படிக்க பேறவா போலை ஆனால் நான் சிரிச்சா தானும் சிரிச்சிட்;டு போறவா ஆனால் நான் இன்னும் கதைச்சது கிடையாது. நீ வணக்ம் சொன்னதெண்டுறாய் உன்ரை கோலத்தை பாத்ததும் அது பயந்திருக்கும் அதுதான் கதைக்கேல்லை போலை. நீ முதல் உந்த தலைமயிரை தாடியை வெட்டி மனிசர் மாதிரி திரியெண்டு எத்தினை தரம் சொன்னனான் கேட்டாதானே நீ .
எட சிறி நிப்பாட்டு அது என்ன நான் தண்ணிஊத்தியா வழக்கிறன் தானா வளருது அதைவிடு அவாவுக்கு ஒரு நாளைக்கு இருக்கு ஒருநாளைக்கு தனிய இனி லிப்ற்க்கை அம்பிடட்டும் என்ன செய்யிறணெண்டுபார்
சரி சிவா ஏன் ஊர்வம்பை விலைக்கு வாங்கிறாய் அவன் ரவி வேறை அடையார் கட்டு கோஸ்ரியளோடை திரியிறவன் மனிசி இப்பதானே வந்தது இனி போக போக தானே அவனின்ரை விழையாட்டுகள் தெரியும் யாரோ பாவம் மாட்டு பட்டிட்டிது. சரி நீ எழும்பு இண்டைக்கு உன்ரை சமையல் நாள் இந்தா சுறா மீன் வாங்கியந்தனான் எழும்பி சமை என்றவாறு சிறி குளியலறையில் நுளைந்தான்.
ரவியின் வீட்டில் ஆங்கில பாடலின் இசை உச்சத்தில் ஒலித்துகொண்டிருக்க இiளுஞர் யுவதிகள் தங்களிற்கு விரும்பிய மதுவை உள்ளே இறக்கியபடிஆட்டம் பாட்டம் என்று பாட்டி தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. சாந்தி ஒரு கிளாசில் கொஞ்சம் கொக்கா கோலாவை கையில் பிடித்தபடி இவற்றை புதுமையாக பார்த்து கொண்டிருந்தாள்.
அவர்கள் மாறி மாறி வெளியே பல்கணியில் போய்நின்று புகை பிடித்து கொண்டு நின்றவர்கள் போதை ஏற ஏற உள்ளே வந்திருந்து ஊதி தள்ள தொடங்கினார்கள்.ஒருவன் ஒரு சிறு பொலித்தீன் ihயிலிருந்து எதையோ எடுத்து சுடாக்கி சிகரட்டில் போட்டு எல்லாருக்கும் குடுத்துகொண்டிருந்தான்.
அப்போது ஒருவன் மேசையில் வைத்து விட்டு போன ஒரு சிறு பொலித்தீன் பையை சாந்தி மெதுவாக எடுத்து பார்த்தாள். அதில் சிறிதளவு காய்ந்த கஞ்சா இருந்தது.சாந்தி கஞ்சா பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறாள்.
அதனால் இது கஞ்சாவாக தான் இருக்க வேண்டும் எண்று முடிவெடுத்தாள்.அட கடவுளே இந்த பழக்கம் வேறை இவருக்கு இருக்கா எண்று நினைத்தவள் மேலும் அங்கிருக்க பிடிக்காமல் அறைக்குள் போக நினைத்து எழுந்தவளை தங்களுடன் ஆடதான் எழுந்தாள் என நினைத்த ஒருவன் சாந்தியின் கையை பிடித்து மறு கையை சாந்தியின்இடையில் பிடிக்க அவள் அவனை திமிறிய படி தள்ளிவிட ஏற்கனவே போதையில் தள்ளாடியபடி நின்றவன் அப்படியே மல்லாந்து மேசையில் விழ சாந்தி அறைக்குள் ஓடி விட்டாள்.
இதை பார்த்த ரவி ஆவேசமாய் கதவை தள்ளியபடி அறையுள் நுளைந்தவன் ஏன்டி நாயே உனக்கெவ்வளவு திமிர் அவனை ஏனடி தள்ளினனி எண்று கத்தியவாறு சாந்தியை மாறி மாறி அறைந்தான்.
இதனை சற்றும் எதிர் பார்க்காத சாந்தி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் அடிப்பதை தடுக்ககூட முடியாமல் நிற்க அவனது நண்பர்கள் வந்து ரவியை வெளியே இழுத்து கொண்டு போய்விட்டார்கள்.
