11-27-2005, 12:36 AM
வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 6
அன்றில் இருந்து சண், வேணியின் குடும்பத்தினரோடு மிகவும் மரியாதையுடன் பழகத் தொடங்கினான். ஒரு நாள் வேணியுடன் "ஏன் நீங்கள் உங்கள் அண்ணாவை பற்றி ஏதுவுமே கதைப்பதில்லை." என்று கேட்டான்.
"அப்பா சொல்லுவார் தன் பிள்ளை என்று சொல்ல முடியாது அண்ணா தமிழ் மக்களின் சொத்து அவருக்காக பெருமைப்படவேண்டும். அழுவதற்காக இல்லை என்று சொல்லுவார். தனியே இருந்து கவலை படுவார் எங்கள் முன்னால் பெருமையாக பேசுவார்." என்று சொன்ன வேணி மௌனமாக சண் முகத்தையே பார்த்தபடி இருந்தா.
"சரி வேணி நீங்க கேட்ட நோட்ஸ் புத்தகம் எல்லாம் எடுத்து வைத்து இருக்கிறேன் இருங்கோ தாறேன்" என்று எடுத்துக் கொடுத்தான் திறந்து பார்த்தவள் சொன்னாள் "இப்படி அழகான எழுத்து இருக்கும் ஆம்பிளை அம்மாவிடம் மரியாதையா இருப்பினம் என்று அம்மா சொன்னா உண்மை தான் " என்று சிரித்து விட்டுப் போனபோது, சண் அம்மா சொன்னா "தம்பி இனிமேல் வேணி குடும்பத்தை தனியாக பிரித்து பார்க்கக் கூடாது எங்கள் உறவுகளில் முக்கியம் அவை தான் தியாகம் பண்ணியும் பெருமையாக இருக்காமல் எங்களுக்கு உதவி பண்ணிய வேணியின் அப்பா உண்மையிலே மாவீரரை பெற்ற கனவான் தான்" என்று கண்கள் பனிக்க சொன்னா.
அன்று அப்பாவின் கடிதம் வந்தது அதிலே ஓர் துயரமான செய்தி மாலினி அண்னா ஆனையிறவு தாக்குதலில் காணாமல் போனதாக இராணுவ தலைமைப்பீடம் அறிவித்ததுடன், எந்த கொடுப்பனவுகளும் இன்றி மிகவும் கஸ்ரத்தில் மாலினி படிப்பை நிருத்தி விட்டு, சண் அப்பாவிடம் 80000 ரூபா கடனாக வாங்கி ஒரு வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்று மூன்று மாதத்தில் அந்த வீட்டுகாரனின் தொல்லையால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து விட்டதாக இலங்கை தூதரகம் அறிவித்ததாம் என்றும், ஆனால் அது தற்கொலை இல்லை கொலை என்று அங்கே இருந்து வந்தவர்கள் சொன்னதாகவும்.அதனால் மாலினி அப்பாவுக்கும் சித்தபிரமை பிடித்து அலைவதாகவும் அப்பா எழுதி இருந்தார்.... வாசித்த சண் அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.
போரில் எத்தனை குடும்பங்கள் இப்படி இனவெறியால் அழிகின்ற நாடு சொந்த ஊரிலே அடையாள அட்டையுடன் அலைகின்ற இனம் எம்மினம் தான்.
அவனுக்கு ஏதோ வேணியின் முகம் தான் அவன் முன் வந்தது சரி என்ன செய்வது என்று அவனுக்கு பல்கலை கழகம் தொடங்க முதல்வேணிக்கு கொஞ்சம் பாடங்கள் சொல்லி கொடுக்க சொல்லி வேணி அப்பா கேட்டார் "தம்பி, வேணி யாழ்ப்பானம் போவது சிரமம் என்று சொல்லி ரியூசனுக்கு போகாமல் நிக்கிறா. என்ன என்று கேளுங்கோ தம்பி" என்று சொல்லிவிட்டு போனார்.
வேணியிடம் போனபோது எங்கோ பார்த்தபடி இருந்தா "வேணி, வேணி என்ன யோசனை" என்று கேட்டபோது அவனை நோக்கி திரும்பிய வேணியின் கண்களில் ஈரம் "என்ன வேணி" என்று பதறியபடியே கேட்ட சண்ணிடம் "இல்லை நான் ரியூசனுக்கு போகும் போது சந்தியில் நிக்கும் பொடியங்கள் சரியான கஸ்ரம் கொடுக்கினம் பின்னாலே வந்தபடி கீழ்தரமாக கதைகினம் என்னால் அவமான படமுடியாது அப்பாவிடம் சொன்னால் வீண்பிரச்சனை வரும் படிப்பை விட எனக்கு அப்பாவின் சந்தோசம் முக்கியம் அதுதான் ரியூசனுக்கு போகவில்லை" என்று கண்கலங்கியபடியே சொன்ன வேணியிடம் "சரிவேணி நாளைக்கு நானும் வாறேன் வாங்கோ ரியூசனுக்கு இனிமேல் யாரும் உங்களிடம் வாலாட்ட முடியாது" என்று ஆத்திரத்துடன் சொன்ன சண் "காலமை எத்தனைமணிக்கு போகவேணும்" என்று கேட்டுவிட்டு "9.00 தானே நான் வாறன் ஒன்றாகவே போவோம்" என்று ஆறுதலாக சொன்னபோது வேணியின் இமைகள் தன்னை அறியாமலே படபடத்தன ஒரு மனதுக்கு பிடித்த துணை கிடைத்த நிம்மதி அந்தமுகத்தில் வந்தது
-தொடரும்-
அன்றில் இருந்து சண், வேணியின் குடும்பத்தினரோடு மிகவும் மரியாதையுடன் பழகத் தொடங்கினான். ஒரு நாள் வேணியுடன் "ஏன் நீங்கள் உங்கள் அண்ணாவை பற்றி ஏதுவுமே கதைப்பதில்லை." என்று கேட்டான்.
