11-18-2005, 07:20 AM
மிகப் பெறுமதியான ஒரே ஒரு வாக்கு!
நேற்றுநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர் தலில் மிகப்பெறுமதியான வாக்கு ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குக்காக 42 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
யாழ். தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக் கள் வாக்களிப்பதற்கென முகமாலையில் இரா ணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற் கான மொத்தச் செலவு 42 லட்சம் ரூபா என யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முகமாலை இராணுவச் சோதனை நிலையப் பகுதியில் சுமார் 1,500 அடி பிரதேசத்தில் இந் தக் கொத்தணி வாக்களிப்பு நிலையம் அமைக் கப்பட்டது. இதற்கு மட்டும் ரூபா 12 லட்சம் செலவிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக செயலகத் தால் அமர்த்தப்பட்ட வாகனங்களுக்கான செலவு மட்டும் 30 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப் பட்டது.
இது தவிர சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் அங்கு கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர் களுக்கான உணவு, குடிதண்ணீர் என்பவற் றுக்கான செலவு மேலதிகமானது. கொழும்பில் இருந்து இந்த வாக்களிப்பு நிலையத்துக் கென விசேடமாக அனுப்பப்பட்ட ஊழியர் களின் வான் வழியான போக்குவரத்துச் செல வும் மேலதிகமாக இருக்கின்றது.
91 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற் காக இவ்வளவு செலவுகளுடன் பிரமாண்ட மான ஏற்பாடுகளுடன் இந்தக் கொத்தணி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. ஆனால், ஒருவர் மட்டுமே நேற்று இங்கு வாக்களித் தார். கிளிநொச்சியில் இருந்து வந்து அவர் தனது வாக்கைச் செலுத்தினார். ரணிலுக்கே தான் வாக்களித்தார் என்று அவர் தெரிவித் தார்.
Uthayan
நேற்றுநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர் தலில் மிகப்பெறுமதியான வாக்கு ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குக்காக 42 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
யாழ். தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக் கள் வாக்களிப்பதற்கென முகமாலையில் இரா ணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற் கான மொத்தச் செலவு 42 லட்சம் ரூபா என யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முகமாலை இராணுவச் சோதனை நிலையப் பகுதியில் சுமார் 1,500 அடி பிரதேசத்தில் இந் தக் கொத்தணி வாக்களிப்பு நிலையம் அமைக் கப்பட்டது. இதற்கு மட்டும் ரூபா 12 லட்சம் செலவிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக செயலகத் தால் அமர்த்தப்பட்ட வாகனங்களுக்கான செலவு மட்டும் 30 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப் பட்டது.
இது தவிர சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் அங்கு கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர் களுக்கான உணவு, குடிதண்ணீர் என்பவற் றுக்கான செலவு மேலதிகமானது. கொழும்பில் இருந்து இந்த வாக்களிப்பு நிலையத்துக் கென விசேடமாக அனுப்பப்பட்ட ஊழியர் களின் வான் வழியான போக்குவரத்துச் செல வும் மேலதிகமாக இருக்கின்றது.
91 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற் காக இவ்வளவு செலவுகளுடன் பிரமாண்ட மான ஏற்பாடுகளுடன் இந்தக் கொத்தணி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. ஆனால், ஒருவர் மட்டுமே நேற்று இங்கு வாக்களித் தார். கிளிநொச்சியில் இருந்து வந்து அவர் தனது வாக்கைச் செலுத்தினார். ரணிலுக்கே தான் வாக்களித்தார் என்று அவர் தெரிவித் தார்.
Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

