Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலக்கியத்தியல் அறிவியல்
#11
நல்ல அறிவார்த்தமான கட்டுரையை இங்கு தந்த ரசிகை அவர்களும் அதன் பின் இன்னும் சில அதனோடியைந்த விடயங்களை எமக்குச் சொன்ன கரிகாலன் அவர்களும் பாராட்டிற்குரியவர்கள்.

குருசேத்திரப் போர் நடந்ததாகக் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்திய ஆய்வாளர்கள் அப்பகுதியில் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதை அவதானித்ததாகவும், அப்பகுதியில் அணுஆயுதம் அல்லது அதை ஒத்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல் கூடும் என்ற துணிபிற்கு அவர்கள் வந்ததாக எங்கோ எப்போதோ வாசித்த ஞாபகம். எங்கே என்பது நினைவு வந்தால் முழுவிபரமும் தர முயற்சிப்பேன்.


வானு}ர்தி பற்றி புறநானு}ற்றில் மட்டுமல்ல யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு சொல்லுமாற்றான் எழுந்த 'யாழ்ப்பாணச் சரித்திரம்" நு}லிலும் 'சங்கிலி மன்னனின் தந்தையார் சிவவழிபாடு செய்யும்பொருட்டு ஒரு பறக்கும் பொறியில் தினசரி தமிழகம் சென்று வந்ததாக' ஒரு குறிப்பு இருக்கிறது.


அடுத்து வள்ளுவரது காலத்தைச் சேர்ந்த நமது தமிழ்க்கவிஞர்கள் எல்லோரும் வான்மதியைப் பெண்களின் முகத்திற்கு உவமைபேசிக்கொண்டிருக்கையில் (வஞ்சப்புகழ்ச்சி அணியில் சொன்னார்களோ என்னவோ?!) வள்ளுவர் மட்டும் 'கிண்ணக்குழிகள் நிறைந்த சந்திரனைப்போல மாதர் முகத்திலே மரு உண்டோ?' என்று வினவியுள்ளமை எனக்கு வியப்பைத் தந்தது.

கலிலியோ கலிலி தொலைநோக்கியை உருவாக்கும்வரையில் எவரும் உறுதிப்படுத்தாத இந்த விடயத்தை வள்ளுவர் அறிந்தது எங்கனம்?

எமது தமிழ் இலக்கிய இலக்கண நு}ல்களை அறிவியற்கண்கொண்டு ஆய்வோமாயின் பல அதிசயங்களை நாம் கண்டுகொள்ளலாம்.

இங்கே ஒரு இயற்பியற் பேராசிரியர் சொன்ன விடயம் எனக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது.

'நால்வேதங்களில் ஒன்றான இருக்கு வேதத்தின் மூலப்பிரதி தற்போது இந்தியாவில் இல்லை. அது இருப்பது ஜெர்மனியின் சுவடிக்கூடத்தில்.

அந்த வேதத்தின் பிரதியில் அணுகுண்டு பற்றிய அறிவியற் குறிப்புகள் இருப்பதாகவும், விஞ்ஞானி ஒப்பன் ஹீமர் அதனைப் படித்து எடுத்துக்கொண்ட குறிப்புகளின் உதவியுடன்தான் அணுகுண்டை வடிவமைத்தார்' என்றும் அந்தப் பேராசிரியர் எனக்குச் சொன்னார்.

ஆனால் நாங்கள் எமது பண்டைய இலக்கண இலக்கியங்களில் சுவை கூட்டுவதற்காகச் சொல்லப்பட்ட விடயங்களில்தான் எமது கருத்தையும் கவனத்தையும் இதுநாள்வரையில் செலுத்திவந்திருக்கிறோம்.

<b>குறிப்பு:</b> மறுதடவை கருத்துக்களத்திற்கு வரும்போது மிகமுக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்பு ஒன்று எவ்வாறு முனிவர் ஒருவரது கூற்றிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது பற்றிய தகவலைத் தருவேன்

<b>அன்புடன் திரு</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 11-07-2005, 02:24 AM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 08:10 AM
[No subject] - by கரிகாலன் - 11-08-2005, 03:23 PM
[No subject] - by கரிகாலன் - 11-08-2005, 03:53 PM
[No subject] - by கரிகாலன் - 11-10-2005, 03:08 PM
[No subject] - by Rasikai - 11-10-2005, 08:34 PM
[No subject] - by ப்ரியசகி - 11-20-2005, 08:41 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 03:14 PM
[No subject] - by thiru - 11-23-2005, 03:06 PM
[No subject] - by Rasikai - 11-24-2005, 12:32 AM
[No subject] - by Selvamuthu - 11-24-2005, 12:58 AM
[No subject] - by RaMa - 11-24-2005, 07:23 AM
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 07:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)