12-02-2005, 09:50 PM
யாழ் கொதிக்கின்றது
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மொத்தம் 7 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 4 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
சாவகச்சேரியில் பிற்பகலிலும் மாலையிலும் முதலில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பின்னர் தம்புத்தோட்டம் சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த மீசாலை மற்றும் அல்லாரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வலிகாமம் குப்பிலான் சந்தியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
யாழ்ப்பாணம் நகரத்தில் ப்ரவுன் சாலை-அரசடி சாலை சந்திப்பில் இந்து மகளில் கல்லுரிக்கு அண்மித்த பகுதியில் சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிக்கு வெளியே நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஏறாலையைச் சேர்ந்த சண்முகநாதன் சிவனேசுவரன்(வயது 25) என்பவர் படுகாயமடைந்தார். அவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி மந்திகையில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகம் மீது வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலையடுத்து ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா படைத் தரப்பினர் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
முன்னதாக சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ முகாம் மீது பிற்பகல் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இதே முகாம் மீது மாலை 3.30 மணியளவில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மேலும் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
சாவகச்சேரி பிரதேச சபைக்கு எதிர்ப்புறம் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் மீது மாலை 4.30 மணியளவில் மூன்றாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எவருக்கும் காயமேற்படவில்லை.
இந்தத் தொடர் தாக்குதல்களையடுத்து சாவகச்சேரியில் பதற்ற சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.குடா முழுமைக்கும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
<img src='http://img526.imageshack.us/img526/4048/jaffhartal56wf.jpg' border='0' alt='user posted image'>
யாழ்ப்பாணம் நீர்வேலி அத்தியார் கல்லுரி அருகே இரு தமிழ் இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமும் ஆயுதக் குழுக்களும் காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ் இளைஞர்களின் படுகொலையைக் கண்டித்து இன்று யாழ்ப்பாணம் முழுமைக்கும் முழு அளவிலான கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
<img src='http://img526.imageshack.us/img526/1333/jaffhartal14kw.jpg' border='0' alt='user posted image'>
இதனிடையே உறுமும் மக்கள் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் துண்டுப் பிரசுரங்களில், தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவத்தினரும் படையினரும் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
<img src='http://img526.imageshack.us/img526/2088/jaffhartal43ov.jpg' border='0' alt='user posted image'>
நன்றி புதினம் மற்றும் சங்கதி
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மொத்தம் 7 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 4 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
சாவகச்சேரியில் பிற்பகலிலும் மாலையிலும் முதலில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பின்னர் தம்புத்தோட்டம் சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த மீசாலை மற்றும் அல்லாரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வலிகாமம் குப்பிலான் சந்தியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
யாழ்ப்பாணம் நகரத்தில் ப்ரவுன் சாலை-அரசடி சாலை சந்திப்பில் இந்து மகளில் கல்லுரிக்கு அண்மித்த பகுதியில் சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிக்கு வெளியே நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஏறாலையைச் சேர்ந்த சண்முகநாதன் சிவனேசுவரன்(வயது 25) என்பவர் படுகாயமடைந்தார். அவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி மந்திகையில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகம் மீது வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலையடுத்து ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா படைத் தரப்பினர் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
முன்னதாக சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ முகாம் மீது பிற்பகல் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இதே முகாம் மீது மாலை 3.30 மணியளவில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மேலும் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
சாவகச்சேரி பிரதேச சபைக்கு எதிர்ப்புறம் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் மீது மாலை 4.30 மணியளவில் மூன்றாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எவருக்கும் காயமேற்படவில்லை.
இந்தத் தொடர் தாக்குதல்களையடுத்து சாவகச்சேரியில் பதற்ற சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.குடா முழுமைக்கும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
<img src='http://img526.imageshack.us/img526/4048/jaffhartal56wf.jpg' border='0' alt='user posted image'>
யாழ்ப்பாணம் நீர்வேலி அத்தியார் கல்லுரி அருகே இரு தமிழ் இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமும் ஆயுதக் குழுக்களும் காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ் இளைஞர்களின் படுகொலையைக் கண்டித்து இன்று யாழ்ப்பாணம் முழுமைக்கும் முழு அளவிலான கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
<img src='http://img526.imageshack.us/img526/1333/jaffhartal14kw.jpg' border='0' alt='user posted image'>
இதனிடையே உறுமும் மக்கள் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் துண்டுப் பிரசுரங்களில், தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவத்தினரும் படையினரும் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
<img src='http://img526.imageshack.us/img526/2088/jaffhartal43ov.jpg' border='0' alt='user posted image'>
நன்றி புதினம் மற்றும் சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