"அப்பா சொல்லுவார் தன் பிள்ளை என்று சொல்ல முடியாது அண்ணா தமிழ் மக்களின் சொத்து அவருக்காக பெருமைப்படவேண்டும். அழுவதற்காக இல்லை என்று சொல்லுவார். தனியே இருந்து கவலை படுவார் எங்கள் முன்னால் பெருமையாக பேசுவார்." என்று சொன்ன வேணி மௌனமாக சண் முகத்தையே பார்த்தபடி இருந்தா.
"சரி வேணி நீங்க கேட்ட நோட்ஸ் புத்தகம் எல்லாம் எடுத்து வைத்து இருக்கிறேன் இருங்கோ தாறேன்" என்று எடுத்துக் கொடுத்தான் திறந்து பார்த்தவள் சொன்னாள் "இப்படி அழகான எழுத்து இருக்கும் ஆம்பிளை அம்மாவிடம் மரியாதையா இருப்பினம் என்று அம்மா சொன்னா உண்மை தான் " என்று சிரித்து விட்டுப் போனபோது, சண் அம்மா சொன்னா "தம்பி இனிமேல் வேணி குடும்பத்தை தனியாக பிரித்து பார்க்கக் கூடாது எங்கள் உறவுகளில் முக்கியம் அவை தான் தியாகம் பண்ணியும் பெருமையாக இருக்காமல் எங்களுக்கு உதவி பண்ணிய வேணியின் அப்பா உண்மையிலே மாவீரரை பெற்ற கனவான் தான்" என்று கண்கள் பனிக்க சொன்னா.
அன்று அப்பாவின் கடிதம் வந்தது அதிலே ஓர் துயரமான செய்தி மாலினி அண்னா ஆனையிறவு தாக்குதலில் காணாமல் போனதாக இராணுவ தலைமைப்பீடம் அறிவித்ததுடன், எந்த கொடுப்பனவுகளும் இன்றி மிகவும் கஸ்ரத்தில் மாலினி படிப்பை நிருத்தி விட்டு, சண் அப்பாவிடம் 80000 ரூபா கடனாக வாங்கி ஒரு வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்று மூன்று மாதத்தில் அந்த வீட்டுகாரனின் தொல்லையால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து விட்டதாக இலங்கை தூதரகம் அறிவித்ததாம் என்றும், ஆனால் அது தற்கொலை இல்லை கொலை என்று அங்கே இருந்து வந்தவர்கள் சொன்னதாகவும்.அதனால் மாலினி அப்பாவுக்கும் சித்தபிரமை பிடித்து அலைவதாகவும் அப்பா எழுதி இருந்தார்.... வாசித்த சண் அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.
போரில் எத்தனை குடும்பங்கள் இப்படி இனவெறியால் அழிகின்ற நாடு சொந்த ஊரிலே அடையாள அட்டையுடன் அலைகின்ற இனம் எம்மினம் தான்.
அவனுக்கு ஏதோ வேணியின் முகம் தான் அவன் முன் வந்தது சரி என்ன செய்வது என்று அவனுக்கு பல்கலை கழகம் தொடங்க முதல்வேணிக்கு கொஞ்சம் பாடங்கள் சொல்லி கொடுக்க சொல்லி வேணி அப்பா கேட்டார் "தம்பி, வேணி யாழ்ப்பானம் போவது சிரமம் என்று சொல்லி ரியூசனுக்கு போகாமல் நிக்கிறா. என்ன என்று கேளுங்கோ தம்பி" என்று சொல்லிவிட்டு போனார்.
வேணியிடம் போனபோது எங்கோ பார்த்தபடி இருந்தா "வேணி, வேணி என்ன யோசனை" என்று கேட்டபோது அவனை நோக்கி திரும்பிய வேணியின் கண்களில் ஈரம் "என்ன வேணி" என்று பதறியபடியே கேட்ட சண்ணிடம் "இல்லை நான் ரியூசனுக்கு போகும் போது சந்தியில் நிக்கும் பொடியங்கள் சரியான கஸ்ரம் கொடுக்கினம் பின்னாலே வந்தபடி கீழ்தரமாக கதைகினம் என்னால் அவமான படமுடியாது அப்பாவிடம் சொன்னால் வீண்பிரச்சனை வரும் படிப்பை விட எனக்கு அப்பாவின் சந்தோசம் முக்கியம் அதுதான் ரியூசனுக்கு போகவில்லை" என்று கண்கலங்கியபடியே சொன்ன வேணியிடம் "சரிவேணி நாளைக்கு நானும் வாறேன் வாங்கோ ரியூசனுக்கு இனிமேல் யாரும் உங்களிடம் வாலாட்ட முடியாது" என்று ஆத்திரத்துடன் சொன்ன சண் "காலமை எத்தனைமணிக்கு போகவேணும்" என்று கேட்டுவிட்டு "9.00 தானே நான் வாறன் ஒன்றாகவே போவோம்" என்று ஆறுதலாக சொன்னபோது வேணியின் இமைகள் தன்னை அறியாமலே படபடத்தன ஒரு மனதுக்கு பிடித்த துணை கிடைத்த நிம்மதி அந்தமுகத்தில் வந்தது
-தொடரும்-
inthirajith

