11-21-2005, 01:53 PM
Eelavan Wrote:கவிதையைச் செய்யுள் வடிவில் விளங்கிக்கொள்வதற்கு மொழியறிவு நிறையத் தேவைப்பட்டமையால் அது உரைநடைக்கு மாற்றப்பட்டது.
கவிதையில் நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றம்.கவிதையை எளிமைப்படுத்தியது.எளிமைப்படுத்துதல் என்பது கட்டுரையை வெட்டி படிக்கட்டுக் கவிதைகள் ஆக்குதல் என்று சிலர் நினைக்கிறார்கள்
உதாரணமாக
வாழைப்பழத்தை எடுத்தான்
தோலுரித்தான்
வாயில் வைத்துக் கடித்தான்
மென்று...
விழுங்கினான்
தோலை மெதுவாய்
வீசினான்
வீதியிற் போய்
விழுந்தது
போன்ற வாழைப்பழக் கவிதைகள் தான் எல்லோருக்கும் புரியும் அதற்காக எல்லோரும் வாழைப்பழக் கவிதை எழுதவேண்டும் என்றோ அல்லது பலாப்பழக் கவிதைகளை களத்தில் போடக் கூடாதென்று சொல்லவோ முடியுமா என்ன?
அப்ப மகாகவி,பாரதிதாசன்,கண்ணதாசன்,மேத்தா,வைரமுத்து,அப்துல்ரகுமான்,அறிவுமதி போன்றவர்களின் கவிதைகள் வாழப்பழ கவிதை என்கிறீர்கள், ஏனென்றால் அவர்கள் கவிதைகள் புரிகிறதே, புரியாமல் கவிதை எழுதினால்தான் கவிதை அப்படியா? மகாகவியின் கவிதை புரியார் யார் உளர்?
மகாகவியை விட ஒரு சிறந்த கவிஞன் தமிழில் உளனா?
நல்ல வேடிக்கைதான் போங்கள்.
கவிதைகளை ஏன் களத்தில் இடுகிறீர்கள்? நீங்கள் படித்து சுவைத்த கவிதையை களஉறவுகளும் படிக்கட்டும் என்றுதானே. புரியாத கள உறவுகளுக்கு நீங்கள் படித்து சுவைத்த கவிதையை புரியவைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? ஒன்று புரியவைக்க கூடிய அளவுக்கு எழுத்து வளமற்றவராக நீங்கள் இருக்கவேண்டும், அது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு உங்கள் பதிவுளே சாண்றுபகரும், இன்னொன்று அக்கவிதை உங்களுக்கே புரியாமல் இருக்கவேண்டும், புரியாதவற்றை புரிந்தமாதிரி போடுவதில் என்ன புதிர் இருக்கிறது? அது அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.
சோழியன் அண்ணா உங்களுக்கு விளங்கி இருந்தால், நீங்கள் உங்களுக்கு விளங்கினமாதிரி ஒரு பதிவிடுங்களேன்,
புரியாத உறவுகளுக்கு உதவியாக இருக்குமே. :wink:
.
.
.

