11-18-2005, 10:53 AM
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளரும் சிறிலங்காவின் பிரதமருமான மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.
தாம் வெற்றி பெற்றது தொடர்பாக மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து:
எமக்கு வெற்றி தேடித்தந்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமான அறிவிக்கையை விடுத்த பின்பு சிறிலங்கா மக்களுக்கு உரையாற்ற உள்ளேன். எனது பிறந்தநாளில் எமக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை விட 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் கூடுதாலாக மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளார்.
முற்பகல் 11.17 மணி நிலவரப்படி மகிந்த ராஜபக்ச 48,80,950 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 46,94,632 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அனுராதரபுரம், கொழும்பு மாவட்டத்தின் சில தொகுதிகள், அம்பாறை, கம்பஹா மாவட்டத்தின் பெரும்பான்மை தொகுதிகள், காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனறாலை, புத்தளம், பொலனறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை மகிந்த ராஜபக்ச கைப்பற்றியுள்ளார்.
பதுளை, மட்டக்களப்பு, கொழும்புவின் சில தொகுதிகள், திகாமடுல்ல, கம்பஹாவில் 2 தொகுதிகள், கண்டி, நுவரெலியா, திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களை ரணில் கைப்பற்றியுள்ளார்.
சிறிலங்க அரச தலைவர் தேர்தலை தமிழர் தாயகம் ஒட்டுமொத்தமாகவே புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
http://www.eelampage.com/?cn=21809
தாம் வெற்றி பெற்றது தொடர்பாக மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து:
எமக்கு வெற்றி தேடித்தந்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமான அறிவிக்கையை விடுத்த பின்பு சிறிலங்கா மக்களுக்கு உரையாற்ற உள்ளேன். எனது பிறந்தநாளில் எமக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை விட 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் கூடுதாலாக மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளார்.
முற்பகல் 11.17 மணி நிலவரப்படி மகிந்த ராஜபக்ச 48,80,950 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 46,94,632 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அனுராதரபுரம், கொழும்பு மாவட்டத்தின் சில தொகுதிகள், அம்பாறை, கம்பஹா மாவட்டத்தின் பெரும்பான்மை தொகுதிகள், காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனறாலை, புத்தளம், பொலனறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை மகிந்த ராஜபக்ச கைப்பற்றியுள்ளார்.
பதுளை, மட்டக்களப்பு, கொழும்புவின் சில தொகுதிகள், திகாமடுல்ல, கம்பஹாவில் 2 தொகுதிகள், கண்டி, நுவரெலியா, திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களை ரணில் கைப்பற்றியுள்ளார்.
சிறிலங்க அரச தலைவர் தேர்தலை தமிழர் தாயகம் ஒட்டுமொத்தமாகவே புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
http://www.eelampage.com/?cn=21809

