12-08-2005, 06:16 PM
வந்திட்டாய்யா வசம்பு வந்திட்டாய்யா ஊர் வம்பை விட்டிட்டு பேசாமல் ஒரு கதை எழுதுவமெண்டால் இஞ்சையும் அப்புகாத்து (வக்கீல்)மாதிரி ஆதாரம் கேக்க வந்திட்டாய்யா. மற்றும் டமில் டுயா ரமா முகத்தார் வசம்பு இந்திர யித் ஆதரவுக்கு நன்றிகள் இதோ
பாரிஸ் விமான நிலையம் சாந்தி தனது வழைமையான விமான நிலைய சடங்குகளை முடித்து கொண்டு தனது இரண்டு பெரிய பொதிகளையும் ஒரு வண்டிலில் வைத்து தள்ளியவாறு வெளியே வர வெளியே காத்து நின்ற ரவி போய் அவளின் வண்டிலை வாங்கிய படி.
எப்பிடி பயணம் பிரச்சனையில்லையே பயப்பிடேல்லையோ அது சரி நெத்தியிலை என்ன மாட்டுக்கு அடிச்ச மாதிரி குறி அடிச்சிருக்கிறீர் உதை முதலிலை அழியும் என்றான்.
அது நான் நல்லபடியா வந்து சேர வேணுமெண்டு அம்மா வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலிலை அரிச்சனை செய்து பூசி விட்டவாஉங்களிற்கும் கொண்டு வந்தனான் தரவோ என்றவாறு சாந்தி தனது கை பையை திறக்க போனாள்
ம் பத்து மணித்தியாலத்துக்கு மேலை விபுதி குறி அழியாமல் கிடக்கெண்டா நல்லா தண்ணியிலை குளைச்சு பூசியிருக்கிறீர் போலை ஏன் ஒரு பூவையும் காதிலை வைச்சு கொண்டு வந்திருக்கலாமே இன்னும் நல்லா இருந்திருக்கும்.
ஒம் எப்படியப்பா கண்டு பிடிச்சனீங்கள் அம்மா தீர்த்தத்திலை நனைச்சு புசி விட்டவா போய் சேருமட்டும் அழியாமல் இருக்கட்டுமெண்டு பூவும் கொண்டந்தனான் வாடி போச்சு கை பையிக்கை இருக்கு பொறுங்கோ எடுத்து தாறன்
ரவி சிரித்தபடியே ம் நான் கொஞ்ச காலம் அமெரிக்காவிலை நாசா விலை விஞ்ஞானியா இருந்தனான் அதுதான் கண்டு பிடிச்சனான் பேசாமல் நடவும் இதிலை நீர் விபுதி சரையை பிரிக்க பொலிஸ் காரன் வந்து துள் வியாபாரம் நடக்குதெண்டு தூக்கி கொண்டு போக போறான். என்றவாறு காரை நோக்கி நடந்தான்.
சாந்தி ஒண்டும் புரியாமடல் பேசாமல் பின்னால் போய்கொண்டிருந்தாள்.ரவி பொதிகளை காரில் ஏத்தியபடி. என்ன இந்த கனம் கனக்கிது ஊரிலை இருந்து பிணம் கொண்டந்தனீரோ?
சாந்தி காரில் ஏறியபடி அம்மாதான் தன்ரை மருமகன் இவ்வளவு நாளும் தனியா இருந்து சமைச்சு சாப்பிட்டிருப்பார் நிபோய் வாய்க்கு ருசியா சமைச்சு போடு எண்டு இடியப்ப உரல் புட்டு குழல் இட்டலிசட்டி எண்டு எல்லாம் வாங்கி தந்து விட்டவாஅதுதான் பாரம்.
பாத்த உடைனை யேசிச்சனான் இப்பிடி ஏதாவது இருக்குமெண்டு பேசாமல் ஊரிலைஇருந்து ஒரு ஆட்டுகல்லும் ஒரு அம்மியையும் கொண்டுவந்:திருந்தா தோசையும் சுட்டு சம்பலும் அரைச்சு சாப்பிட்டிருக்கலாமே. எப்பதான்: திருந்த போறீங்களே என்று சலித்தவாறு வண்டியை வீடுநோக்கி ஒட்ட தொடங்கினான்.
சாந்தி பாதையின் இருபக்கமும் அதிசயமாய் பாத்தபடி இருக்க ரவி ஒரு ஆங்கில பாடல் ஒன்றை போட்டு விட்டு என்ன சுத்தி சுத்தி பாக்கிறீர் கவனம் தலை சுழுக்க போகுது.
