12-11-2005, 01:48 PM
<b>பேரினவாதிகளின் உட்பிரிவின் சதியே அண்மைக் காலச் சம்பவங்களாகும்: <i>மட். அரசியல்துறை </i></b>
இனவாதச் சக்திகளால் வழி நடத்தப்படும் ஆட்சியாளர்களின் புறக்கணிப்புக்களையும், எம்மைப் பிரித்தாள்வதற்காக அவர்கள் மேற்கொண்டுவரும் சூழ்ச்சிகளையும் மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளதால் பேரினவாதிகளின் உட்பிரிவினைச் சதி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் இந்தச் சதி நாடகத்தின் அம்சங்களாகும். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு அன்பான அவசர வேண்டுகோள்.
அடக்குமுறையாலும் இயற்கையின் அனர்த்தங்களாலும் மிகவும் நலிந்துநிற்கும் நமது மாவட்டங்களின் அடிப்படைத் தலையாய பிரச்சினைகள் அநேகம் உள்ளன. போர் ஓய்ந்து நான்கு வருடங்களாகியும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. எம்மை இரக்கமின்றித் தாக்கிய சுனாமிக்கான நிவாரண நிதிகளைப் பெறுவதிலும் பல முட்டுக்கட்டைகள். நிதியை கொடையாளிகள் வழங்கினாலும் அதைப் பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள இனவாத சக்திகள் தடையாக இருக்கின்றார்கள்.
இனவாத சக்திகளால் வழி நடத்தப்படும் ஆட்சியாளர்களின் புறக்கணிப்புக்களையும் எம்மைப் பிரித்தாள்வதற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகளையும் மக்கள் உணரத் தலைப்பட்டு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒன்றுபட்டு தங்கள் பொதுவான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சித்தபொழுதில், அபிவிருத்தி மற்றும் அரசியல் காலனித்துவம் சார்ந்த தன் சூழ்ச்சிகள் வெளிப்பட்டு குற்றச்சாட்டுக்கள் தம்மைநோக்கித் திரும்பவிருப்பதை ஊகித்துவிட்ட பேரினவாதிகள் உட்பிரிவினைச் சதியொன்றைச் செய்திருக்கிறார்கள்.
சமூக ரீதியான சங்கடங்களை ஏற்படுத்தும் வகையிலான வதந்திகளைப் பரப்புதல், ஒருதரப்பினர்மீது பழிபோடத்தக்கதான படுகொலைகளைப் புரிதல், இளைஞர்களைத் தூண்டிவிடத்தக்கதான துண்டுப்பிரசுரங்களை வெளியிடுதல், பாதுகாப்புத் தருகிறோம் என்ற போர்வையில் வதந்திகளைப் பரப்புதல் என்பன அவர்களின் சதி நாடகத்தின் அம்சங்களாகும்.
மருதமுனையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் கடத்தப்பட்டதாகவும் அதனால் அந்த வழியாகப் போகவேண்டாம் என்றும் சிறப்பு அதிரடிப்படையினர் வதந்திகளைப் பரப்பியதால் பெரும் பதட்டமும் கொந்தளிப்பும் ஏற்படவிருந்தது. ஆனால், தீர விசாரித்த போது அது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்தி என்பது தெரியவந்திருக்கிறது. இவ்வாறான வதந்திகளை இருதரப்பிலும் உலவவிட்டு அனுதாபம் தெரிவிப்பதுபோல ஆத்திரத்தைத் தூண்டிவிடும் படைப்புனாய்வு நடவடிக்கை அம்பலமாகியதிலிருந்து இத்தனை பிரச்சனைகளுக்குமான பின்னணிகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஒன்றாக வாழ்ந்தவர்களும் இனிமேலும் ஒன்றாகவே வாழப்;போகின்றவர்களுமான எமது தலைமுறைகளைச் சந்தேகத்தின் பிடியில் விழவிடாது பாதுகாக்கவேண்டியது அனைத்து மதத் தலைவர்களினதும், சமூகத்தின் முன்னோடிகளினதும் கடமையாகும். கடந்து வந்துவிட்ட இருண்டநாட்களை நோக்கி எமது சமூகங்களை இட்டுச்செல்ல விரும்புபவர்கள் யாரென்றால், முந்தைய கலவரங்களின் போது தங்களின் கைப்பைகளை நிரப்பிக் கொண்டவர்களே. குறுகிய அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களுக்காக தலைமுறை தலைமுறையாகப் பாதிப்பைத் தரக்கூடிய கசப்புணர்வுகளுக்குள் நமது பிள்ளைகளை யாரும் இட்டுச்செல்வதை, அது யாராக இருந்தாலும், அவர்களைத் தார்மீக சக்திகள் இணைந்து முறியடிக்கவேண்டும்.
