12-05-2005, 10:40 PM
யாழில் நடைபெறும் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டுவதற்குப் போதிய சாட்சியங்கள் இல்லை என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்ட் கூறியுள்ளதாவது:
கடந்த 3 நாட்களில் யுத்தநிறுத்த உடன்படிக்கை 10 முறை மீறப்பட்டுள்ளன.
கடந்த 48 மணிநேரத்தினுள் 9 சிறிலங்கா இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இராணுவ வீரர்களும் பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்று கூறுவதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார் அவர்.
கோண்டாவில் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலானது யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான சம்பவம் என்று சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
http://www.eelampage.com/index4.php?cn=22265
கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்ட் கூறியுள்ளதாவது:
கடந்த 3 நாட்களில் யுத்தநிறுத்த உடன்படிக்கை 10 முறை மீறப்பட்டுள்ளன.
கடந்த 48 மணிநேரத்தினுள் 9 சிறிலங்கா இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இராணுவ வீரர்களும் பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்று கூறுவதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார் அவர்.
கோண்டாவில் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலானது யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான சம்பவம் என்று சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
http://www.eelampage.com/index4.php?cn=22265