இல்லை எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள். அகலமான நேரான றோட்டுகள் சோறு போட்டு சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான றோட்டு அதுதான் பாக்கிறன்.
ஏன் எங்கடை ஊர் றோட்டுக்கு என்ன குறை சோத்தோடை சொதியும் விட்டு சாப்பிடலாம் அவ்வளவு கிடங்கு பள்ளம் இருக்கு என்று ரவி கூறவும் விழுந்து விழுந்து சிரித்த சாந்தி உங்கடையம்மா சொன்னவா நீங்கள் சரியான பகிடி காரணெண்டு உண்மைதான் என்றாள்.
ஓ அப்பிடியோ அம்மா வேறை என்ன சொன்னவா என்னை பற்றி வேறை என்ன புதினங்கள் நாட்டிலை சொல்லும் என்று சாந்தியிடம் புதினங்களை கேட்டபடி வீட்டை அடைந்தார்கள்.
ரவி காரை நிறுத்தி விட்டு இற்ங்கும் இதுதான் நாங்கள் இருக்கபோற பில்டிங் இதிலை நாலாம் மாடியிலை எங்கடை வீடு சாமான்களை எடும் பயப்பிடாதையும் மேலை போக லிப்ற் இருக்கு என்றவாறு சாமான்களை எடுத்தான்.
என்ன நாலாம் மாடியோ பெரிய பில்டிங்தான் உங்களை ஒண்டு கேக்க வேணுமெண்டு நினைச்சனான் இங்கை வேறை தமிழாக்கள் யாரும் இதிலை இருக்கினமோ??
சாந்தியை சிறிது உற்று பார்த்த ரவி உம்மட்டை சொல்லவேணுமெண்டுதான் நினைச்சனான் பக்கத்திலை பெரிசா தமிழாக்கள் இல்லை நானும் பெரிதா தமிழாக்களோடை பழகிறேல்லை. ஆனால் எங்கடை பில்டிங்கிலை இரண்டாம் மாடியிலை இரண்டு பெடியள் இருக்கிறாங்கள் என்று ரவி முடிக்கமுதல்.
ஓ இரண்டு பேர் இருக்கினமோ எந்த ஊர் எப்பிடி ஆக்கள் உங்களோடை நல்ல பழக்கமோ??என்று சாந்தி கேள்விகளை அடுக்கவே ரவிக்கு சிறிய சினத்துடன்.
நான் சொல்லுறதை வடிவா கேளும் அவங்கள் மானிப்பாய் பெடியளாம் நான் பெரிசா கதைக்கிறேல்லை எனக்கு ஆக்களை பிடிக்கிறேல்லை கண்டா தலையாட்டிட்டு போவன் அவ்வளவுதான் நீரும் கதை பேச்சு வைச்சு கொள்ளாதையும். ஆக்கள் ஒரு மாதிரி.விழங்குதோ??
என்றவாறு சாமான்களை லிப்ரில் ஏத்திவிட்டு சாந்தியை பாத்து உள்ளை ஏறும் நாலாம்மாடி வடிவா பாத்து வையும் பிறகு மாறிபோய் வெள்ளை காரனின்ரை கதவை தட்டுறேல்லை.
சாந்தி லிப்ரில் நுளைந்தவாறே சரியபப்பா அந்த பெடியள் மானிப்பாய் எண்டா சில நேரம் எங்கடை அப்பாவை தெரிஞ்சிருக்கும் எண்டாலும் எனக்கு தெரியாத ஆக்களோடை எனக்கேன் தேவையில்லாத கதை அதைவிட அவங்கள் ஒரு மாதிரியெண்டுறியள்.........
அதைதான் சொன்னனான் அவங்கடை போக்கு வரத்துகள் சரியில்லை அதுவும் பொம்பிழையை கண்டா போதும் பல்லை ஈஈஈஈ எண்டு இழிச்சு கொண்டு வருவாங்கள் கவனமாயிரு எண்றபடி வீட்டினுள் நுளைந்தார்கள்.
சாந்திக்கு புதிய நாடு புதிய வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பழகி கொண்டாள் எதையும் அனுசரித்து போகும் பழக்கம் அவளிற்கிருந்தது அதனால் சாதாரண ஆண்களிடம் இருப்பதைர போலவே ரவியிடம் இருந்த மதுவருந்தும் புகைபிடிக்கும் பழக்கங்களையும் அவள் சாதாரணமாக எடுத்து கொண்டாள்.
இரண்டு வாரங்கள் கழிந்து விட்ட நிலையில் ரவி அவளை பிரெஞ்சு மொழி படிப்பதற்காக் ஒரு பாட சாலையில் சேர்த்து விட்டான்வழைமைபோல சாந்தி பாடசாலைக்கு புறப்பட்டு லிப்ரில் இறங்கி கொண்டிருந்தாள் லிப்ற்இரண்டாம் மாடியில் நிற்க ஒருவர் ஏறினார் வணக்கம் என்ற குரலை கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் .
