12-04-2005, 10:18 AM
குடாநாட்டில் தேசிய உணர்வை பீறிட வைத்த பகிஷ்கரிப்பு நிகழ்வு
நீர்வேலியில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக குடா நாட்டு மக்களின் ஒருமித்த எதிர்ப்பு நடவடிக்கை உணர்ச்சி கொப்பளிக்க வெளிப்பட்டிருக்கின்றது.
ஒன்றுபட்ட தேசமாக தேசியமாக எழுச்சி பெற்று நிற்கும் தமிழினம், கோபம் பீறிடும் தனது எதிர்ப் புணர்வைக் கூட ஆக்ரோஷத்தோடு ஒன்றுபட்டுத்தான் வெளிப்படுத்தியது. நேற்றுமுன்தினம் முழு யாழ். குடா நாட்டையுமே ஸ்தம்பிக்கச் செய்யும் விதத்தில் ஐக்கியப் பட்டு, தங்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத் திய யாழ். மக்களின் சீற்றம், இந்த அப்பாவிகளின் படு கொலைக்குக் காரணமான சூத்திரதாரிகளின் செவிப் பறையில் ஆழமான ஒரு செய்தியை ஓங்கி ஒலித்து உணர்த்தியிருக்கும் என நம்பலாம்.
தேசிய பிரக்ஞையுடன் கூடிய குடாநாட்டு மக்களின் பரந்துபட்ட ஐக்கிய உணர்வெழுச்சி அண்மைக் காலத் தில் இரண்டு நிகழ்வுகள் ஊடாக வெளிப்படுத்தப் பட்டன.
ஒன்று சிங்கள தேசத்தின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழர் தாயகத்துக்குச் சம்பந்த மேயில்லை என்பதை உலகுக்கு முரசறைந்து கூறுவது போல அத்தேர்தலை ஒட்டுமொத்தமாகப் பகிஷ்கரித்துத் தமது இனத்தின் ஐக்கிய நிலைப்பாட்டை நிரூபித்தமை.
மற்றது தமது தாயக தேசத்தின் விடுதலைக்கு வித்தான மாவீரர்களின் நினைவாக மாவீரர் தின நிகழ்வு களை உணர்வுடன் பேரெழுச்சியாக அனுஷ்டித்தமை.
இந்த நிகழ்வுகள், தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக் கண்ணாகவும் அதில் உறுதியாகவும் குடாநாட்டு மக் கள் மலைபோல் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தின.
குடாநாட்டு மக்களின் இந்த ஐக்கியத் திரள்வு தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளை கதிகலங்க வைத்து விட்டது.
வடக்கில் இறுகி, மேலும் மேலும் பலமடைந்து, வலு வடைந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வை அப்படியே வளரவிடுவது, சிங்களத் தேசியத்தின் மேலாண்மைப் போக்குக்குச் சாவுமணி அடித்துவிடும் என்ற உண் மையை உணர்ந்து கலவரமடைந்துள்ள ஆளும் வர்க் கம், தமிழ்த் தேசிய உணர்வைச் சிதறடித்து, சின்னா பின்னமாக்கி, மழுங்கடித்து, வலுவிழக்கவைக்கும் எண் ணத்தோடு பல சதிச்செயல்களை அரங்கேற்றி வரு கின்றது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதி ராகச் செயற்படும் சக்திகள், தென் தமிழீழத்தில் தம்மை யாரென அடையாளம் காட்டிக்கொள்ளாமல், விடுதலை உணர்வுமிக்க தமிழர்களுக்கு எதிராக மறைமுக சமரை இருள் யுத்தத்தை நிழல் சண்டையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
தென்தமிழீழத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் மத்தியில் இத்தகைய அரூப கரங்களினால் ஒரு யுத்தத்தைத் தொடுத்து, அங்கு குழப்பத்தை ஏற்படுத்துவதில் வெற்றிகண்ட இச்சக்திகள் அதே தந்திரத்தை வட தமிழீழத்திலும் கட்டவிழ்த்துவிடப் பார்க்கின்றன. அதன் மூலம் மக்களை பீதிக்குள் ஆழ்த்தி, குழப்பத்தை ஏற்படுத்தி, தாம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்று அவை திட்டமிடுகின்றன; பகல் கனவு காண்கின்றன.
