11-26-2005, 04:17 PM
வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 5
பாம்பை தேடிய படியே அடித்தடம் பார்த்து போனவன் கோடிக்கை போனான் அங்கே விறகு கும்மலுக்குள் பாம்பு போனதைக் கண்டான். ஒரு தடியுடன் பாம்பை தேடியபடியே இருக்கும் போது, அங்கே வந்த அவன் ஆசையுடன் வளர்த்த ஜோன் நாய்குட்டி பாம்பைப் பார்த்ததும் ஒரே பாய்ச்சல் அவனால் பாம்பை அடிக்கமுடியவில்லை. ஆசையாய் வளர்த்த ஜோன் பாம்பிடம் கடி வாங்கினாலும் பிடித்தபிடியை விடாமலே சண்டை இட்டது. இறுதியில் அவன் ஆசையாய் வளர்த்த நாய் குட்டி பாம்புடன் சேர்ந்து உயிரை விட்டபோது அவன் மனம் நொறுங்கித் தான் போனான்.
கண்ணோரம் ஈரம் கசிய விராந்தையில் வந்து இருந்தவனிடம் அம்மா வந்து "என்னதம்பி நடந்தது" என்று கேட்டபோது நடந்ததை சொல்லி கலங்கினான்.
வேணியின் அப்பா சந்தைக்கு போகும் போது அவர்கள் வீட்டுக்கும் தேவையானதை கேட்டு உதவி செய்வார். மரக்கறி கூட மலிவாக, புதியதாக வாங்கித் தருவார் மிகவும் மரியாதையாக பழகுவார்.
சண் அவருடன் "அம்மா, வேணி அப்பா சந்தைக்கு போறாராம் நானும் அவருடன் போகிறேன்" என்று சொல்லிவிட்டு காசையும் அம்மாவிடம் வாங்கி கொண்டு மருதனாமடம் சந்தைக்கு வேணியின் அப்பாவுடன் போனான். போகும்போது வழி முழுக்க அவர் அவனிடம் அன்பாகவே கதைத்துக் கொண்டு வந்தார். இந்தியன் ஆமியிடம் பட்டபாடுகள். போராட்டகாலத்தில் வீட்டில் வந்து மறைந்து இருந்தபோராளிகள். அதனால் ஏற்பட்ட இன்னல்கள் என்று சொன்னபோது அந்தநேரத்தில் தாங்கள் மட்டும் கொழும்பில் அதன் கஸ்ரம் புரியாமல் இருந்தது பற்றி ஏதோ வெட்கம் வந்தது நிஜம் தான்.
"சரி தம்பி நேரம் கிடக்கு நாங்கள் இணுவில் போவோமா வேணி சொன்னா உங்களுக்கு ரோஜா என்றால் பிடிக்குமாம் என்று வாங்கோ" என்று அவனையும் அழைத்துகொண்டு இணுவில் ரோஜா தோட்டம் பார்க்கப் போனார்கள். உண்மையிலே அழகான தோட்டம் தான் பதியன்களும் ஏதோ தேவலோகம் போல் இருந்தது சரி என்று பிடித்தகலரில் ஜந்து ரோஜாக்களும் வாங்கியபோது, பணம் கொடுக்க அந்த தோட்டகாரர் சொன்னார் "தம்பி உங்களுடன் வந்தவர் ஒரு மாவீரனின் அப்பா அவருக்கு ஏதோ என்னால் செய்யமுடிந்த மரியாதை காசுவேணாம் தம்பி" என்று மரியாதையாக சொன்னபோது அவனால் நம்பமுடியவில்லை.
வரும் வழியில் அவனால் அடக்கமுடியாமல் வேணியின் அப்பாவிடம் கேட்டான் உண்மையா அவர் சொன்னது என்று "ஓம் தம்பி வேணியின் மூத்த அண்ணாதான் மாவீரர் இப்போ நடந்து ஐந்து வருடங்கள் ம்ம்.." என்று சொல்லிவிட்டு மௌனத்துடன் சைக்கிளை மிதிக்க தொடங்கினார்கள் சந்தையில் பொருட்கள் வாங்கியபோதும் மௌனமகவே இருந்தார்கள்.
வரும் வழியில் சண் மௌனத்தை கலைத்தான் "எப்பிடி நடந்தது".
"ம்ம் அது தம்பி இந்தியன் ஆமியோட அடிபட்டுதான் மாவீரர் ஆனவர்" என்று சொல்லியபோது எப்போதுமே புன்னகை புரிந்தபடியே, அன்பை பொழியும் அந்த வேணியின் அப்பா கலங்கியதை கண்ட அவன் மௌனமாகவே வீடுவந்து சேர்ந்தான்
அடுத்தநாள் காலையில் கோபமாக வீடுக்கு வந்தவேணி அவனிடம் ஒன்றுமே பேசாமல் அவன் அம்மாவிடம் போனள். அம்மா கேட்டா "என்ன கோபம் சண்ணுடன் கோபமா கதைக்காமல் வாறீர்" அருகில் வந்த சண்னுடன் ஒன்றுமே கதைக்காமல் முகத்தை தூக்கிவைத்து கொண்டு நிற்க
"அம்மா பூந்தோடத்துக்கு இப்பிடிதான் ஒரு வெருளி பொம்மை வேணும் என்று தேடினனான் அது இங்கே இருக்கு"என்று சிரித்தான். கோபம் குறைந்து முகத்தை சுளித்தபடியே சிரித்தவேணி "என்னை விட்டு விட்டு நீங்கள் மட்டும் ரோஜா வாங்கி கொண்டு வந்தீங்களே சரியா இது" என்று கேட்டாள்.
