12-06-2005, 05:30 AM
மூதூர் சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை: எழிலன் விளக்கம்
திருகோணமலை மூதூர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பில் எழிலன் கூறியுள்ளதாவது:
இந்த சம்பவங்கள் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் எங்களுக்கும் இந்த சம்பவங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
அமைதி முயற்சிகளைப் பாதிக்காத வகையில் அமைதியைக் கொண்டுவருவதில் நாம் பற்றுறுதியோடு இருக்கிறோம்.
அமைதி முயற்சிகளில் எமது தலைமைப்பீடம் உறுதியாக உள்ளது. சில சக்திகள் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு எமது மீது குற்றம்சாட்டுகின்றன என்றார் எழிலன்.
இதனிடையே எழிலனின் மறுப்பு குறித்து கருத்து தெரிவித்த கிழக்குப் பிரதேச காவல்துறை அதிகாரி றோகான் அபயவர்த்தனஇ எந்த ஒரு வடக்கு-கிழக்குச் சம்பவங்களையும் தாங்கள் மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டதில்லை என்று கூறினார்.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசிய பின்பு இப்பிரதேசங்களில் பதற்றம் குறைந்து அமைதி திரும்பி வருகிறது என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கட்டைபறிச்சான் சோதனைச் சாவடியில் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்னிலையில் எழிலனுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.
அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மூதூர் பிரதேசங்களைப் பார்வையிட்டார். காவல்துறைஇ இராணுவம்இ கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார்.
இச்சந்திப்புகளின் போது 3 புதிய பாதுகாப்புச் சோதனை சாவடிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதினம்
திருகோணமலை மூதூர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பில் எழிலன் கூறியுள்ளதாவது:
இந்த சம்பவங்கள் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் எங்களுக்கும் இந்த சம்பவங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
அமைதி முயற்சிகளைப் பாதிக்காத வகையில் அமைதியைக் கொண்டுவருவதில் நாம் பற்றுறுதியோடு இருக்கிறோம்.
அமைதி முயற்சிகளில் எமது தலைமைப்பீடம் உறுதியாக உள்ளது. சில சக்திகள் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு எமது மீது குற்றம்சாட்டுகின்றன என்றார் எழிலன்.
இதனிடையே எழிலனின் மறுப்பு குறித்து கருத்து தெரிவித்த கிழக்குப் பிரதேச காவல்துறை அதிகாரி றோகான் அபயவர்த்தனஇ எந்த ஒரு வடக்கு-கிழக்குச் சம்பவங்களையும் தாங்கள் மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டதில்லை என்று கூறினார்.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசிய பின்பு இப்பிரதேசங்களில் பதற்றம் குறைந்து அமைதி திரும்பி வருகிறது என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கட்டைபறிச்சான் சோதனைச் சாவடியில் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்னிலையில் எழிலனுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.
அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மூதூர் பிரதேசங்களைப் பார்வையிட்டார். காவல்துறைஇ இராணுவம்இ கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார்.
இச்சந்திப்புகளின் போது 3 புதிய பாதுகாப்புச் சோதனை சாவடிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதினம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

