11-21-2005, 03:27 PM
Quote:இந்தக் கவிதை நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு துளி பனித்துளிக்குள் பாற்கடல் என்று சொல்வார்களே அதற்குப் பொருத்தமான கவிதை.இக்கவிதையை யாராவது விமர்சியுங்களேன்
கருத்தியல்,அழகியல்,வடிவம் எதுவாகிலும்.
Quote:ஒரு வானவில்லைப் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதென்ன குதூகலம்,மழை வரப்போகிறதென்பதற்கு அறிகுறி வானவில்.வண்னமயமான அதன் ஏழு நிறங்கள் அதன் பின்னர் வரப்போகும் நீர்த்தாரை இவை பற்றிய கனவில் இருக்கும் போது அதன் குறுக்கே ஒரு சமாதி தென்பட்டால் உங்கள் உணர்வுகள் எவ்வாறு மாற்றமடையும்
சமாதி அதைப்பார்த்தவுடன் எழும் இறப்பு அதைத்தொடரும் துக்கம் பற்றிய சிந்தனைகள் அதனாலேயே பார்த்தும் ரசிக்க முடியாமல் வீணாகிக்கொண்டிருக்கும் வானவில்.
இரு வேறு முரண்பட்ட விடயங்கள் ஒருங்கே சந்திக்கும் போது ஒன்றின் கனம் இன்னொன்றை விழுங்கிவிடுகிறது.வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதி வானவில்லின் அழகை விழுங்கிவிடுகிறது.அதன் அற்புதமான வண்ணச்சேர்க்கை அழகிழந்து அவலத்தின் குறியீடாய்த் தோற்றமளிக்கின்றது அதை இந்தக் கவிதையில் படிமமாக்கியுள்ளார் கவிஞர்.
ஒருவரின் சிந்தனையை மேவ முயலும் இன்னொரு நோய்க்கூற்றுச் சிந்தனையை வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதியாய்க் கற்பனை பண்னியிருக்கிறார் என நினைக்கிறேன்
ஏன் பிருந்தனண்ணா ஒண்டையும் ஒழுங்கா வாசசிக்காமல் அவசரத்தில எழுதுவீங்களோ???? ஈழவன் அண்ணா தான் புரிஞ்சு கொண்டத எழுதிட்டார் தானே.....புரியாமல் கவிதை எழுதினாத்தான் அது கவிதையெண்டு ஈழவன் அண்ணா சொன்னாரா?????எல்லாருக்கும் எல்லாக் கவிதையும் புரியாது....அது அவையவை வாழுற சூழல காலத்த பொறுத்தது.......அதுக்காக வாழைப்பழக் கவிதையை மட்டுந்தான் போடலாம் பலாப்பழக் கவிதையை போடக்கூடாதெண்டுறத பற்றித்தான் ஈழவன் அண்ணா சொன்னவர்.....
ஈழவன் அண்ணா உந்தக் கவிதைய இங்க போட்டது படிச்சு சுவைக்கிறதுக்கும்....அதபற்றி மற்றாக்களின்ர விமர்சனங்கள தெரிஞ்சு கொள்ளுறதுக்கும் தான்....புரியாதவைக்கெல்லாம் புரியவைக்கோணுமெண்டு அவசியமில்லையே????மற்றது....ஒரு கவிதைய எல்லாரும் ஒரே மாதிரி புரிஞ்சு கொள்ளோணுமெண்டுமில்லையே...???? ஈழவன் அண்ணா கவிதை பற்றின தன்ர புரிதல சொல்லிட்டார்....கவிதை புரியாதவை ஈழவனண்ணா சொன்னத வச்சு மிச்சத்த புரிஞ்சு கொள்ளட்டுமன்....
சரி இந்தக் கவிதைல உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிருக்காண்ணா? புரிஞ்சிருந்தா அத எழுதுங்கோவன்???? புரியாட்டி புரியேல எண்டு எழுதுங்கோவன் முதல்ல.....

