12-09-2005, 07:11 AM
<b>ஏறாவூரில் முஸ்லிம் தொழிலாளி சுட்டுக்கொலை</b>
[வெள்ளிக்கிழமை, 9 டிசெம்பர் 2005, 06:59 ஈழம்] [ஏறாவூர் நிருபர்]
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் உட்புகுந்த ஆயுதக் குழுவொன்றினால் முஸ்லிம் தொழிலாளியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு தொழிலாளி காயமடைந்துள்ளார்.
தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே இன வன்முறைகைள தூண்டும் வகையில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் தீய சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளின் தொடராகவே இந்த சம்பவமும் நடந்துள்ளது.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியிலுள்ள மர ஆலையொன்றில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் காயத்து மொகமது சேது லெப்பை (வயது 52), காயமடைந்தவர் அப்துல் அசனார் (வயது 55) என சிறிலங்கா காவல்துறை தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து ஏறாவூர் பிரதேசத்தில் பதட்ட நிலை தோன்றியுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்</b></i>
[வெள்ளிக்கிழமை, 9 டிசெம்பர் 2005, 06:59 ஈழம்] [ஏறாவூர் நிருபர்]
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் உட்புகுந்த ஆயுதக் குழுவொன்றினால் முஸ்லிம் தொழிலாளியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு தொழிலாளி காயமடைந்துள்ளார்.
தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே இன வன்முறைகைள தூண்டும் வகையில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் தீய சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளின் தொடராகவே இந்த சம்பவமும் நடந்துள்ளது.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியிலுள்ள மர ஆலையொன்றில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் காயத்து மொகமது சேது லெப்பை (வயது 52), காயமடைந்தவர் அப்துல் அசனார் (வயது 55) என சிறிலங்கா காவல்துறை தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து ஏறாவூர் பிரதேசத்தில் பதட்ட நிலை தோன்றியுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்</b></i>
"
"
"