பாரிஸ் விமான நிலையம் சாந்தி தனது வழைமையான விமான நிலைய சடங்குகளை முடித்து கொண்டு தனது இரண்டு பெரிய பொதிகளையும் ஒரு வண்டிலில் வைத்து தள்ளியவாறு வெளியே வர வெளியே காத்து நின்ற ரவி போய் அவளின் வண்டிலை வாங்கிய படி.
எப்பிடி பயணம் பிரச்சனையில்லையே பயப்பிடேல்லையோ அது சரி நெத்தியிலை என்ன மாட்டுக்கு அடிச்ச மாதிரி குறி அடிச்சிருக்கிறீர் உதை முதலிலை அழியும் என்றான்.
அது நான் நல்லபடியா வந்து சேர வேணுமெண்டு அம்மா வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலிலை அரிச்சனை செய்து பூசி விட்டவாஉங்களிற்கும் கொண்டு வந்தனான் தரவோ என்றவாறு சாந்தி தனது கை பையை திறக்க போனாள்
ம் பத்து மணித்தியாலத்துக்கு மேலை விபுதி குறி அழியாமல் கிடக்கெண்டா நல்லா தண்ணியிலை குளைச்சு பூசியிருக்கிறீர் போலை ஏன் ஒரு பூவையும் காதிலை வைச்சு கொண்டு வந்திருக்கலாமே இன்னும் நல்லா இருந்திருக்கும்.
ஒம் எப்படியப்பா கண்டு பிடிச்சனீங்கள் அம்மா தீர்த்தத்திலை நனைச்சு புசி விட்டவா போய் சேருமட்டும் அழியாமல் இருக்கட்டுமெண்டு பூவும் கொண்டந்தனான் வாடி போச்சு கை பையிக்கை இருக்கு பொறுங்கோ எடுத்து தாறன்
ரவி சிரித்தபடியே ம் நான் கொஞ்ச காலம் அமெரிக்காவிலை நாசா விலை விஞ்ஞானியா இருந்தனான் அதுதான் கண்டு பிடிச்சனான் பேசாமல் நடவும் இதிலை நீர் விபுதி சரையை பிரிக்க பொலிஸ் காரன் வந்து துள் வியாபாரம் நடக்குதெண்டு தூக்கி கொண்டு போக போறான். என்றவாறு காரை நோக்கி நடந்தான்.
சாந்தி ஒண்டும் புரியாமடல் பேசாமல் பின்னால் போய்கொண்டிருந்தாள்.ரவி பொதிகளை காரில் ஏத்தியபடி. என்ன இந்த கனம் கனக்கிது ஊரிலை இருந்து பிணம் கொண்டந்தனீரோ?
சாந்தி காரில் ஏறியபடி அம்மாதான் தன்ரை மருமகன் இவ்வளவு நாளும் தனியா இருந்து சமைச்சு சாப்பிட்டிருப்பார் நிபோய் வாய்க்கு ருசியா சமைச்சு போடு எண்டு இடியப்ப உரல் புட்டு குழல் இட்டலிசட்டி எண்டு எல்லாம் வாங்கி தந்து விட்டவாஅதுதான் பாரம்.
பாத்த உடைனை யேசிச்சனான் இப்பிடி ஏதாவது இருக்குமெண்டு பேசாமல் ஊரிலைஇருந்து ஒரு ஆட்டுகல்லும் ஒரு அம்மியையும் கொண்டுவந்:திருந்தா தோசையும் சுட்டு சம்பலும் அரைச்சு சாப்பிட்டிருக்கலாமே. எப்பதான்: திருந்த போறீங்களே என்று சலித்தவாறு வண்டியை வீடுநோக்கி ஒட்ட தொடங்கினான்.
சாந்தி பாதையின் இருபக்கமும் அதிசயமாய் பாத்தபடி இருக்க ரவி ஒரு ஆங்கில பாடல் ஒன்றை போட்டு விட்டு என்ன சுத்தி சுத்தி பாக்கிறீர் கவனம் தலை சுழுக்க போகுது.
இல்லை எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள். அகலமான நேரான றோட்டுகள் சோறு போட்டு சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான றோட்டு அதுதான் பாக்கிறன்.
