12-12-2005, 04:06 PM
முகத்தார், சிறு வயது பிள்ளைகளை அவர்கள் கல்வி கற்கும் காலத்தில் வீட்டில் வேலைக்கு வைப்பது தவறு என்பதை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். முன்பு மலையகத்திலிருந்து வந்து சிறு வந்த சிறு பிள்ளைகள் யாழிலும் கொழும்பிலும் வீட்டு வேலைகள் செய்வதை பார்த்துள்ளேன். அவர்களை பார்ப்பதற்காக எப்போதாவது ஒரு முறை வரும் தந்தையை பார்த்தவுடன் வீட்ட போகலாம் என்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள் ஆனால் அவரோ காசை வாங்கி கொண்டு போய் விடுவார். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் அவர்கள் வீடு செல்ல விரும்பினாலும் அந்த சமயம் அதிகம் வேலை இருக்கின்றது என்று சொல்லி வேலைக்கு வைத்திருப்பவர்கள் வீடு செல்ல முடியாமல் தடுத்து விடுவார்கள். இது போல வீட்டு வேலை செய்பவர்களின் நிலைமையை சித்தரிக்கும் நாடகங்கள் சிலவற்றை ரூபவாகினியிலும் பார்த்துள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


