12-12-2005, 05:29 AM
<b>திருமலையில் முஸ்லிம் வர்த்தகர் சுட்டுக் கொலை</b>
[திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2005, 09:21 ஈழம்]
திருகோணமலை மாவட்டம் கோபாலபுரத்தில் முஸ்லிம் வர்த்தகரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந் தெரியாத நபர்களினால் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
திருகோணமலை - புல்மோட்டை வீதி கோபாலபுரம் 10 ஆம் கட்டையில் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் வர்த்தகரான எம்.ரபாய்டின் (வயது 52) என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே மூதூர் பாலைநகரில் நடந்த மற்றுமொரு சம்பவத்தில் கத்தி வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
கொல்லப்பட்ட நபர் பிறிதொரு இடத்தில் கொல்லப்பட்டு அந்த இடத்தில் போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களிடையே வன்முறைகளை தூண்டும் குழுவினரின் பின்னணியில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.
நேற்று மட்டும் வன்முறைக் கும்பல்களினால் 3 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.
<i><b>தகவல் மூலம் - புதினம்</b></i>
[திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2005, 09:21 ஈழம்]
திருகோணமலை மாவட்டம் கோபாலபுரத்தில் முஸ்லிம் வர்த்தகரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந் தெரியாத நபர்களினால் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
திருகோணமலை - புல்மோட்டை வீதி கோபாலபுரம் 10 ஆம் கட்டையில் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் வர்த்தகரான எம்.ரபாய்டின் (வயது 52) என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே மூதூர் பாலைநகரில் நடந்த மற்றுமொரு சம்பவத்தில் கத்தி வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
கொல்லப்பட்ட நபர் பிறிதொரு இடத்தில் கொல்லப்பட்டு அந்த இடத்தில் போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களிடையே வன்முறைகளை தூண்டும் குழுவினரின் பின்னணியில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.
நேற்று மட்டும் வன்முறைக் கும்பல்களினால் 3 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.
<i><b>தகவல் மூலம் - புதினம்</b></i>
"
"
"