ஏன் எங்கடை ஊர் றோட்டுக்கு என்ன குறை சோத்தோடை சொதியும் விட்டு சாப்பிடலாம் அவ்வளவு கிடங்கு பள்ளம் இருக்கு என்று ரவி கூறவும் விழுந்து விழுந்து சிரித்த சாந்தி உங்கடையம்மா சொன்னவா நீங்கள் சரியான பகிடி காரணெண்டு உண்மைதான் என்றாள்.
ஓ அப்பிடியோ அம்மா வேறை என்ன சொன்னவா என்னை பற்றி வேறை என்ன புதினங்கள் நாட்டிலை சொல்லும் என்று சாந்தியிடம் புதினங்களை கேட்டபடி வீட்டை அடைந்தார்கள்.
ரவி காரை நிறுத்தி விட்டு இற்ங்கும் இதுதான் நாங்கள் இருக்கபோற பில்டிங் இதிலை நாலாம் மாடியிலை எங்கடை வீடு சாமான்களை எடும் பயப்பிடாதையும் மேலை போக லிப்ற் இருக்கு என்றவாறு சாமான்களை எடுத்தான்.
என்ன நாலாம் மாடியோ பெரிய பில்டிங்தான் உங்களை ஒண்டு கேக்க வேணுமெண்டு நினைச்சனான் இங்கை வேறை தமிழாக்கள் யாரும் இதிலை இருக்கினமோ??
சாந்தியை சிறிது உற்று பார்த்த ரவி உம்மட்டை சொல்லவேணுமெண்டுதான் நினைச்சனான் பக்கத்திலை பெரிசா தமிழாக்கள் இல்லை நானும் பெரிதா தமிழாக்களோடை பழகிறேல்லை. ஆனால் எங்கடை பில்டிங்கிலை இரண்டாம் மாடியிலை இரண்டு பெடியள் இருக்கிறாங்கள் என்று ரவி முடிக்கமுதல்.
ஓ இரண்டு பேர் இருக்கினமோ எந்த ஊர் எப்பிடி ஆக்கள் உங்களோடை நல்ல பழக்கமோ??என்று சாந்தி கேள்விகளை அடுக்கவே ரவிக்கு சிறிய சினத்துடன்.
நான் சொல்லுறதை வடிவா கேளும் அவங்கள் மானிப்பாய் பெடியளாம் நான் பெரிசா கதைக்கிறேல்லை எனக்கு ஆக்களை பிடிக்கிறேல்லை கண்டா தலையாட்டிட்டு போவன் அவ்வளவுதான் நீரும் கதை பேச்சு வைச்சு கொள்ளாதையும். ஆக்கள் ஒரு மாதிரி.விழங்குதோ??
என்றவாறு சாமான்களை லிப்ரில் ஏத்திவிட்டு சாந்தியை பாத்து உள்ளை ஏறும் நாலாம்மாடி வடிவா பாத்து வையும் பிறகு மாறிபோய் வெள்ளை காரனின்ரை கதவை தட்டுறேல்லை.
சாந்தி லிப்ரில் நுளைந்தவாறே சரியபப்பா அந்த பெடியள் மானிப்பாய் எண்டா சில நேரம் எங்கடை அப்பாவை தெரிஞ்சிருக்கும் எண்டாலும் எனக்கு தெரியாத ஆக்களோடை எனக்கேன் தேவையில்லாத கதை அதைவிட அவங்கள் ஒரு மாதிரியெண்டுறியள்.........
அதைதான் சொன்னனான் அவங்கடை போக்கு வரத்துகள் சரியில்லை அதுவும் பொம்பிழையை கண்டா போதும் பல்லை ஈஈஈஈ எண்டு இழிச்சு கொண்டு வருவாங்கள் கவனமாயிரு எண்றபடி வீட்டினுள் நுளைந்தார்கள்.
சாந்திக்கு புதிய நாடு புதிய வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பழகி கொண்டாள் எதையும் அனுசரித்து போகும் பழக்கம் அவளிற்கிருந்தது அதனால் சாதாரண ஆண்களிடம் இருப்பதைர போலவே ரவியிடம் இருந்த மதுவருந்தும் புகைபிடிக்கும் பழக்கங்களையும் அவள் சாதாரணமாக எடுத்து கொண்டாள்.
இரண்டு வாரங்கள் கழிந்து விட்ட நிலையில் ரவி அவளை பிரெஞ்சு மொழி படிப்பதற்காக் ஒரு பாட சாலையில் சேர்த்து விட்டான்வழைமைபோல சாந்தி பாடசாலைக்கு புறப்பட்டு லிப்ரில் இறங்கி கொண்டிருந்தாள் லிப்ற்இரண்டாம் மாடியில் நிற்க ஒருவர் ஏறினார் வணக்கம் என்ற குரலை கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் .
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

