12-04-2005, 07:51 PM
RaMa Wrote:siluku Wrote:MUGATHTHAR Wrote:RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)என்ன பிள்ளை இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு அப்பிடியான ஆட்களின்ரை பேரைத் தாறன் கதைச்சு சந்தியுங்கோவன்
1. முகத்தார்
2.சின்னப்பு
3.சாத்திரி
முகத்தார் தாத்தா உங்களுக்கு நினைப்புத் தான்,உங்களப் பற்றி நீங்களே செர்டிபிகேற் குடுத்துக் கொண்டு .உங்களப் பற்றி பொன்னம்மா அக்கா அல்லோ சொல்ல வேணும்.
ரமா அக்கா உங்கள சந்திச்சு என்னத்தக் கதைக்கிறது?பொல்லூண்டி எப்படி விளாம நடக்கிறது எண்டோ?
ஏன் சிலுக்கு உங்களுக்கு அது ஒன்றை பற்றித்தான் கதைக்க தெரியும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வேறென்ன அக்கா முகத்தார் தாத்தாவுக்கு தலயில மயிரக் காணன்,இவரோடா நான் வேற என்னத்தக் கதைக்கிறது.
இந்த தள்ளாத வயசிலேயும் மனுசனுக்கு வக்கணைக்குக் குறச்சலில்ல.
நாங்கள் யங் கேர்ல்ஸ் எங்களுக்கு கதைக்க ஆயிரம் இருக்கும்.அது சரி அக்கா கனடாவில என்ன எல்லாப் பெடியளும் காசெண்டு அலயிறாங்களோ?
பெட்டயளும் அப்படித் தானே அக்கா.புலத்தில நாங்கள் கோயிலுக்கு அசின் உடுத்தமாதிரி சாறியும், நகையும் கட்ட வேணும் எண்டா காசு வேணும் தானே அக்கா.இல்லாட்டி யாரு திரும்பிப் பாப்பினம்.இப்ப காரெண்டா சும்மா ஓட்டக் காரில போகேலுமே?
இவர் கிரி வச்சிருகிறது ஒரு ஓட்டக் கார் அது குளிரில சில நேரம் நிண்டிரும் ,எங்கேயும் பார்டியளுக்குப் போனால் பருசுகேடு.அதால நான் ஒரு இடமும் வெளிக்கிடுறேல்ல.பிறகு அங்க ஆள் ஆளுக்கு விதம் விதமா உடுத்திக் கொன்டு வருவினம், நான் என்னன்டு போட்டி போடேலும்?எல்லாத்துக்கும் காசு வேணுமல்லோ?இங்க சிலது போட்டியில கடன் எடுத்து செலவழிச்சு மாயிதுகள்.பேசாம புத்தர் மாதிரி எல்லாத்தையும் துறந்தாத் தான் பாசம் எண்டு தண்ணியக் குடிச்சு ,வீட்டுக்க பேசாம நித்திரை கொண்டு வாழலாம்.என்னக்கா நான் சொல்லுறது சரியோ?

