11-17-2005, 03:35 PM
முக்கிய குறிப்பு.
நான் இப்பதிவை எழுதத் தொடங்கும்வரை இது பற்றிய முந்தைய களம் நிறுத்தப்படவில்லை. எனவே அதை நிறுத்த, இங்கே வந்து எழுதுகிறேன் என்று சொல்வது சரியன்று.
மேலும், நான் எதை உறுதிப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
கலாச்சாரம் பேணும் குழு என்ற பெயரில்தானே அறிவிப்பு இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன?
அதைவிட நானே கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஒரு கலாச்சாரம் பேணும் குழுதான் இருக்கிறதா? அதுவொரு நிறுவனப்படுத்தப்பட்ட குழுவா? அல்லது வெறும் அடாவடிக் கும்பலா? அவர்களின் நோக்கம் என்ன? எவையெவற்றைக் கலாச்சார மீறலாகப் பார்க்கிறார்கள்? தண்டனைகள் பற்றி ஏதாவது வரையறைகள் வைத்திருக்கிறார்களா? அல்லது எழுந்தமானத்துக்கு அவரவர் விரும்பியபடி தண்டனையா?
எங்கள் ஊரிலும் இருட்டடி போடும் கும்பல் இருந்தது. குடித்துவிட்டு வருபவர்களுக்கு இருட்டடி போடுவது. அதுவும் கலாச்சாரம் பேணும் கும்பல் என்று தங்களைச் சொல்லிக் கொண்டது.
சரி, இதில் உண்மையில் சமூக அக்கறையுள்ள கலாச்சாரம் பேணும் குழு சம்பந்தப்படவில்லையென்றால் அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டுமே?
புலிகளும் இது விடயத்தில் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டுமே? பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், வார்த்தைகளைக் கொட்ட வேண்டாமென்று சொல்கிறீர்கள். நான் சொன்ன எதற்குமே வருத்தப்படப்போவதில்லை. ஏனென்றால் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். இப்படியொரு கொலை நடக்கவில்லையென்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நான் சொன்னவற்றை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையுண்டு. மற்றும்படி நான் சொன்னவை சரியே.
எதையும் தீர்மானமாக நான் உறுதிப்படுத்திச் சொல்லவில்லை. நான் சொன்னது இது காட்டுமிராண்டித்தனமானதென்பதையே.
இதைப் புலிகள்தான் செய்தார்கள் என்று நாiளைக்குக் கதைவந்தாற்கூட, நான் என் கருத்திலிருந்து மாறப்போவதில்லை.
நிற்க, தமிழ் ஊடகங்கள் இதைப் பெருமையாகத்தானே சொல்கின்றன?
ஏன் தமிழர்கள் பலரும் பெருமையாகத்தான் கதைக்கிறார்கள். இதே இளைஞன் யார் செய்தார் என்பதைப்பொறுத்து துரோகியாகவோ தேசப்பற்றாளனாகவோ மாறக்கூடும்.
இக்கொலையைச் செய்தது ஈ.பி.டி.பி தான் என்றொரு கதைவந்தால் உடனே இந்த இளைஞன் சிலரால் தேசப்பற்றாளனானப் போற்றப்படுவான்.
இப்போதைய நிலைப்படி, இவன் இராணுவ உளவாளி, துரோகி, சமூகச்சீர்கேடுகளில் ஈடுபட்டவன் (இது ஏற்கெனவே ஊடகத்தால் சொல்லப்பட்டாயிற்று) என்ற பட்டங்கள் வரவே சந்தர்ப்பமிருக்கு.
நான் இப்பதிவை எழுதத் தொடங்கும்வரை இது பற்றிய முந்தைய களம் நிறுத்தப்படவில்லை. எனவே அதை நிறுத்த, இங்கே வந்து எழுதுகிறேன் என்று சொல்வது சரியன்று.
மேலும், நான் எதை உறுதிப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
கலாச்சாரம் பேணும் குழு என்ற பெயரில்தானே அறிவிப்பு இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன?
அதைவிட நானே கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஒரு கலாச்சாரம் பேணும் குழுதான் இருக்கிறதா? அதுவொரு நிறுவனப்படுத்தப்பட்ட குழுவா? அல்லது வெறும் அடாவடிக் கும்பலா? அவர்களின் நோக்கம் என்ன? எவையெவற்றைக் கலாச்சார மீறலாகப் பார்க்கிறார்கள்? தண்டனைகள் பற்றி ஏதாவது வரையறைகள் வைத்திருக்கிறார்களா? அல்லது எழுந்தமானத்துக்கு அவரவர் விரும்பியபடி தண்டனையா?
எங்கள் ஊரிலும் இருட்டடி போடும் கும்பல் இருந்தது. குடித்துவிட்டு வருபவர்களுக்கு இருட்டடி போடுவது. அதுவும் கலாச்சாரம் பேணும் கும்பல் என்று தங்களைச் சொல்லிக் கொண்டது.
சரி, இதில் உண்மையில் சமூக அக்கறையுள்ள கலாச்சாரம் பேணும் குழு சம்பந்தப்படவில்லையென்றால் அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டுமே?
புலிகளும் இது விடயத்தில் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டுமே? பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், வார்த்தைகளைக் கொட்ட வேண்டாமென்று சொல்கிறீர்கள். நான் சொன்ன எதற்குமே வருத்தப்படப்போவதில்லை. ஏனென்றால் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். இப்படியொரு கொலை நடக்கவில்லையென்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நான் சொன்னவற்றை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையுண்டு. மற்றும்படி நான் சொன்னவை சரியே.
எதையும் தீர்மானமாக நான் உறுதிப்படுத்திச் சொல்லவில்லை. நான் சொன்னது இது காட்டுமிராண்டித்தனமானதென்பதையே.
இதைப் புலிகள்தான் செய்தார்கள் என்று நாiளைக்குக் கதைவந்தாற்கூட, நான் என் கருத்திலிருந்து மாறப்போவதில்லை.
நிற்க, தமிழ் ஊடகங்கள் இதைப் பெருமையாகத்தானே சொல்கின்றன?
ஏன் தமிழர்கள் பலரும் பெருமையாகத்தான் கதைக்கிறார்கள். இதே இளைஞன் யார் செய்தார் என்பதைப்பொறுத்து துரோகியாகவோ தேசப்பற்றாளனாகவோ மாறக்கூடும்.
இக்கொலையைச் செய்தது ஈ.பி.டி.பி தான் என்றொரு கதைவந்தால் உடனே இந்த இளைஞன் சிலரால் தேசப்பற்றாளனானப் போற்றப்படுவான்.
இப்போதைய நிலைப்படி, இவன் இராணுவ உளவாளி, துரோகி, சமூகச்சீர்கேடுகளில் ஈடுபட்டவன் (இது ஏற்கெனவே ஊடகத்தால் சொல்லப்பட்டாயிற்று) என்ற பட்டங்கள் வரவே சந்தர்ப்பமிருக்கு.