அரூப கரங்களினால் இச்சக்திகள் புரியும் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஒன்றாகவே நீர்வேலிப் படுகொலைகளை நாம் கருதவேண்டும். இத்தகைய அத்து மீறல் தாக்குதல்கள், அட்டூழிய நடவடிக்கைகள் தமிழ்த் தேசத்தைக் குழப்பத்துக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் ஆழ்த்தி பெரும் களேபரத்தை உண்டுபண்னும் என்றும் தேசிய உணர்வுடைய எண்ணங்கள் மழுங்கடிக்கப்படும் என்றும் இந்தச் சக்திகள் எதிர்பார்த்தன.
ஆனால், நடந்ததோ நடப்பதோ வேறு. அச்சக்தி களுக்கு ஏமாற்றம் அழிக்கும் விதத்தில் இத்தகைய கோழைத்தனமான படுகொலைகள் கண்டு குடாநாட்டு மக்கள் துவளவில்லை. இத்தகைய இழப்புகள் தமக்கு மேலும் உறுதியையும் தேசியத்தின்பாலான தமது பற்றுதலையும் வலுவடையச் செய்யும் என்பதைச் சாத்வீக வழியில் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் மேற்கொண்டு, நிரூபித்திருக்கின்றார்கள் குடாநாட்டு மக்கள்.
அமைதிக்காலத்தில் சமாதான வேளையில் உரிமைப் போராட்ட உந்தலும் விடுதலைப் போராட்ட உணர்வும், சுதந்திரத்திற்கான உறுத்தலும் தொய்ந்து, நைந்து போய்விடாமல் சமூகத்தில் போராட்ட உணர்வு "சிக்'கெனப் பற்றிப் பிடித்து நிற்பதற்கு நீர்வேலிப் படுகொலைகள் போன்ற சம்பவங்கள் வழிசெய்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
அந்த வகையில் இறப்பிலும் இழப்பிலும் கூட, உயிர்ப்பு உண்டு என்பது உறுதிசெய்யப்படுகின்றது.
குடாநாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை தட்டி எழுப்பும் வேள்வியில் ஆகுதியான உத்தமர்களாக நீர்வேலியில் தம் உயிர் ஈந்த இரு சகோதரர்களையும் நாம் கருதவேண்டும்.
http://www.uthayan.com/editor.html
நீர்வேலியில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக குடா நாட்டு மக்களின் ஒருமித்த எதிர்ப்பு நடவடிக்கை உணர்ச்சி கொப்பளிக்க வெளிப்பட்டிருக்கின்றது.
ஒன்றுபட்ட தேசமாக தேசியமாக எழுச்சி பெற்று நிற்கும் தமிழினம், கோபம் பீறிடும் தனது எதிர்ப் புணர்வைக் கூட ஆக்ரோஷத்தோடு ஒன்றுபட்டுத்தான் வெளிப்படுத்தியது. நேற்றுமுன்தினம் முழு யாழ். குடா நாட்டையுமே ஸ்தம்பிக்கச் செய்யும் விதத்தில் ஐக்கியப் பட்டு, தங்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத் திய யாழ். மக்களின் சீற்றம், இந்த அப்பாவிகளின் படு கொலைக்குக் காரணமான சூத்திரதாரிகளின் செவிப் பறையில் ஆழமான ஒரு செய்தியை ஓங்கி ஒலித்து உணர்த்தியிருக்கும் என நம்பலாம்.
தேசிய பிரக்ஞையுடன் கூடிய குடாநாட்டு மக்களின் பரந்துபட்ட ஐக்கிய உணர்வெழுச்சி அண்மைக் காலத் தில் இரண்டு நிகழ்வுகள் ஊடாக வெளிப்படுத்தப் பட்டன.
ஒன்று சிங்கள தேசத்தின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழர் தாயகத்துக்குச் சம்பந்த மேயில்லை என்பதை உலகுக்கு முரசறைந்து கூறுவது போல அத்தேர்தலை ஒட்டுமொத்தமாகப் பகிஷ்கரித்துத் தமது இனத்தின் ஐக்கிய நிலைப்பாட்டை நிரூபித்தமை.
மற்றது தமது தாயக தேசத்தின் விடுதலைக்கு வித்தான மாவீரர்களின் நினைவாக மாவீரர் தின நிகழ்வு களை உணர்வுடன் பேரெழுச்சியாக அனுஷ்டித்தமை.