"கடவுளே நான் வாங்க வேணும் என்று நினைக்கவே இல்லை உங்கள் அப்ப தான் எனக்கு விருப்பம் என்று நீர் சொன்னதை நினைப்பு வச்சு வாங்கி தந்தவர் அதுவும் இலவசமாக கிடைத்தது வாங்கோ பார்ப்போம்" என்று அவளை அழைத்து கொண்டு போன சண் அன்பாகவே கதைத்தபோது "என்ன இண்டைக்கு உங்களிடம் ஏதோ மாற்றம் தெரியுது என்ன என்டு சொல்லுங்கோ என்று கேட்ட வேணியிடம்
"ம்ம் இந்த ரோஜாக்கள் எல்லாம் எனக்கு உரியவை இல்லை வேணி உங்களுக்கு தான் சொந்தம் என்ன" என்றான்
"புதுசா ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள்" என்று சிரித்த வேணியிடம் வேணி இது உங்கள் அண்ணா மாவீரர் என்று சொல்லி எனக்கு தந்தார் அந்த தோட்டக்காரர் இப்படி ஒரு மரியாதைபட்ட குடும்பம் உங்கள் குடும்பம் என்று இன்று தான் புரிஞ்சது ஏன் நீங்கள் எனக்கு இதுவரையும் சொல்லாமல் இருந்தீங்களே வேணி ஏன்" என்று கேட்டபோது கண்கலங்கிய வேணி எங்கள் சோகம் எங்களுடன் இருக்கட்டுமென்று சொல்லி விட்டுப் போனாள்.
வேணி போன கையுடனே சண் இன்று தான் கேள்விப்பட்ட செய்தியை அம்மாவிடம் சொன்ன போது, அம்மாவின் பார்வையில் வேணியின் குடும்பம் மதிப்பில் உயர்ந்து விட்டது.
-தொடரும்-
பாம்பை தேடிய படியே அடித்தடம் பார்த்து போனவன் கோடிக்கை போனான் அங்கே விறகு கும்மலுக்குள் பாம்பு போனதைக் கண்டான். ஒரு தடியுடன் பாம்பை தேடியபடியே இருக்கும் போது, அங்கே வந்த அவன் ஆசையுடன் வளர்த்த ஜோன் நாய்குட்டி பாம்பைப் பார்த்ததும் ஒரே பாய்ச்சல் அவனால் பாம்பை அடிக்கமுடியவில்லை. ஆசையாய் வளர்த்த ஜோன் பாம்பிடம் கடி வாங்கினாலும் பிடித்தபிடியை விடாமலே சண்டை இட்டது. இறுதியில் அவன் ஆசையாய் வளர்த்த நாய் குட்டி பாம்புடன் சேர்ந்து உயிரை விட்டபோது அவன் மனம் நொறுங்கித் தான் போனான்.
கண்ணோரம் ஈரம் கசிய விராந்தையில் வந்து இருந்தவனிடம் அம்மா வந்து "என்னதம்பி நடந்தது" என்று கேட்டபோது நடந்ததை சொல்லி கலங்கினான்.
வேணியின் அப்பா சந்தைக்கு போகும் போது அவர்கள் வீட்டுக்கும் தேவையானதை கேட்டு உதவி செய்வார். மரக்கறி கூட மலிவாக, புதியதாக வாங்கித் தருவார் மிகவும் மரியாதையாக பழகுவார்.
சண் அவருடன் "அம்மா, வேணி அப்பா சந்தைக்கு போறாராம் நானும் அவருடன் போகிறேன்" என்று சொல்லிவிட்டு காசையும் அம்மாவிடம் வாங்கி கொண்டு மருதனாமடம் சந்தைக்கு வேணியின் அப்பாவுடன் போனான். போகும்போது வழி முழுக்க அவர் அவனிடம் அன்பாகவே கதைத்துக் கொண்டு வந்தார். இந்தியன் ஆமியிடம் பட்டபாடுகள். போராட்டகாலத்தில் வீட்டில் வந்து மறைந்து இருந்தபோராளிகள். அதனால் ஏற்பட்ட இன்னல்கள் என்று சொன்னபோது அந்தநேரத்தில் தாங்கள் மட்டும் கொழும்பில் அதன் கஸ்ரம் புரியாமல் இருந்தது பற்றி ஏதோ வெட்கம் வந்தது நிஜம் தான்.
