12-10-2005, 11:42 AM
Eelavan Wrote:இதற்கு <b>தமிழீழக் காதல் </b> என்று எதற்காக பெயர் வைத்தார் என்பது மட்டுமே மோகன் தாஸிடம் கேட்க விரும்பும் கேள்வி.
மற்றும்படி கதையில் சொல்லப்படுபவை யதார்த்தத்தில் நடப்பவை அதற்கு காரண காரியம் ஆராய்வதில் பலனில்லை.
ஈழத்தமிழரை புனிதராகாவோ அசிங்கமாகவோ காட்டாமல் யதார்த்தமான வாழ்வியலூடாக அணுக முயன்றிருப்பதற்குப் பாராட்டுக்கள்
நான் ஒரு படைப்பாளியாக இவரது கதையைப் பார்க்கும் போது
அவருக்குள் தமிழீழத்தின் மேல் ஒரு காதல் அடி மனதில் இருக்கிறது, இருந்திருக்கிறது என்பதை உணர்கிறேன் ஈழவன்.
இது மனித இயல்பு.
நமக்குப் பிடித்த ஒரு திரைப்படத்தின் கதாபாத்திர பெயரை அல்லது இறந்து போன ஒரு உறவினரின் அல்லது ஒரு வீரனின் பெயரை நாம் வைப்பது ஏன்?
நம் அடி மனதில்
அது பற்றிய பொஸடிவ் சிந்தனைகள் இருக்கின்றன.
அது ஒருவருக்கு தெரியாமலே வந்து விடுகின்றன.
அப்படி என்றே கருதுகிறேன்.
Quote:
<img src='http://www.iranian.com/PhotoDay/2002/August/Images/couple.jpg' border='0' alt='user posted image'>
படம் முடிந்த அன்றிரவு
மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன்.
அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,
\"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளைய வர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க.\" சொல்லி விட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.
\"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா?\"
\"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க\" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது.
எங்கள் வீட்டிற்கும் இது ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை.
ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள்.
எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும்.
விரசமேயில்லாத விதத்தில் அந்தக் காதல் வளர்கிறது.
அது வரிகளாகி நிற்கின்றன.
[quote]அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க <b>உங்கட அரசு சம்மதிக்காது</b>.
என்பதிலிருந்து
அவளுக்கும் இந்தியா பற்றிய விளக்கமில்லை என்பது இந்த வார்த்தைகளினூடாக தெரிகிறது.
அது பற்றி கதாநாயகன் கூட அவளுக்கு விளக்க எத்தனிக்கவில்லை.
காதல் தானாகவே வளரட்டும் என்று விட்டுப் பிடித்தாரா?
அல்லது
அவருக்கும் அது பற்றிய விபரம் தெரியவில்லையா?
இருந்த போதும் அந்த கதாபாத்திரங்களின் தன்மை நிலையை புரிந்து கொள்ள இவை வழி வகுக்கிறது.
டை கோட் போட்ட ஆட்டோக்காரராக சித்தரிக்காமல்
யதார்த்தமாக
அது அப்படியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இந்தியாவில்
எவரும் எவரையும் திருமணம் செய்யலாம்.
ஆனால் இந்திய நாட்டு குடியுரிமை தரப்பட மாட்டாது.
இது சட்டப்படி.
ஆனால் இந்தியாவில் வாழும் 95 சதவீதமான இலங்கைத் தமிழர்கள்
வாக்குரிமை
ரேசன் காட்
பாஸ்போட் ( ஒன்றுக்கு மேல........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
வைத்திருக்கிறார்கள்.
லலிதா ஜுவலர்ஸ்
ராஜ் டீவி
இப்படி எத்தனையோ நிறுவனங்கள் சிலோன்காரங்களுடயது.
[quote]ஒரு உண்மை சம்பவம்:-
நான் தமிழ்நாட்டில் இருக்கும் போது ஒரு பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்தேன்.
அதுபற்றி விசாரிக்க போலீஸ் வீடு தேடி வரும்.
போலீஸ் என்னைத் தேடி வந்து விசாரித்த போது
வீட்டிலிருந்தவர்கள் "சார் சிங்கப்பூர் போயிருக்கார்" என்றிருக்கிறார்கள்.
வந்ததும் ஸ்டேசனுக்கு வந்துட்டு போகச் சொல்லுங்க என்று போய் விட்டார்கள்.
நான் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின் போலீஸ் நிலையத்துக்கு போன போது
உங்க ஊரு எது சார் என்று கேட்டார் போலீஸ்காரர்.
நான் "காரைக்குடி தனாவயல்" என்றேன்.
காரைக்குடியில இருந்து <b>தனாவயலுக்கு</b> எத்தனை கிலோ மீட்டர் சார் என்றார்.
நான் ஒரு மதிப்பீடாக சொன்னேன்.
அதுக்கு மேல ஆவுமே என்றார்.
நீங்க மெயின் ரோடு வழியா சொல்றீங்க சார்.
நான் சோட்கட் வழியா கிராமத்துக்குள்ளாற போற தூரத்தை சொன்னேன் என்றேன்.
அதற்கு மேல் பேசாத அவர் சிரித்து விட்டு சொன்னார்.
100 இந்தியன்ல 10 பேருக்கு கூட பாஸ்போட் கிடையாது.
ஆனா ஒரு சிலோன்காரருக்கு 10 இந்திய பாஸ்போட்டாவது இருக்குது சார்.
நான் வந்தப்போ நீங்க சிங்கப்பூர் போயிருந்தீங்க என்றார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் பேசவில்லை.
சார். இந்த பேரில யாருமில்லண்ணு கிழிச்சு போடுறேன் சார்.
நான் தப்பான போலீஸ்காரன் இல்ல சார் என்று தனது நேர்மையை மட்டுமல்ல
எம்மீது இருந்து கருணையையும் வெளிக் காட்டினார்.
இல்லாவிட்டால் அன்று அவரால் நான் உள்ளே தள்ளப்பட்டிருக்கலாம்.

