Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உறங்கா விழி
#1
அன்பே....
ஊர் உறங்கி விட்டது திரை வானம்
தன் உருவத்தை மறைக்க முகிலால் இழுத்து
முக்காடு போட்டுக் கொண்டது-நட்சத்திரங்களை
காவலுக்கு வைத்து விட்டு இரவு கூட உறங்கி விட்டது.
பஞ்சுமெத்தையில் நீ கூட தலைஅணையில்
நன்மதியாக உறங்கிவிட்டாய்.
ஆனால் நான் மட்டும் உறங்கவில்லை-நீ
இமைக்கும் சத்தம் தான் எனக்குக் கேட்கிறது
என் இதயத்துடிப்பு உனக்குக் கேட்கிறதா?
என் மனதை பறித்துக்கொண்டு நீ மட்டும்.
ஊறங்கிவிட்டாய்...
உன் மதிமுகம் காணாமல் என் மனம் தவிக்கிறது.
வெளியே வா கிளியே உன் முகம் கொஞ்சம் காட்டு.
உன்னை காணாமல் என் இமைகளும் விளிகளும் உடன்படிக்கைக்கு
வர அடம்பிடிக்கிறது
இன்றைய என் இருண்ட வாழ்வில் உன்னைக் காணாவிட்டால் இந்த இரவு இனி ஒரு
பகலையே சந்திக்காமல் போய்விடு....
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Messages In This Thread
உறங்கா விழி - by jcdinesh - 12-10-2005, 08:31 AM
[No subject] - by inthirajith - 12-10-2005, 09:46 AM
[No subject] - by sWEEtmICHe - 12-10-2005, 03:52 PM
[No subject] - by jcdinesh - 12-10-2005, 06:14 PM
[No subject] - by suddykgirl - 12-10-2005, 08:15 PM
[No subject] - by கீதா - 12-10-2005, 08:23 PM
[No subject] - by jcdinesh - 12-10-2005, 08:58 PM
[No subject] - by jcdinesh - 12-10-2005, 09:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)