12-04-2005, 12:25 AM
குடாநாட்டில் படையினருக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழும் அபாயம்
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக படையினரின் கெடுபிடி அதிகரித்திருப்பதாக பல தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக வீதிச் சோதனைகள், வீதி ரோந்து அதிகரித்திருப்பதுடன் அசம்பாவிதம் நடக்கும் இடங்களில் படையினரின் பிரசன்னம் இருப்பதையும் காண முடிகின்றது. இதனால் படையினருக்கு எதிராக குடாநாட்டு இளைஞர்கள் கிளர்ந்தெழும் நிலையும் அங்கு ஏற்பட்டுவருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் பின்பே இத்தகைய கெடுபிடிகள் அதிகரித்திருப்பதாகவும் குடாநாட்டில் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதியும் கண்காணிப்புக் குழுவிடம் இது குறித்து அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இராணுவ கெடுபிடிகள், துப்பாக்கி பிரயோகம் என்பன தமிழ்த்தேச விடுதலைப்பற்றாளர்களை அழித்தொழிக்கும் நய வஞ்சகச் செயல்களாகவே உள்ளன என்று அவர் கண்காணிப்புக் குடாநாட்டில்...
குழுவிற்கு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான சம்பவங்களைத் தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இப்படியான சம்பவங்கள் இடம்பெறும் போது குடாநாட்டில் நிலை கொண்டுள்ள படையினருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பைக் காட்டுவதுடன் படையினருக்கு எதிராக கிளர்ந்தெழும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
இவற்றை பார்க்குமிடத்து குடாநாட்டில் பாரிய அசம்பாவிதங்கள் நிகழும்சாத்தியம் இருப்பதாகவும் குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.virakesari.lk/VIRA/20051204/hea...dline_news2.htm
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக படையினரின் கெடுபிடி அதிகரித்திருப்பதாக பல தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக வீதிச் சோதனைகள், வீதி ரோந்து அதிகரித்திருப்பதுடன் அசம்பாவிதம் நடக்கும் இடங்களில் படையினரின் பிரசன்னம் இருப்பதையும் காண முடிகின்றது. இதனால் படையினருக்கு எதிராக குடாநாட்டு இளைஞர்கள் கிளர்ந்தெழும் நிலையும் அங்கு ஏற்பட்டுவருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் பின்பே இத்தகைய கெடுபிடிகள் அதிகரித்திருப்பதாகவும் குடாநாட்டில் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதியும் கண்காணிப்புக் குழுவிடம் இது குறித்து அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இராணுவ கெடுபிடிகள், துப்பாக்கி பிரயோகம் என்பன தமிழ்த்தேச விடுதலைப்பற்றாளர்களை அழித்தொழிக்கும் நய வஞ்சகச் செயல்களாகவே உள்ளன என்று அவர் கண்காணிப்புக் குடாநாட்டில்...
குழுவிற்கு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான சம்பவங்களைத் தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இப்படியான சம்பவங்கள் இடம்பெறும் போது குடாநாட்டில் நிலை கொண்டுள்ள படையினருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பைக் காட்டுவதுடன் படையினருக்கு எதிராக கிளர்ந்தெழும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
இவற்றை பார்க்குமிடத்து குடாநாட்டில் பாரிய அசம்பாவிதங்கள் நிகழும்சாத்தியம் இருப்பதாகவும் குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.virakesari.lk/VIRA/20051204/hea...dline_news2.htm
" "

