Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்களத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி-தமிழ்/முஸ்லிம் உறவு மீது
#6
<i>ஆசிரியர் தலையங்கம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு (வார மலர்)</i>
<b>பேரினவாதிகள் சூழ்ச்சியில் முஸ்லிம்கள் சிக்கக் கூடாது</b>



தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையிலான உறவைப் பிளவுபடுத்தி சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களை பேரினவாதம் அரவணைத்துக் கொள்வதற்கான சதிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு தமிழ்இ முஸ்லிம் சமூகத்தின் இரத்த உறவுகள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது. சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர் இந்தக் கொலை கலாசாரம் தலைதூக்கியுள்ளதை இங்கு அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

தமிழினம் தமது தாயக உரிமைப் போராட்டத்தின் உச்சத்தை அடைந்து விட்டது. விடிவிற்காக எஞ்சியிருக்கும் காலம் மிகச் சொற்பமானது. தனியான சுதந்திர தேசத்தை அடைந்து விடுவதற்கான இந்தச் சூழல் உருவாகியுள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அமைதியான ஆதரவு அவசியமானது. ஏனெனில்இ தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் சமூகத்தினர் பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர்.

மதத்தால்இ கலாசாரத்தால் வேறுபட்டு நின்றாலும் மொழியால் இரு இனங்களும் ஒன்றுபட்டு நிற்கின்றன. தமிழினம் தமது விடுதலையை அடைகின்ற போது முஸ்லிம் சமூகத்தினதும் அரசியல் அபிலாசைகள் பூர்த்தியாவது என்பது யதார்த்தம். இந்த வகையில் இரு சிறுபான்மையினங்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் தமது விடுதலை வேள்வியில் குதித்துவிடக் கூடாது என்பது சிங்களப் பேரினவாதத்தின் குறி.

இவை தமிழின விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் மேற்கொண்ட கபடத்தனங்களாகும். முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்பைஇ சலுகைகளைக் காட்டி தன் வயப்படுத்தி வைப்பது தமிழ்இ முஸ்லிம் உறவுகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் குரோதங்களை ஏற்படுத்துவதுஇ முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி தமிழ் மக்களுக்கு எதிராக மோதவிடுவது போன்ற செயல்களை காலம் காலமாக சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டு வருகிறது. எவ்வாறு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒட்டுப்படைகளை உருவாக்கி நிழல் யுத்தமொன்றை சிங்களம் நடத்திக் கொண்டிருக்கிறதோ அதேபோன்று முஸ்லிம் சமூகத்திடையேயும் ஒரு ஆயுதக் குழுவை இயங்கச் செய்து தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை ஏவி விடுவதற்கான சதிகள் தீட்டப்பட்டுள்ளன.

சில முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒரு சிலர் துணையுடன் ஜிகாத் என்ற ஒரு முஸ்லிம் ஆயுதக் குழு நீண்ட காலமாக இயங்கி வருகின்றமை கவலைக்குரியது. காலத்துக்குக் காலம் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தக் குழுவினரது துப்பாக்கிகள் தமிழ் மக்களது உயிரைக் குடித்த சோக வரலாறுகள் உண்டு. இவ்வாறான ஆயுதக் குழுவின் செயற்பாடுகள் குறித்து இதுவரை எந்த ஒரு முஸ்லிம் அரசியல் சக்திகளும் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வாறான ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் சில காலம் ஓய்ந்திருந்தாலும் சந்தர்ப்பம் வரும் போது தீவிரமடைகின்றது. இவ்வாறான குழுவினரது நடவடிக்கை சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்ற பிற்பாடு அதிகரித்துள்ளது. அதே சமயம் முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கொலைகளைப் புரிந்து விட்டு அதன் பழியை தமிழ் மக்கள் மீது போட்டு இனமோதலைஇ இனக்கலவரங்களை ஏற்படுத்தவும் இவர்கள் முனைகின்றனர்.

எனவேஇ முஸ்லிம் சமூகம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பகுதிகளில் நடைபெறுகின்ற சம்பவங்களுக்கு எல்லாம் விடுதலைப் புலிகள் மீது பழியைப் போட்டு தமிழ் மக்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பேரினவாதத்தின் கனவு நனவாகி விடும். திருமலைஇ மூதூர்இ தோப்பூர்இ மருதமுனை சம்பவங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார செயலாளர் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கலாக தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமைஇ படுகொலை செய்யப்பட்டமை கவலைக்குரியது.

இதன் பின்னர் முஸ்லிம்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு தமிழ்இ முஸ்லிம் சமூகங்களிடையே பகைமை உணர்வையூட்டி கர்த்தால்இ கதவடைப்பு நாகரீகமற்ற வார்த்தைகளைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதால் ஒற்றுமை சீர்குலைந்து போகும் அபாயமே ஏற்படும்.

எனவே தமிழர் தாயகத்தில் இரு சிறுபான்மை இனங்களும் தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்ற உரிமைகளை வென்றெடுப்பதற்கு கைகோர்த்து செயற்பட வேண்டும். பேரினவாதத்தின் பொறியில் சிக்கிஇ இனவாதத் தூண்டலில் சிக்கி தமிழினத்தின் விடுதலையின் பெறுமானத்தை சிறுமைப்படுத்திப் பார்க்க முயலக்கூடாது. எதிர்காலத்தில் இரு இனங்களும் ஒன்றிணைந்து சிங்கள தேசத்தின் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்து தாயக விடுதலையைஇ உரிமையை வென்றெடுக்க வேண்டும்.

எனவேஇ சமூகங்களுக்கிடையிலான ஐக்கியம்இ ஒற்றுமைஇ உறுதிப்பாடு அவசியமானது என்பதை வலியுறுத்துவதுடன் சிங்களப் பேரினவாதம் தமது இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் முஸ்லிம் சமூகத்தை வைத்துக் கொள்ளவே விரும்புகின்றது. இந்த இக்கட்டிலிருந்து விடுவித்து தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த முனைய வேண்டும்
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 12-06-2005, 04:31 AM
[No subject] - by மேகநாதன் - 12-06-2005, 04:39 AM
[No subject] - by MUGATHTHAR - 12-06-2005, 05:30 AM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 05:40 AM
[No subject] - by மேகநாதன் - 12-09-2005, 07:06 AM
[No subject] - by மேகநாதன் - 12-09-2005, 07:11 AM
[No subject] - by மேகநாதன் - 12-09-2005, 07:13 AM
[No subject] - by மேகநாதன் - 12-09-2005, 07:56 AM
[No subject] - by மேகநாதன் - 12-11-2005, 01:30 PM
[No subject] - by மேகநாதன் - 12-11-2005, 01:48 PM
[No subject] - by மேகநாதன் - 12-12-2005, 05:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 09:00 PM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 09:13 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 10:51 AM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 11:48 AM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:49 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 01:37 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:40 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:53 PM
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 06:09 AM
[No subject] - by Sukumaran - 02-11-2006, 02:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)