இந்த நிகழ்வுகள், தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக் கண்ணாகவும் அதில் உறுதியாகவும் குடாநாட்டு மக் கள் மலைபோல் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தின.
குடாநாட்டு மக்களின் இந்த ஐக்கியத் திரள்வு தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளை கதிகலங்க வைத்து விட்டது.
வடக்கில் இறுகி, மேலும் மேலும் பலமடைந்து, வலு வடைந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வை அப்படியே வளரவிடுவது, சிங்களத் தேசியத்தின் மேலாண்மைப் போக்குக்குச் சாவுமணி அடித்துவிடும் என்ற உண் மையை உணர்ந்து கலவரமடைந்துள்ள ஆளும் வர்க் கம், தமிழ்த் தேசிய உணர்வைச் சிதறடித்து, சின்னா பின்னமாக்கி, மழுங்கடித்து, வலுவிழக்கவைக்கும் எண் ணத்தோடு பல சதிச்செயல்களை அரங்கேற்றி வரு கின்றது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதி ராகச் செயற்படும் சக்திகள், தென் தமிழீழத்தில் தம்மை யாரென அடையாளம் காட்டிக்கொள்ளாமல், விடுதலை உணர்வுமிக்க தமிழர்களுக்கு எதிராக மறைமுக சமரை இருள் யுத்தத்தை நிழல் சண்டையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
தென்தமிழீழத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் மத்தியில் இத்தகைய அரூப கரங்களினால் ஒரு யுத்தத்தைத் தொடுத்து, அங்கு குழப்பத்தை ஏற்படுத்துவதில் வெற்றிகண்ட இச்சக்திகள் அதே தந்திரத்தை வட தமிழீழத்திலும் கட்டவிழ்த்துவிடப் பார்க்கின்றன. அதன் மூலம் மக்களை பீதிக்குள் ஆழ்த்தி, குழப்பத்தை ஏற்படுத்தி, தாம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்று அவை திட்டமிடுகின்றன; பகல் கனவு காண்கின்றன.
அரூப கரங்களினால் இச்சக்திகள் புரியும் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஒன்றாகவே நீர்வேலிப் படுகொலைகளை நாம் கருதவேண்டும். இத்தகைய அத்து மீறல் தாக்குதல்கள், அட்டூழிய நடவடிக்கைகள் தமிழ்த் தேசத்தைக் குழப்பத்துக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் ஆழ்த்தி பெரும் களேபரத்தை உண்டுபண்னும் என்றும் தேசிய உணர்வுடைய எண்ணங்கள் மழுங்கடிக்கப்படும் என்றும் இந்தச் சக்திகள் எதிர்பார்த்தன.
ஆனால், நடந்ததோ நடப்பதோ வேறு. அச்சக்தி களுக்கு ஏமாற்றம் அழிக்கும் விதத்தில் இத்தகைய கோழைத்தனமான படுகொலைகள் கண்டு குடாநாட்டு மக்கள் துவளவில்லை. இத்தகைய இழப்புகள் தமக்கு மேலும் உறுதியையும் தேசியத்தின்பாலான தமது பற்றுதலையும் வலுவடையச் செய்யும் என்பதைச் சாத்வீக வழியில் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் மேற்கொண்டு, நிரூபித்திருக்கின்றார்கள் குடாநாட்டு மக்கள்.
அமைதிக்காலத்தில் சமாதான வேளையில் உரிமைப் போராட்ட உந்தலும் விடுதலைப் போராட்ட உணர்வும், சுதந்திரத்திற்கான உறுத்தலும் தொய்ந்து, நைந்து போய்விடாமல் சமூகத்தில் போராட்ட உணர்வு "சிக்'கெனப் பற்றிப் பிடித்து நிற்பதற்கு நீர்வேலிப் படுகொலைகள் போன்ற சம்பவங்கள் வழிசெய்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
அந்த வகையில் இறப்பிலும் இழப்பிலும் கூட, உயிர்ப்பு உண்டு என்பது உறுதிசெய்யப்படுகின்றது.
குடாநாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை தட்டி எழுப்பும் வேள்வியில் ஆகுதியான உத்தமர்களாக நீர்வேலியில் தம் உயிர் ஈந்த இரு சகோதரர்களையும் நாம் கருதவேண்டும்.
http://www.uthayan.com/editor.html
" "