சாந்திக்கு அப்போ அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய தெரியவில்லை ரவியா இப்படி தன்னை அடித்தான் என்று அவளால் நினைத்து பார்க்கமுடியவில்லை சாதாரணமாதான் அவனை தள்ளி விட்டனான் அவன் போதையிலை நிண்டவன் விழுந்திட்டான். அதற்கு இப்படியா என நினைத்தவள் தலையணையில் முகத்தை புதைத்தபடி அழுது கொண்டிருக்க ரவியும் மற்றவர்களும் வீட்டிலிருந்து வெளியேறி விட்டனர்.
எவ்வளவு நேரம் அழுதாள்: என்று தெரியவில்லை அப்படியே நித்திரையாகி விட்டாள்
பிற குறிப்பு: பிரான்சில் அடையார் என்றால் பிரான்சில் வசிக்கும் அல்ஜீரிய இனத்தவரை குறிக்கும்
கட்டைஎன்றால் ஒருவித போதைப் பொருள் பார்த்தால் மரகட்டை போல இருப்பதால் அதனை கட்டை என்பார்கள் எம்மவர்
கதவை திறந்து உள்ளே நுளைந்த சிறி சிவாடேய் எனக்கு ஒரு கடிமொண்டு வந்திருக்கு இதென்ணெண்டு ஒருக்கா வாசியடா என்று ஒரு கடிதத்தை சிவாவிடம் நீட்டினான்
படம்பார்த்து கொண்டிருந்த சிவா. இவனொருத்தன் பெட்டிக்கை போடுற விளம்பரத்தையெல்லாம் தூக்கியந்து படி படியெண்டு தொல்லைஅதுகளை வேறை சேத்து வைச்சு வீட்டுக்கை கடதாசி சேந்து போச்சு அடசீ இதுவும் விளம்பரம்:தானடா கொண்டு போய் குப்பையிலை போடு. என்று அந்த கடதாசியை எறிந்தான்
அட ஏதோ படிக்கிறனெண்டு ஒரு கொப்பியை தூக்கி கொண்டு திரியிறாய் பிரெஞ்சு தெரிஞ்சிருக்குமெண்டு கேட்டன்.உன்னை மாதிரி நானும் அண்ணன் கூப்பிட்டு விட்டிருந்தா பாசை படிக்க போயிருப்பன் நான் கடன் பட்டு வந்திட்டதாலை..........................என்று சிறி தொடங்க
அடடா தொடங்கிட்டான் சோக கதை சொல்ல நிப்பாட்டு அது சரி மேலை ரவியருக்கு மனிசி வந்திட்டுது தெரியுமோ? உனக்கு சொன்னவனோ ? நான் இரண்டு மூண்டுதரம் கண்டனான் தனக்கு ஏற்ற மாதிரித்தான் தேடிப்பிடிச்சிருக்கிறான்.சரியான திமிர்அவாக்கும். முதல்நாள் கண்டு வணக்கம் சொன்னன் பதிலுக்கு ஒரு வணக்கம் ஊகும் சரி ஒரு சிரிப்பு அதுகூட இல்லை நீ கண்டனியோ ஆளை ?
ஓ நான் பின்நேரத்திலை வேலையாலை வரேக்கை காணுறனான் படிக்க பேறவா போலை ஆனால் நான் சிரிச்சா தானும் சிரிச்சிட்;டு போறவா ஆனால் நான் இன்னும் கதைச்சது கிடையாது. நீ வணக்ம் சொன்னதெண்டுறாய் உன்ரை கோலத்தை பாத்ததும் அது பயந்திருக்கும் அதுதான் கதைக்கேல்லை போலை. நீ முதல் உந்த தலைமயிரை தாடியை வெட்டி மனிசர் மாதிரி திரியெண்டு எத்தினை தரம் சொன்னனான் கேட்டாதானே நீ .
எட சிறி நிப்பாட்டு அது என்ன நான் தண்ணிஊத்தியா வழக்கிறன் தானா வளருது அதைவிடு அவாவுக்கு ஒரு நாளைக்கு இருக்கு ஒருநாளைக்கு தனிய இனி லிப்ற்க்கை அம்பிடட்டும் என்ன செய்யிறணெண்டுபார்
சரி சிவா ஏன் ஊர்வம்பை விலைக்கு வாங்கிறாய் அவன் ரவி வேறை அடையார் கட்டு கோஸ்ரியளோடை திரியிறவன் மனிசி இப்பதானே வந்தது இனி போக போக தானே அவனின்ரை விழையாட்டுகள் தெரியும் யாரோ பாவம் மாட்டு பட்டிட்டிது. சரி நீ எழும்பு இண்டைக்கு உன்ரை சமையல் நாள் இந்தா சுறா மீன் வாங்கியந்தனான் எழும்பி சமை என்றவாறு சிறி குளியலறையில் நுளைந்தான்.