"சரி தம்பி நேரம் கிடக்கு நாங்கள் இணுவில் போவோமா வேணி சொன்னா உங்களுக்கு ரோஜா என்றால் பிடிக்குமாம் என்று வாங்கோ" என்று அவனையும் அழைத்துகொண்டு இணுவில் ரோஜா தோட்டம் பார்க்கப் போனார்கள். உண்மையிலே அழகான தோட்டம் தான் பதியன்களும் ஏதோ தேவலோகம் போல் இருந்தது சரி என்று பிடித்தகலரில் ஜந்து ரோஜாக்களும் வாங்கியபோது, பணம் கொடுக்க அந்த தோட்டகாரர் சொன்னார் "தம்பி உங்களுடன் வந்தவர் ஒரு மாவீரனின் அப்பா அவருக்கு ஏதோ என்னால் செய்யமுடிந்த மரியாதை காசுவேணாம் தம்பி" என்று மரியாதையாக சொன்னபோது அவனால் நம்பமுடியவில்லை.
வரும் வழியில் அவனால் அடக்கமுடியாமல் வேணியின் அப்பாவிடம் கேட்டான் உண்மையா அவர் சொன்னது என்று "ஓம் தம்பி வேணியின் மூத்த அண்ணாதான் மாவீரர் இப்போ நடந்து ஐந்து வருடங்கள் ம்ம்.." என்று சொல்லிவிட்டு மௌனத்துடன் சைக்கிளை மிதிக்க தொடங்கினார்கள் சந்தையில் பொருட்கள் வாங்கியபோதும் மௌனமகவே இருந்தார்கள்.
வரும் வழியில் சண் மௌனத்தை கலைத்தான் "எப்பிடி நடந்தது".
"ம்ம் அது தம்பி இந்தியன் ஆமியோட அடிபட்டுதான் மாவீரர் ஆனவர்" என்று சொல்லியபோது எப்போதுமே புன்னகை புரிந்தபடியே, அன்பை பொழியும் அந்த வேணியின் அப்பா கலங்கியதை கண்ட அவன் மௌனமாகவே வீடுவந்து சேர்ந்தான்
அடுத்தநாள் காலையில் கோபமாக வீடுக்கு வந்தவேணி அவனிடம் ஒன்றுமே பேசாமல் அவன் அம்மாவிடம் போனள். அம்மா கேட்டா "என்ன கோபம் சண்ணுடன் கோபமா கதைக்காமல் வாறீர்" அருகில் வந்த சண்னுடன் ஒன்றுமே கதைக்காமல் முகத்தை தூக்கிவைத்து கொண்டு நிற்க
"அம்மா பூந்தோடத்துக்கு இப்பிடிதான் ஒரு வெருளி பொம்மை வேணும் என்று தேடினனான் அது இங்கே இருக்கு"என்று சிரித்தான். கோபம் குறைந்து முகத்தை சுளித்தபடியே சிரித்தவேணி "என்னை விட்டு விட்டு நீங்கள் மட்டும் ரோஜா வாங்கி கொண்டு வந்தீங்களே சரியா இது" என்று கேட்டாள்.
"கடவுளே நான் வாங்க வேணும் என்று நினைக்கவே இல்லை உங்கள் அப்ப தான் எனக்கு விருப்பம் என்று நீர் சொன்னதை நினைப்பு வச்சு வாங்கி தந்தவர் அதுவும் இலவசமாக கிடைத்தது வாங்கோ பார்ப்போம்" என்று அவளை அழைத்து கொண்டு போன சண் அன்பாகவே கதைத்தபோது "என்ன இண்டைக்கு உங்களிடம் ஏதோ மாற்றம் தெரியுது என்ன என்டு சொல்லுங்கோ என்று கேட்ட வேணியிடம்
"ம்ம் இந்த ரோஜாக்கள் எல்லாம் எனக்கு உரியவை இல்லை வேணி உங்களுக்கு தான் சொந்தம் என்ன" என்றான்
"புதுசா ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள்" என்று சிரித்த வேணியிடம் வேணி இது உங்கள் அண்ணா மாவீரர் என்று சொல்லி எனக்கு தந்தார் அந்த தோட்டக்காரர் இப்படி ஒரு மரியாதைபட்ட குடும்பம் உங்கள் குடும்பம் என்று இன்று தான் புரிஞ்சது ஏன் நீங்கள் எனக்கு இதுவரையும் சொல்லாமல் இருந்தீங்களே வேணி ஏன்" என்று கேட்டபோது கண்கலங்கிய வேணி எங்கள் சோகம் எங்களுடன் இருக்கட்டுமென்று சொல்லி விட்டுப் போனாள்.
வேணி போன கையுடனே சண் இன்று தான் கேள்விப்பட்ட செய்தியை அம்மாவிடம் சொன்ன போது, அம்மாவின் பார்வையில் வேணியின் குடும்பம் மதிப்பில் உயர்ந்து விட்டது.
-தொடரும்-
inthirajith

