11-17-2005, 02:46 PM
நல்லவன் உந்த விடயத்தில் எனக்கும் உடன் பாடில்லை. இது போல் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சமீப காலமாக மோட்டார்சைக்கிளில் முகத்தை மறைத்தபடி வரும் குழுவொன்று சந்திகளில் கூட்டமாக நின்ற இளைஞர்கள் மீது மிருகத்தனமாக பொல்லுகளால் தாக்குதல் நடாத்தி வந்ததை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இத்தாக்குதல் தலையிலும் முதுகிலுமே கூடுதலாக நடாத்தப்பட்டிருக்கின்றது.. இவ்விடயத்தை பல சங்கதிகளைத் தரும் இணையத்தளமும் பெருமையாகப் போட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் இதே தளத்தில் இத்தாக்குதலுக்கு வேறு விதமான சாயம் புூசப்பட்டு கருத்தொன்று எழுதப்பட்டிருந்தது.. இந்தத் தாக்குதல்களுக்கு வக்காலத்து வாங்கிய இணையத் தளத்திற்கு உடன் சென்று பார்த்தேன். என்ன ஆச்சரியம் அங்கே அந்தப் பகுதியே நீக்கப்பட்டிருந்தது. சமீப காலமாக பல இணையத்தளங்கள் புதுப்புதுப் பெயர்களுடன் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லா இணையத்தளமும் குறிப்பிட்ட ஒரு குழுவே நடாத்துகின்றன என்பதை அவர்களது செயற்பாடே காட்டிக் கொடுத்துவிடுகின்றன். இதில் என்ன அநியாயம் என்றால் இவர்கள் வேற்று மொழிகளிலும் செய்திகளை இணைக்கின்றார்கள். ஆனால் தமிழிலுள்ள செய்தி ஒன்றாகவும் வேற்று மொழிகளிலுள்ள செய்திகள் வேறொன்றாகவும் இருக்கின்றன. நம் தமிழர்களைப் பற்றி நம்மவர்களே நன்றாகத்தான் கணித்து வைத்திருக்கின்றார்கள். <b>நமக்குள்ளேயே நிறைய ஓட்டைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஓட்டகைளைச் சுட்டிக் காட்டுவதில் நம்மவர்கள் கில்லாடிங்கப்பா</b>

