11-26-2005, 03:06 AM
மகிந்த இதுவரை கடும்போக்காளாராக அறியப்பட்டவர். மகிந்த வென்றதும் கடும்போக்காளர் வென்றார் என்றே மேற்குலக ஊடகங்கள் குறிப்பிட்டன. மேற்குலக அரசுகளின் பார்வையும் அப்படியே இருந்தது. இதனை தொடர்ந்து இன்னொரு கடும் போக்காளரான ரத்னசிறி விக்கரமநாயக்கா பிரதமர் பதவியேற்றது தற்போதைய இலங்கை அரசு கடும் போக்குடையது என்ற தோற்றத்தை வலுப்படுத்தி இருக்கின்றது. இனிமேல் மகிந்த எவ்வளவு தூரம் கடுமையாக நடந்து கொள்கிறாரோ அது அந்த அளவுக்கு புலிகளுக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை புலிகளுக்கு உருவாக்கும். அதையே புலிகள் விரும்புகின்றார்கள். ஆனால் அதை விடுத்து மகிந்த தளர்வு போக்கையோ அல்லது இழுத்தடிக்கும் தந்திரத்தையோ மேற்கொண்டால் அது புலிகளுக்கு நன்மை பயக்காது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

