11-26-2005, 02:47 AM
முதலில் எனது கேள்வியையே புரிந்து கொண்டு பதிலளிக்கத் தெரியவில்லை. அதற்குள் ஜால்ராக்கள் வேறு. டி.என்.கோபாலன் பத்திரிகையாளராகத்தான் மேலுள்ள விடயத்தில் பங்கு பற்றியுள்ளார். பி பி சி வானொலியே தவிர பத்திரிகையல்ல. மேலும் குறிப்பிடப்பட்ட இவ்விடயம் ஒரு இணையத்தளத்தில் தான் வந்துள்ளது. இந்திய இணையத்தளங்களில் வராததன் மர்மம் என்னவோ??? அதற்காக மேன்மேலும் பொய்களைப் புகுத்த வேண்டாம். உண்மையில் இப்படி ஒரு எதிர்ப்பு நிகழ்ச்சி நடந்திருந்தால் எதிர்த்துக் குரல் கொடுத்த பத்திரிகைகள் தங்கள் தலைப்புச் செய்தியில் இதனைப் போட்டிருக்கும். சில இணையத்தளங்களுக்கு மட்டும்தான் குறுக்குத்தனமான செய்திகள் வரும். அதையும் இங்கே காவிவரச் சிலர். சந்திரிக்கா தனது பதவியை இராஜினாமாச் செய்ய மறுத்துப் பிடிவாதம் பிடிப்பதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட அதை விழுந்தடித்து ஒருவர் இங்கே கொண்டு வந்து போட்டார். இப்படி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைப்பவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். பி பி சி செய்திச்சேவை 30 நிமிட நேரங்களே இடம் பெறுகின்றன. அதற்குள் அனைத்துச் செய்திகளையும் சேர்க்கவும் வேண்டும். முடிந்தவரை இலைங்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகின்றது. புலத்தில் நடை பெற்ற சில நிகழ்வுகளும் (ஜெனிவா ஊர்வலம் போன்றன) இடம் பெற்றுமுள்ளன.
<b>உண்மையாகத் து}ங்குவோரை எழுப்பலாம் ஆனால் து}ங்குவது போல் பாசாங்கு செய்வோரை ஒன்றுமே செய்ய முடியாது.</b>
<b>உண்மையாகத் து}ங்குவோரை எழுப்பலாம் ஆனால் து}ங்குவது போல் பாசாங்கு செய்வோரை ஒன்றுமே செய்ய முடியாது.</b>

