12-02-2005, 11:35 PM
Quote:சிற்றிடை சிறிய இடை
இடைவெளி இடையே வெளி
என் விழி வழியே உள்ளே
இதழ் இடை பதிக்கும் தேடல்
தேடிய பொருள் ஓடிய கணம்
வாடிய கொடியாய் விலகிய ஆடை
முறுகிய நரம்பு கிறுகிய தலை
வெறித்த பார்வை தேடலின் தேடல்
இசை ஒத்த அவள் முனகல்
பசிக்கு வாசமாய் ஏய்க்க
என் வசமாய் அவள் ஈர்க்க
தேடலின் தேடல் இடையிலே தொடங்க
மூடிய அவள் கருங்குவளைக் கண்
அரை வெளியாய் பார்க்க வெறிக்க
தேடலின் தேடல் தீவிரமாக....
ஒருகை பதித்து பதிந்த தடம் சிவக்க
மறுகை உதவிக்கு அழைக்க
மேவிய அவள் இடை இனிப்பாய்
மேலிரு கனி வாவேன
கீழ் மருவு அருவியாய்
தயங்கிய கைகள் ஈரிடம் ஓட
ஒரு கை கனிபறிக்க பரக்க
மறுகை மெல்லிடை வருடி இறக்க
மேல்கை மேலாடை மெல்ல விலக்க
வெள்ளையாய் வெளிறிய உடலில்
சிவந்த தடங்கள் உன்மத்தம் ஏற்ற
கைகளின் தேடல் கண்ளை கைது செய்தது
மைவிழியோசை காதை நிறைத்தது
இனி தேடலை விடுதல் துர்லபம்
<b>மெல்லிய பட்டு பட்டென விடுத்தது
சட்டென மொட்டு கட்டு அவிழ்த்தது
சுட்டது, அது சுடுமோ?
பட்டது மனதில் விரல்கள் தொட்ட(அ)து
சட்டென கனிகள் கைக்கு வந்தது
மெல்லிய பழம் இனிக்குமோ?</b>
இந்த இடைவெளி
யார் வசமோ.
கவிதை நன்றாக இருக்கிறது.
ஆனாலும் கவிதையின் இடையிடையே குழம்பிப் போய் இருக்கிறது. இந்தக் கவிதை ஒரு நிகழ்வை கவிதைக்குரிய அழகியலுடன் காட்சிப்படுத்த முயல்கிறது. ஆனால் சில logic பிழைகள் உள்ளன.
உதாரணமாக:
வாடிய கொடியாய் விலகிய ஆடை
...
மேல்கை மேலாடை மெல்ல விலக்க
...
மெல்லிய பட்டு பட்டென விடுத்தது
...
மூன்று வெவ்வெறு இடங்களில் ஆடை அவிழ்தல் பற்றி சொல்லப்படுகிறது. கவிதை எழுதியவர் பிடித்து வந்த நூலை இடையிடையே தவறவிட்டுவிட்டார் போல் இருக்கிறது. தொடர்பற்றுப் போய், மறுபடி புதிதாய் தொடங்குவது போன்ற உணர்வைத் தருகின்றது. அதாவது ஒரு விடயத்தை தொடங்கி அதை தொடராமல் இடையிலேயே முறித்து, பின்பு வேறொரு இடத்திலிருந்து பதிதாய் தொடங்கப்படுகிறது கவிதை.
//தயங்கிய கைகள் ஈரிடம் ஓட
ஒரு கை கனிபறிக்க பரக்க
மறுகை மெல்லிடை வருடி இறக்க
மேல்கை மேலாடை மெல்ல விலக்க//
இதில மூன்று "கை" குறிப்பிடப்படுகின்றன. :roll:
இப்படி சில பிழைகள் இருந்தாலும், கடைசியில் வருகிற இந்த வரிகள்:
<b>மெல்லிய பட்டு பட்டென விடுத்தது
சட்டென மொட்டு கட்டு அவிழ்த்தது
சுட்டது, அது சுடுமோ?
பட்டது மனதில் விரல்கள் தொட்ட(அ)து
சட்டென கனிகள் கைக்கு வந்தது
மெல்லிய பழம் இனிக்குமோ?</b>
சந்தத்துடன் மிக அழகாக எழுதப்பட்டிருக்கின்றன (சில இலக்கணப் பிழைகள் இருந்தாலும்). மீள மீள வாசிக்க வைக்கும் வரிகள்.
பிழைகளைத் திருத்தி மெருகூட்டினால் நல்லதொரு கவிதையாக அமையும்.
நன்றி