வரலாற்றையும், தரைத்தோற்ற மற்றும் குடிப்பரம்பல் யதார்த்தங்களையும், பொருளாதார மற்றும் மொழி சார்ந்த பின்னணிகளையும் கருத்தில் கொள்ளாது சாத்திய அசாத்தியங்களையும் ஆராயாது பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் வேற்றுமைக் கருத்துக்களை முன்வைப்போரின் பின்புலங்களை நாம் இனங்காணவேண்டும்.
அந்நிய சக்திகளின் தூண்டுதல்களுக்கு மத்தியிலும் மோசமான விளைவுகளை ஏற்பட்டுவிடாது தடுத்துநின்ற தார்மீக சக்திகள் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். இது வரைக்கும் தெளிவான முடிவுகளிலும் நிலைப்பாட்டிலும் உறுதிகாட்டிய பள்ளிவாசல் சம்மேளனத்தின் உறுதியைப் பாராட்டுகின்றோம். வடகிழக்கிலுள்ள தமிழ்பேசுகின்ற அனைவருக்குமான பன்முகப்பட்ட விடுதலைக்கான போராட்டமொன்றையே எமது தேசியத் தலைவர் முன்னெடுத்து வருகிறார்.
தீர்விற்கான எமது அனைத்து முயல்வுகளும் இங்கு வாழும் அனைவரினதும் அபிலாசைகளையும் தனித்துவங்களையும் ஆதங்கங்கங்களையும் அடியொற்றியதாகவே இருக்கும் என்பதை அவர் தெட்டத்தெளிவாகத் தெரிவித்துமிருக்கிறார். ஒருமித்த முயல்விற்கான இந்தப் பொழுதில் சந்தேகங்களைக் களையும் விதமான மனம் திறந்த தொடர்பாடல்களே தேவை. ஒற்றுமைக்கெதிரான சக்திகளின் சதிகளைச் சத்திய சோதனையென எதிர்கொள்வோம். சுதந்திரமான முன்னேற்றம் பெற நாம் அனைவரும் கை கோர்த்து அணிதிரள்வோம்.
<b><i>அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
மட்டக்களப்பு மாவட்டம். </i></b>
<b>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</b>
இனவாதச் சக்திகளால் வழி நடத்தப்படும் ஆட்சியாளர்களின் புறக்கணிப்புக்களையும், எம்மைப் பிரித்தாள்வதற்காக அவர்கள் மேற்கொண்டுவரும் சூழ்ச்சிகளையும் மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளதால் பேரினவாதிகளின் உட்பிரிவினைச் சதி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் இந்தச் சதி நாடகத்தின் அம்சங்களாகும். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு அன்பான அவசர வேண்டுகோள்.
அடக்குமுறையாலும் இயற்கையின் அனர்த்தங்களாலும் மிகவும் நலிந்துநிற்கும் நமது மாவட்டங்களின் அடிப்படைத் தலையாய பிரச்சினைகள் அநேகம் உள்ளன. போர் ஓய்ந்து நான்கு வருடங்களாகியும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. எம்மை இரக்கமின்றித் தாக்கிய சுனாமிக்கான நிவாரண நிதிகளைப் பெறுவதிலும் பல முட்டுக்கட்டைகள். நிதியை கொடையாளிகள் வழங்கினாலும் அதைப் பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள இனவாத சக்திகள் தடையாக இருக்கின்றார்கள்.
இனவாத சக்திகளால் வழி நடத்தப்படும் ஆட்சியாளர்களின் புறக்கணிப்புக்களையும் எம்மைப் பிரித்தாள்வதற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகளையும் மக்கள் உணரத் தலைப்பட்டு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒன்றுபட்டு தங்கள் பொதுவான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சித்தபொழுதில், அபிவிருத்தி மற்றும் அரசியல் காலனித்துவம் சார்ந்த தன் சூழ்ச்சிகள் வெளிப்பட்டு குற்றச்சாட்டுக்கள் தம்மைநோக்கித் திரும்பவிருப்பதை ஊகித்துவிட்ட பேரினவாதிகள் உட்பிரிவினைச் சதியொன்றைச் செய்திருக்கிறார்கள்.
