11-30-2005, 02:03 AM
யோ....... என்ன விட்டா எல்லாரும் பாட்டுக்கு அளந்துகொண்டு போறீங்கள். உங்கள் கதைகளைப் பார்த்தால் அண்மையில் வந்த தங்கர்பச்சானின் திரைப்பட பாடல் ஒன்றைத்தான் நினைவு படுத்துகின்றது. " வீடு பணம் தோட்டமெண்டு வசதியாக வாழ்ந்தால் வயிற்றெரிச்சலைக் கொட்டும் இந்த ஊர். வாழ்வும் வசதியும் இழந்து கீழே போனால் கேலியாக சிரிக்கும்" இப்படி இரண்டும் கெட்டான் ஊரில மனிதனாக வாழ்வதெப்படி? பாலுமகேந்திரா என்பவர் திறமையான ஒளிப்பதிவாளன், இயக்குனர்.......... அவர் ஈழத்தமிழர் பற்றிய திரைப்படத்தை எப்பவோ படைத்திருக்க முடியும், ஆனால் அங்கே இருக்கக் கூடிய எதிர்ப்புகளைத்தாண்டி அவற்றை சாதிப்பது அவரிக்கு கடினமான காரியமாக இருக்கலாமல்லவா? மணிரத்தினம் என்னத்தையும் எடுத்துவிடலாம். பாலச்சந்தரும் எதையும் எடுத்துவிடலாம், ஆனால் பாரதிராசாவும் பாலுமகேந்திராவும் எதனையும் எடுக்கும் நிலை இந்தியாவைப் பொறுத்தவரையும் இல்லை. காற்றுக்கென்ன வேலி கதைய சொன்னதுக்கே என்ன பாடு படுத்தினவங்கள் மதிப்பிற்குரிய புகழேந்தி ஐயா அவர்களை. ஏதோ நாலுபேர் பேசுறாங்க எண்டு போட்டு நானும் பேசக்கூடாது.

