12-09-2005, 07:13 AM
<b>கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளையும் மீளாய்வு செய்ய ஜப்பான் தூதுவரிடம் ஹக்கீம் வலியுறுத்தல் </b>
[வெள்ளிக்கிழமை, 9 டிசெம்பர் 2005, 06:46 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகளையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வருகை தந்துள்ள ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூகி அக்காசியை நேற்று வியாழக்பிழமை சந்தித்த ஹக்கீம் இதை வலியுறுத்தினார்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டிய அதே நேரத்தில் கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதால் அதனையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று அகாசியிடம் ஹக்கீம் கூறினார்.
<i>இந்தியாவின் முயற்சியால் சிறிலங்கா அரசாங்கம் நோர்வே அரசாங்கத்தை மீண்டும் அழைத்துள்ளது பாராட்டுக்குரியது</i> என்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
<i>
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அனைத்து நிலைப் பேச்சுக்களிலும் முஸ்லிம்களை தனித்தரப்பாக அங்கீரித்து பேச்சுகளில் பங்கேற்க அழைக்க வேண்டும் என்றும் அகாசியிடம் ஹக்கீம் வலியுறுத்தினார்</i>.
தகவல் மூலம்-புதினம்
[வெள்ளிக்கிழமை, 9 டிசெம்பர் 2005, 06:46 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகளையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வருகை தந்துள்ள ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூகி அக்காசியை நேற்று வியாழக்பிழமை சந்தித்த ஹக்கீம் இதை வலியுறுத்தினார்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டிய அதே நேரத்தில் கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதால் அதனையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று அகாசியிடம் ஹக்கீம் கூறினார்.
<i>இந்தியாவின் முயற்சியால் சிறிலங்கா அரசாங்கம் நோர்வே அரசாங்கத்தை மீண்டும் அழைத்துள்ளது பாராட்டுக்குரியது</i> என்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
<i>
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அனைத்து நிலைப் பேச்சுக்களிலும் முஸ்லிம்களை தனித்தரப்பாக அங்கீரித்து பேச்சுகளில் பங்கேற்க அழைக்க வேண்டும் என்றும் அகாசியிடம் ஹக்கீம் வலியுறுத்தினார்</i>.
தகவல் மூலம்-புதினம்
"
"
"

