11-17-2005, 05:57 PM
Quote:தேசவிரோத சக்திகளும் சமூகவிரோத சக்திகளும் இராணுவம் மற்றும் அதனுடன் இயங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களால் பாதுகாப்பளிக்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள்..! அவர்களால் மக்கள் படும் இன்னல்கள் எண்ணிலடங்காதவை..! மக்கள் தமது கஸ்டங்களை எடுத்துச் சொல்லியும் அவர்களுக்கு தேசவிரோத சக்திகளும் சமூகவிரோத சக்திகளும் பாதுகாப்பு அளிக்கும் போது
இதனை நீங்கள் உறுதிப்படுத்தித் தான் கதைக்கிறீர்களா..? அந்த 20 வயது திருடனுக்கு தேசவிரோத கும்பல் பாதுகாப்பு கொடுத்தது குறித்து எங்கு அறிந்தீர்கள்.? இதற்கிடையில் அவனை தேசவிரோத கும்பலே கட்டிப் போட்டிருக்கலாம் அதன் மூலம் கலாசாரம் பேணும் குழுவிற்க அபகீர்த்தி உண்டாக்க முயற்சித்திருக்கலாம் என்று கதைகள் உலவுகின்றன.. அது உண்மையானால்.. அந்த திருடன் தியாகி தானே..
அதல்ல பிரச்சனை.. எவரோ அடையாளம் தெரியாத மாடுகள் கொண்டு வந்து கட்டிப்போட.. றோட்டாலை வாறவன் போறவன் எல்லாம் அடித்தப் போடுமளவிற்கு யாழ் மக்களில் அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உளவியலில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதற்கு யுத்தமும் ஒரு காரணம். விரைவில் யுத்தத்தை முடிவக்கு கொண்டு வந்து.. இந்த சமூக காட்டுமிராண்டிகளை சரியான பாதைக்கு திருப்ப வேண்டும்.

