12-04-2005, 11:42 PM
<b> வலி தெரியாக்காயங்கள் பாகம் 9</b>
பிறந்த நாள் சந்தோஸமாக முடிந்தது ஆனால் வேணிக்கு தான் நிம்மதி இல்லை எப்போ போட்டோக்கள் வரும் தனக்கு பக்கத்தில் சண் நிற்கும் படம் வரும் வரை அவள் பட்ட அவஸ்தை இருக்கே அம்மாடியோ சந்தோசமான அவஸ்தை தான்.
அவளுடன் கூடபடிக்கும் நண்பிக்கும் இப்போ வேணியின் புதிய போக்கு பிடிபடவில்லை அவளிடன் ஜாடை மாடையாக கேட்டும் பார்த்தாள். வேணியோ பிடி கொடுக்கவில்லை. ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டாள் அவளறியாமலே அவள் பாடசாலை பையினுள் சண் கொடுத்த நோட்ஸ் கொப்பி இருந்தது அதை பார்த்த நண்பி கொஞ்சம் புரிந்து கொண்டாள். "ஓ ஓ இப்ப தான் தெரியுது நீ எப்படி நல்லா படிப்பதும் கொஞ்சம் குழப்பமாக கதைப்பதும் காரணம் எல்லாம் இவர் தானோ நல்லது தாயே...கவனமடி கொழும்பான் எதாவது செய்து விட்டு கொழும்புக்கு போனால் என்னசெய்வாய்?பார்த்து பழகுடி" என்று நண்பி சொன்ன போது "சும்மா எல்லோரையும் போல் சண் பற்றி தப்பாக கதைக்காதே எவ்வளவு நல்லவர் தெரியுமா?" என்று வேணி சொன்ன போது. சிரித்தபடியே "ம்ம் இப்போ சொன்னது உண்மைதான் உனக்கு இனி அவர் தானே உனக்கு வாத்தியார் அவரிடமே படி ஓ சொல்ல மறந்து விட்டேன் உனக்ககா ஊரில் இருக்கும் பொடியங்களுக்கு அடித்து விபரம் கேள்விபட்டேன் நல்ல அக்கறை தான் உன்னில்" என்று சிரித்த போது வேணியின் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது.அவளின் ஆசையில் ஒரு நாள் குழப்பம் வந்தது சண் அப்பா வடிவில்
ஒரு வார விடுமுறையில் அவர் வந்து இருந்தபோது ஒரு நாள் வேணி அவர் வந்தது தெரியாமல் உரிமையுடம் "அன்ரி" என்று அழைத்தபடியே சண் வீட்டுக்குள் போனபோது புதிதாக ஒருவர் கண்ணாடியுடன் அவளையே கூர்ந்து பார்த்தபடி "யாரம்மா நீ?" என்று கேட்டார். அவர் சண் வயது வந்தால் இப்படி தான் இருப்பான் என்று நினைத்த போது வேணிக்கு சிரிப்பு வந்து விட்டது. இருந்தாலும் மரியாதையுடன் "நாங்கள் பக்கத்து வீடு அன்ரியிட்டை வந்தேன் நீங்கள் சண் அப்பா தானே சுகமா இருக்கிறிங்களோ?" என்று கேட்டா வேணியிடம் "ஓம் பிள்ளை சண் எப்படி" என்று கேட்டார் சண் அப்பா சண் பேரை சொன்னதுமே வேணியில் ஒரு மாற்றம் அது சண் அப்பாவுக்கு புரிந்து விட்டது. "சரி பிள்ளை சண் அம்மா உள்ளே தான் இருக்கிறா போங்கோ உள்ளே" என்று சொன்னார்
-தொடரும்-
பிறந்த நாள் சந்தோஸமாக முடிந்தது ஆனால் வேணிக்கு தான் நிம்மதி இல்லை எப்போ போட்டோக்கள் வரும் தனக்கு பக்கத்தில் சண் நிற்கும் படம் வரும் வரை அவள் பட்ட அவஸ்தை இருக்கே அம்மாடியோ சந்தோசமான அவஸ்தை தான்.
அவளுடன் கூடபடிக்கும் நண்பிக்கும் இப்போ வேணியின் புதிய போக்கு பிடிபடவில்லை அவளிடன் ஜாடை மாடையாக கேட்டும் பார்த்தாள். வேணியோ பிடி கொடுக்கவில்லை. ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டாள் அவளறியாமலே அவள் பாடசாலை பையினுள் சண் கொடுத்த நோட்ஸ் கொப்பி இருந்தது அதை பார்த்த நண்பி கொஞ்சம் புரிந்து கொண்டாள். "ஓ ஓ இப்ப தான் தெரியுது நீ எப்படி நல்லா படிப்பதும் கொஞ்சம் குழப்பமாக கதைப்பதும் காரணம் எல்லாம் இவர் தானோ நல்லது தாயே...கவனமடி கொழும்பான் எதாவது செய்து விட்டு கொழும்புக்கு போனால் என்னசெய்வாய்?பார்த்து பழகுடி" என்று நண்பி சொன்ன போது "சும்மா எல்லோரையும் போல் சண் பற்றி தப்பாக கதைக்காதே எவ்வளவு நல்லவர் தெரியுமா?" என்று வேணி சொன்ன போது. சிரித்தபடியே "ம்ம் இப்போ சொன்னது உண்மைதான் உனக்கு இனி அவர் தானே உனக்கு வாத்தியார் அவரிடமே படி ஓ சொல்ல மறந்து விட்டேன் உனக்ககா ஊரில் இருக்கும் பொடியங்களுக்கு அடித்து விபரம் கேள்விபட்டேன் நல்ல அக்கறை தான் உன்னில்" என்று சிரித்த போது வேணியின் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது.அவளின் ஆசையில் ஒரு நாள் குழப்பம் வந்தது சண் அப்பா வடிவில்
ஒரு வார விடுமுறையில் அவர் வந்து இருந்தபோது ஒரு நாள் வேணி அவர் வந்தது தெரியாமல் உரிமையுடம் "அன்ரி" என்று அழைத்தபடியே சண் வீட்டுக்குள் போனபோது புதிதாக ஒருவர் கண்ணாடியுடன் அவளையே கூர்ந்து பார்த்தபடி "யாரம்மா நீ?" என்று கேட்டார். அவர் சண் வயது வந்தால் இப்படி தான் இருப்பான் என்று நினைத்த போது வேணிக்கு சிரிப்பு வந்து விட்டது. இருந்தாலும் மரியாதையுடன் "நாங்கள் பக்கத்து வீடு அன்ரியிட்டை வந்தேன் நீங்கள் சண் அப்பா தானே சுகமா இருக்கிறிங்களோ?" என்று கேட்டா வேணியிடம் "ஓம் பிள்ளை சண் எப்படி" என்று கேட்டார் சண் அப்பா சண் பேரை சொன்னதுமே வேணியில் ஒரு மாற்றம் அது சண் அப்பாவுக்கு புரிந்து விட்டது. "சரி பிள்ளை சண் அம்மா உள்ளே தான் இருக்கிறா போங்கோ உள்ளே" என்று சொன்னார்
-தொடரும்-
inthirajith