ரவியின் வீட்டில் ஆங்கில பாடலின் இசை உச்சத்தில் ஒலித்துகொண்டிருக்க இiளுஞர் யுவதிகள் தங்களிற்கு விரும்பிய மதுவை உள்ளே இறக்கியபடிஆட்டம் பாட்டம் என்று பாட்டி தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. சாந்தி ஒரு கிளாசில் கொஞ்சம் கொக்கா கோலாவை கையில் பிடித்தபடி இவற்றை புதுமையாக பார்த்து கொண்டிருந்தாள்.
அவர்கள் மாறி மாறி வெளியே பல்கணியில் போய்நின்று புகை பிடித்து கொண்டு நின்றவர்கள் போதை ஏற ஏற உள்ளே வந்திருந்து ஊதி தள்ள தொடங்கினார்கள்.ஒருவன் ஒரு சிறு பொலித்தீன் ihயிலிருந்து எதையோ எடுத்து சுடாக்கி சிகரட்டில் போட்டு எல்லாருக்கும் குடுத்துகொண்டிருந்தான்.
அப்போது ஒருவன் மேசையில் வைத்து விட்டு போன ஒரு சிறு பொலித்தீன் பையை சாந்தி மெதுவாக எடுத்து பார்த்தாள். அதில் சிறிதளவு காய்ந்த கஞ்சா இருந்தது.சாந்தி கஞ்சா பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறாள்.
அதனால் இது கஞ்சாவாக தான் இருக்க வேண்டும் எண்று முடிவெடுத்தாள்.அட கடவுளே இந்த பழக்கம் வேறை இவருக்கு இருக்கா எண்று நினைத்தவள் மேலும் அங்கிருக்க பிடிக்காமல் அறைக்குள் போக நினைத்து எழுந்தவளை தங்களுடன் ஆடதான் எழுந்தாள் என நினைத்த ஒருவன் சாந்தியின் கையை பிடித்து மறு கையை சாந்தியின்இடையில் பிடிக்க அவள் அவனை திமிறிய படி தள்ளிவிட ஏற்கனவே போதையில் தள்ளாடியபடி நின்றவன் அப்படியே மல்லாந்து மேசையில் விழ சாந்தி அறைக்குள் ஓடி விட்டாள்.
இதை பார்த்த ரவி ஆவேசமாய் கதவை தள்ளியபடி அறையுள் நுளைந்தவன் ஏன்டி நாயே உனக்கெவ்வளவு திமிர் அவனை ஏனடி தள்ளினனி எண்று கத்தியவாறு சாந்தியை மாறி மாறி அறைந்தான்.
இதனை சற்றும் எதிர் பார்க்காத சாந்தி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் அடிப்பதை தடுக்ககூட முடியாமல் நிற்க அவனது நண்பர்கள் வந்து ரவியை வெளியே இழுத்து கொண்டு போய்விட்டார்கள்.
சாந்திக்கு அப்போ அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய தெரியவில்லை ரவியா இப்படி தன்னை அடித்தான் என்று அவளால் நினைத்து பார்க்கமுடியவில்லை சாதாரணமாதான் அவனை தள்ளி விட்டனான் அவன் போதையிலை நிண்டவன் விழுந்திட்டான். அதற்கு இப்படியா என நினைத்தவள் தலையணையில் முகத்தை புதைத்தபடி அழுது கொண்டிருக்க ரவியும் மற்றவர்களும் வீட்டிலிருந்து வெளியேறி விட்டனர்.
எவ்வளவு நேரம் அழுதாள்: என்று தெரியவில்லை அப்படியே நித்திரையாகி விட்டாள்
பிற குறிப்பு: பிரான்சில் அடையார் என்றால் பிரான்சில் வசிக்கும் அல்ஜீரிய இனத்தவரை குறிக்கும்
கட்டைஎன்றால் ஒருவித போதைப் பொருள் பார்த்தால் மரகட்டை போல இருப்பதால் அதனை கட்டை என்பார்கள் எம்மவர்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

