11-22-2005, 07:14 AM
இது வெறுமனே
ஒரு வாரத்தின் ஆரம்பமன்று
புது விடியலுக்கான
ஒரு யுகத்தின் அறிகுறி
விண்ணதிரப் பகை முட்டி
விதையாகி வீழ்ந்த எம்
வீரர்களின் விழாக் காலம்.
களம் சென்று சமராடி
காவியமான எம் காவலரின் திருவிழாக் காலம்.
கருவறுக்க வந்த பகை தனை
கதி கலங்க வைத்துக்
கந்தகப் புகையுடன் கலந்து
காப்பரண்களாகிய எம்
கார்த்திகைத் தீபங்களின் ஒளிவிழாக் காலம்
கண்ணீர்த் துளியெடுத்து நெய்யாக்கி
காந்தள் மலரெடுத்துச் சரமாக்கி
கைதொழுவோம், இது அவர்களின்
பெருவிழாக் காலம்.
ஒரு வாரத்தின் ஆரம்பமன்று
புது விடியலுக்கான
ஒரு யுகத்தின் அறிகுறி
விண்ணதிரப் பகை முட்டி
விதையாகி வீழ்ந்த எம்
வீரர்களின் விழாக் காலம்.
களம் சென்று சமராடி
காவியமான எம் காவலரின் திருவிழாக் காலம்.
கருவறுக்க வந்த பகை தனை
கதி கலங்க வைத்துக்
கந்தகப் புகையுடன் கலந்து
காப்பரண்களாகிய எம்
கார்த்திகைத் தீபங்களின் ஒளிவிழாக் காலம்
கண்ணீர்த் துளியெடுத்து நெய்யாக்கி
காந்தள் மலரெடுத்துச் சரமாக்கி
கைதொழுவோம், இது அவர்களின்
பெருவிழாக் காலம்.

