Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"இருந்தால்" இல்லாமல் ஆனா போது
#11
தமிழினி

Quote:ம் ஒரு பெண் போராளியின் வாழ்வை எழுதியிருக்கிறியள். நல்லாய் தான் இருக்கு. ஆனால் பெண் போராளிகளுக்கு இப்படி எல்லாம் இடர்களா..?? நான் கண்டதில்லை. நல்ல மரியாதையாத்தான் நடத்திறவையைக்கண்டிருக்கிறன். பகிர்வுக்கு நன்றி.

நன்றி அக்கி. நீங்கள் சொல்வது உண்மை தான். போராளிகளை அனைவரும் மரியாதையாக தான் நடத்துகிறார்கள். ஆனால் சில போராளிகளின் குடும்பங்களில் ,ஒரு பெண்ணிடம் இயற்கையிலே இருக்க கூடிய குணங்களை ஒரு போராளியான பின் இருக்காது என நினைக்கிறார்கள். இதை நான் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

அத்துடன் ஆரம்ப காலத்தில் அனைவரும் எம்மவரை மரியாதையாக நடத்தியதாக சரித்திரம் இல்லையே அக்கி


மதன்

Quote:ஒரு பெண் போராளியின் மனதை பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள், நன்றி தூயா. உங்களிடமிருந்து தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.

எனது கண்ணில் பட்ட எழுத்து பிழைகளை சரி செய்துள்ளேன்

எழுத்து பிழைகளை சரி செய்ததிற்கு மிக்க நன்றி மதண்ணா. அரிச்சுவடி படிக்கும் என்னை ஓர் பெரும் எழுத்தாளர் போல பாராட்டுவதுடன் உக்குவிக்கவும் செய்கிறீர்கள். மிக்க நன்றி அண்ணா.


குளகாட்டான்

Quote:துயா உங்கள் கதையில் சொன்னது போல், போராளியான பெண்களை பற்றிய ஊராரின் கருத்துக்களை நான் நேரில் கேட்டுள்ளேன்.ஆரம்ப காலங்களில் இவ்வாறு பேசியவர்கள் தான். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என நினைக்கிறேன்.

வணக்கம் குளம்ஸ் அண்ணா, ஓம் ஆரம்பத்தில் அதிகமானோர் இப்படி தான் இருந்தார்கள். எமைக்காப்பவர்களை ஏளனம் செய்தவர்கள் எத்தனை பேர்?!!! மனித நேயம் அற்றவர்கள், நன்றி உணர்ச்சி இல்லாதவர்கள்..!!

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா.


ரமா

Quote:தூயா கதை நல்லாயிருக்கு. பல பழைய பெண் போராளிகள் இப்போது திருமணம் செய்து வாழ்க்கையில் சந்தோசமாய் இருப்பதை கண்டு இருக்கின்றேன். ஆனாலும் ஒரு சில பெண் போராளிகளுக்கு இப்படியான சங்கடங்கள் நிகழ்வதையும் அறிந்திருக்கின்றேன். ஓரு பெண் போராளியின் உணர்வை மிகவும் அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்.. நன்றி .. தொடருங்கள்

நன்றி ரமா. எமக்காக போராடுபவர்களுக்கு எத்தனை இன்னல்கள். அவற்றை எழுத வேண்டும் என எனக்கு ஆசை...அதன் ஆரம்பம் தான் இக்கதை. பதிலுக்கு மிக்க நன்றி.



முகம்ஸ்

Quote:பெண் போராளியின் கதை மிகவும் மனதை நெருட வைத்து விட்டது தூயா . . .அவர்களும் மனிதர்கள்தானே எவ்வளவற்றை தியாகம் செய்து போகிறார்கள் யாருக்காக.............????? எமது விடிவுக்குத்தானே

அது சரி தான் முகம்ஸ் ஆனால் எத்தனை பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். பிழைகளையும் சுட்டி காட்டுங்கள். நன்றி.


இந்திரஜித்

Quote:நன்றாக இருக்கிறது.நீங்கள் சொன்னது போல் எழுதும் போது பிழைவரும்நானும் அப்படி தான் நான் கதை எழுதுவதே கணனிக்குமுன்பு அமர்ந்தபின்பு தான் கதை பற்றி யோசிக்கவே ஆரம்பிப்பேன் எல்லோசொல்வது போல் உண்மை கதையல்ல நான் எழுதுவது கற்பனை தான் அது போல் உங்கள் கதையும் தொடருங்கள் வாழ்த்துக்கள்

சரியாக சொன்னீர்கள். ஏதாவது ஒரு விடயம் மனதை பாதித்தால் உடனே கணனிக்கு முன் இருந்து எழுத ஆரம்பித்துவிடுவேன். கட கட என்று எழுதி போடுவன்...பிறகு தான் எழுத்து பிழைகளோட மாரடிக்கிறது...

என்னை போலவே இன்னொருவர் என அறியும் போது மிக்க மகிழ்ச்சி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

நன்றி
[b][size=15]
..


Reply


Messages In This Thread
[No subject] - by தூயா - 12-08-2005, 10:48 AM
[No subject] - by அருவி - 12-08-2005, 10:57 AM
[No subject] - by தூயா - 12-08-2005, 01:45 PM
[No subject] - by tamilini - 12-08-2005, 02:53 PM
[No subject] - by Mathan - 12-08-2005, 10:45 PM
[No subject] - by KULAKADDAN - 12-09-2005, 10:00 PM
[No subject] - by RaMa - 12-10-2005, 06:36 AM
[No subject] - by MUGATHTHAR - 12-10-2005, 08:00 AM
[No subject] - by inthirajith - 12-10-2005, 09:19 AM
[No subject] - by தூயா - 12-11-2005, 02:28 AM
[No subject] - by tamilini - 12-11-2005, 12:52 PM
[No subject] - by அனிதா - 12-11-2005, 02:25 PM
[No subject] - by vasisutha - 12-12-2005, 01:42 AM
[No subject] - by Mathan - 12-12-2005, 02:53 AM
[No subject] - by தூயா - 12-17-2005, 01:31 AM
[No subject] - by Snegethy - 12-18-2005, 07:12 AM
[No subject] - by தூயா - 01-01-2006, 11:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)