11-17-2005, 11:08 AM
<!--QuoteBegin-jeya+-->QUOTE(jeya)<!--QuoteEBegin-->ஆதிபன் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீங்கள் என்று நினைக்கிறேன்.
குஸ்பு ஒட்டு மொத்த இந்திய பெண்களையும் கூறாமல் ஏன் தமிழ்நாட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு கூற வேண்டும். தமிழர் என்றால் இழிச்ச வாய்கள் என்று நினைப்பு தானே????
நான் தழிழீழத்தில் பிறந்தேன் அதற்காக எனது தமிழ் உறவுகளை எங்கிருந்தோ பிழைக்க வந்தவ ஏளனமா கூற ஈழத்தமிழன் ஒரு போதும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றாய்ச் சொன்னீர்கள். எனக்கும் இரத்தம் கொதிக்கிறது. அதுவும் தமிழகத்தில் பேருந்துகளில் எழுதப்பட்டிருப்பதாக ஆதிபன் சொன்னதைக் கேட்டபோது எனக்கு மாரடைப்பே வந்துவிட்டது. எவ்வளவு கீழ்த்தரமாக தமிழர்களை அரசு கருதுகிறது.
எங்கள் உயரிய பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஒருவனுக்கு ஒருத்தியென்று விளம்பரம் செய்கிறது?
ஏதோ தமிழர்கள் புகை பிடிப்பவர்கள் என்ற கோணத்தில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளதென்று அறிவிப்புச் செய்கிறது அரசு. பொது இடத்தில் புகைபிடிப்பதைச் சட்ட ரீதியாக் குற்றமாக்கியிருக்கிறது தமிழக அரசு.
இது தமிழர்களை எவ்வளவு தூரம் கேவலப்படுத்தும் செயல்? சிங்களவனுக்கு எதிராகப் போராடுவதைவிட முதலில் தமிழக அரசுக்கும் எயிட்ஸ் விழிப்புக் குழுவுக்குமெதிராகத்தான் நாம் போராட வேண்டும்.
சகோதரத் தமிழர்களுக்கு ஓர் இழிவென்றால் எம்மால் பொறுத்துக்கொள்ள முடியுமா? அப்படிப் பொறுத்திருந்தால் ஈழத்தமிழன் சுரணைகெட்டவனென்று உலகம் ஏசும்.
எனவே புறப்படுவீர் எனதருமை ஈழத்தவர்களே.
முதலில் இந்தியா பிறகு ஐ.நா.
ஏனென்றால் அவர்களும் பாதுகாப்பான பாலுறவு பற்றிப் பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் தொன்மையான பண்பாட்டைக் கேலி பண்ணுகிறார்கள்.
இவர்களுக்கெதிரான "யுத்தத்தில்" நான் முதல் ஆளாக நிற்பேன்.
வாருங்கள் வீரர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே.
குஸ்பு ஒட்டு மொத்த இந்திய பெண்களையும் கூறாமல் ஏன் தமிழ்நாட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு கூற வேண்டும். தமிழர் என்றால் இழிச்ச வாய்கள் என்று நினைப்பு தானே????
நான் தழிழீழத்தில் பிறந்தேன் அதற்காக எனது தமிழ் உறவுகளை எங்கிருந்தோ பிழைக்க வந்தவ ஏளனமா கூற ஈழத்தமிழன் ஒரு போதும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றாய்ச் சொன்னீர்கள். எனக்கும் இரத்தம் கொதிக்கிறது. அதுவும் தமிழகத்தில் பேருந்துகளில் எழுதப்பட்டிருப்பதாக ஆதிபன் சொன்னதைக் கேட்டபோது எனக்கு மாரடைப்பே வந்துவிட்டது. எவ்வளவு கீழ்த்தரமாக தமிழர்களை அரசு கருதுகிறது.
எங்கள் உயரிய பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஒருவனுக்கு ஒருத்தியென்று விளம்பரம் செய்கிறது?
ஏதோ தமிழர்கள் புகை பிடிப்பவர்கள் என்ற கோணத்தில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளதென்று அறிவிப்புச் செய்கிறது அரசு. பொது இடத்தில் புகைபிடிப்பதைச் சட்ட ரீதியாக் குற்றமாக்கியிருக்கிறது தமிழக அரசு.
இது தமிழர்களை எவ்வளவு தூரம் கேவலப்படுத்தும் செயல்? சிங்களவனுக்கு எதிராகப் போராடுவதைவிட முதலில் தமிழக அரசுக்கும் எயிட்ஸ் விழிப்புக் குழுவுக்குமெதிராகத்தான் நாம் போராட வேண்டும்.
சகோதரத் தமிழர்களுக்கு ஓர் இழிவென்றால் எம்மால் பொறுத்துக்கொள்ள முடியுமா? அப்படிப் பொறுத்திருந்தால் ஈழத்தமிழன் சுரணைகெட்டவனென்று உலகம் ஏசும்.
எனவே புறப்படுவீர் எனதருமை ஈழத்தவர்களே.
முதலில் இந்தியா பிறகு ஐ.நா.
ஏனென்றால் அவர்களும் பாதுகாப்பான பாலுறவு பற்றிப் பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் தொன்மையான பண்பாட்டைக் கேலி பண்ணுகிறார்கள்.
இவர்களுக்கெதிரான "யுத்தத்தில்" நான் முதல் ஆளாக நிற்பேன்.
வாருங்கள் வீரர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே.

