12-11-2005, 01:30 PM
<b>மூதூரில் துப்பாக்கிச் சூடு: 1 முஸ்லிம் விவசாயி பலி; 2 பேர் காயம்!! </b>
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முஸ்லிம் விவசாயிகள் மீது இனந் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பாலத்தோப்பூர் கிராமத்திலுள்ள வயல்வெளியொன்றில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் மூவரும் தமது வயல் செய்கைக்காக அங்கு சென்றிருந்த சமயம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து மூதூர் பிரதேசத்தில் பதட்ட நிலை உருவாகியுள்ளது. தோப்பூரிலுள்ள்ள பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கூடியுள்ளனர்.
அந்த பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
<b><i>தகவல் மூலம்- புதினம்</i></b>
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முஸ்லிம் விவசாயிகள் மீது இனந் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பாலத்தோப்பூர் கிராமத்திலுள்ள வயல்வெளியொன்றில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் மூவரும் தமது வயல் செய்கைக்காக அங்கு சென்றிருந்த சமயம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து மூதூர் பிரதேசத்தில் பதட்ட நிலை உருவாகியுள்ளது. தோப்பூரிலுள்ள்ள பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கூடியுள்ளனர்.
அந்த பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
<b><i>தகவல் மூலம்- புதினம்</i></b>
"
"
"