சமூக ரீதியான சங்கடங்களை ஏற்படுத்தும் வகையிலான வதந்திகளைப் பரப்புதல், ஒருதரப்பினர்மீது பழிபோடத்தக்கதான படுகொலைகளைப் புரிதல், இளைஞர்களைத் தூண்டிவிடத்தக்கதான துண்டுப்பிரசுரங்களை வெளியிடுதல், பாதுகாப்புத் தருகிறோம் என்ற போர்வையில் வதந்திகளைப் பரப்புதல் என்பன அவர்களின் சதி நாடகத்தின் அம்சங்களாகும்.
மருதமுனையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் கடத்தப்பட்டதாகவும் அதனால் அந்த வழியாகப் போகவேண்டாம் என்றும் சிறப்பு அதிரடிப்படையினர் வதந்திகளைப் பரப்பியதால் பெரும் பதட்டமும் கொந்தளிப்பும் ஏற்படவிருந்தது. ஆனால், தீர விசாரித்த போது அது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்தி என்பது தெரியவந்திருக்கிறது. இவ்வாறான வதந்திகளை இருதரப்பிலும் உலவவிட்டு அனுதாபம் தெரிவிப்பதுபோல ஆத்திரத்தைத் தூண்டிவிடும் படைப்புனாய்வு நடவடிக்கை அம்பலமாகியதிலிருந்து இத்தனை பிரச்சனைகளுக்குமான பின்னணிகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஒன்றாக வாழ்ந்தவர்களும் இனிமேலும் ஒன்றாகவே வாழப்;போகின்றவர்களுமான எமது தலைமுறைகளைச் சந்தேகத்தின் பிடியில் விழவிடாது பாதுகாக்கவேண்டியது அனைத்து மதத் தலைவர்களினதும், சமூகத்தின் முன்னோடிகளினதும் கடமையாகும். கடந்து வந்துவிட்ட இருண்டநாட்களை நோக்கி எமது சமூகங்களை இட்டுச்செல்ல விரும்புபவர்கள் யாரென்றால், முந்தைய கலவரங்களின் போது தங்களின் கைப்பைகளை நிரப்பிக் கொண்டவர்களே. குறுகிய அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களுக்காக தலைமுறை தலைமுறையாகப் பாதிப்பைத் தரக்கூடிய கசப்புணர்வுகளுக்குள் நமது பிள்ளைகளை யாரும் இட்டுச்செல்வதை, அது யாராக இருந்தாலும், அவர்களைத் தார்மீக சக்திகள் இணைந்து முறியடிக்கவேண்டும்.
வரலாற்றையும், தரைத்தோற்ற மற்றும் குடிப்பரம்பல் யதார்த்தங்களையும், பொருளாதார மற்றும் மொழி சார்ந்த பின்னணிகளையும் கருத்தில் கொள்ளாது சாத்திய அசாத்தியங்களையும் ஆராயாது பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் வேற்றுமைக் கருத்துக்களை முன்வைப்போரின் பின்புலங்களை நாம் இனங்காணவேண்டும்.
அந்நிய சக்திகளின் தூண்டுதல்களுக்கு மத்தியிலும் மோசமான விளைவுகளை ஏற்பட்டுவிடாது தடுத்துநின்ற தார்மீக சக்திகள் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். இது வரைக்கும் தெளிவான முடிவுகளிலும் நிலைப்பாட்டிலும் உறுதிகாட்டிய பள்ளிவாசல் சம்மேளனத்தின் உறுதியைப் பாராட்டுகின்றோம். வடகிழக்கிலுள்ள தமிழ்பேசுகின்ற அனைவருக்குமான பன்முகப்பட்ட விடுதலைக்கான போராட்டமொன்றையே எமது தேசியத் தலைவர் முன்னெடுத்து வருகிறார்.
தீர்விற்கான எமது அனைத்து முயல்வுகளும் இங்கு வாழும் அனைவரினதும் அபிலாசைகளையும் தனித்துவங்களையும் ஆதங்கங்கங்களையும் அடியொற்றியதாகவே இருக்கும் என்பதை அவர் தெட்டத்தெளிவாகத் தெரிவித்துமிருக்கிறார். ஒருமித்த முயல்விற்கான இந்தப் பொழுதில் சந்தேகங்களைக் களையும் விதமான மனம் திறந்த தொடர்பாடல்களே தேவை. ஒற்றுமைக்கெதிரான சக்திகளின் சதிகளைச் சத்திய சோதனையென எதிர்கொள்வோம். சுதந்திரமான முன்னேற்றம் பெற நாம் அனைவரும் கை கோர்த்து அணிதிரள்வோம்.
<b><i>அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
மட்டக்களப்பு மாவட்டம். </i></b>
<b>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</b>
"
"
"

