12-06-2005, 04:27 AM
தமிழ்-முஸ்லிம் கலவரத்தைத் தூண்டும் சதி தொடருகிறது: மேலும் 2 முஸ்லிம் மீனவர்கள் சுட்டுக்கொலை!!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:19 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மருதமுனைக் கடற்கரையில் வழமை போல் தூண்டில் போட்டு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத போதிலும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை தூண்டும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவினரே இதற்கு பொறுப்பு என்று தெரியவந்துள்ளது.
முஸ்லிம்கள் படுகொலைச் சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மருதமுனை, பாண்டிருப்பு எல்லைப்புறத்திலுள்ள ஆழிப்பேரலை அகதி முகாம்களிலிருந்து தமிழ் குடும்பங்கள் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.
சேனைக்குடியிருப்பில் நேற்றிரவு கடை ஒன்று அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
<b>தகவல்மூலம்; புதினம் </b>
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:19 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மருதமுனைக் கடற்கரையில் வழமை போல் தூண்டில் போட்டு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத போதிலும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை தூண்டும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவினரே இதற்கு பொறுப்பு என்று தெரியவந்துள்ளது.
முஸ்லிம்கள் படுகொலைச் சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மருதமுனை, பாண்டிருப்பு எல்லைப்புறத்திலுள்ள ஆழிப்பேரலை அகதி முகாம்களிலிருந்து தமிழ் குடும்பங்கள் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.
சேனைக்குடியிருப்பில் நேற்றிரவு கடை ஒன்று அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
<b>தகவல்மூலம்; புதினம் </b>
"
"
"

