11-17-2005, 08:06 AM
<b>இலங்கைத் தீவில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்தச் சமயத்தில் இத் தீவு தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறுகின்ற சில உண்மைகள் கவனிக்கத்தக்கனவாக இருக்கின்றன.
"" இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தனி அரசாக இருந்தது. இந்த வரலாற்று உண்மையை தென்னிலங்கைச் சிங்களம் ஏற்க மறுக்குமானால் அங்கீகரிக்கத் தவறுமானால் அதற்கான விலையை அது ஒருநாள் கொடுக்க நேரிடும். அந்த விலை அதற்கு மிகக் கடுமையானதாக ஈடு செய்யப்பட முடியாத பேரழிவாக இருக்கும்.'' என்று எச்சரித்திருக்கின்றார் அவர். சர்வதேச ஆங்கில ஊடகமான "ரைம்ஸ்' சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
""தமிழர் தாயகம் என்பது வராலாற்று உண்மை. வரலாற்றை ஒருதடவை தென்னிலங்கை திரும்பிப் பார்க்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டுவரை இலங்கைத் தீவில் தமிழர்களுக்கென இறையாண்மையுள்ள ஒரு நாடு இருந்தது. அது வெளிப்படையான உண்மை. உயர்ந்த பண்பாட்டுடனும் கலாசாரத்துடனும், தமிழ் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ்ந்தனர். இழந்துவிட்ட அந்த நாட்டை தமிழ் மக்கள் தற்போது மீட்டு எடுக்கிறார்கள். எமது தாயகத்தில் அறுபது முதல் எழுபது வீதமான எமது தாயகப் பகுதியை விடுதலை செய்துள் ளோம். இந்தச் செயற்பாடு அடுத்த கட்டத்துக்கு நகர்வதை எவ ராலும் தடுக்க முடியாது.'' என்று தெளிவுபடக் கூறியிருக்கின்றார் தமிழ்ச்செல்வன்.
அதுமட்டுமல்ல. இலங்கையின் அரசுக் கட்டமைப்புக் குறித் தும் அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து முக்கியத்துவமானது.
""தென்னிலங்கைத் தரப்பினர் கூறுவது போல ஒற்றையாட்சிக் கோட்பாடு என்பது கற்பனையானது; அர்த்தமற்றது. இந்த உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால் அதற் கான உரிய விலையை கடுமையான, பேரழிவைத் தரக்கூடிய விலையை அவர்கள் கொடுக்க வேண்டியதாயிருக்கும்'' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் இலக்கு முழுமையான அரசியல் விடுதலைதான். அதைப் பேச்சுகளின் ஊடாக அமைதி முயற்சிகள் வாயிலாக அடைய முடியுமானால் அதற்கும் தாங்கள் தயார் என்றும், எனினும் இதில் முடிவெடுப்பது தென்னிலங்கை அரசைச் சார்ந்த விடயம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆக மொத்தத்தில், தமிழர் தாயகம், அவர்களின் தேசியம், சுயநிர்ணயம் ஆகிய விடயங்களை ஏற்பதற்கு தென்னிலங்கைத் தலைமைகள் இணங்காவிடின் விளைவு விபரீதமாகும் என்பதே தமிழ்ச்செல்வன் கூறியுள்ள கருத்துக்களின் சாரமாகும்.
தொன்மைவாய்ந்த புராதனமான இரு நாகரிகங்களின், தேசியங்களின் வரலாற்றுத் தாயகமாகவே இலங்கைத்தீவு விளங்கி வந்திருக்கிறது. பண்பாட்டில், பாரம்பரியத்தில், மொழி யில், கலாசார வேர்களில், வாழிட நிலப்பரப்புகளில், வெவ் வேறான வேறுபட்ட இரு தேசிய இனங்களின் சரித்திர பூர்வத்தயாக மாக களமாக இலங்கைத்தீவு இருந்து வந்திருக்கிறது.
1605 நவம்பர் 18 ஆம் திகதி அதாவது சரியாக நாளைய தினத்துக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தீவில் போர்த்துக்கீசர்கள் காலடி எடுத்துவைத்தபோது இந்த நாட்டில் தமிழர், சிங்களவர் ஆகிய இரு தேசிய இனங்களும் தனித்தனி அரசுகளோடு தனித்தனி இராச்சியங்களோடு வெவ்வேறு நாடுகளாக வசித்துக் கொண்டிருந்ததைக் கண் டார்கள்.
போர்த்துக்கேயர்கள் 1619 இல் தமது அந்நியப்படை எடுப் பின்மூலம் வடக்கைக் கைப்பற்றும்வரை இந்தத் தீவில் தமிழர் தேசம் தனியாகக் கோலோச்சிக்கொண்டிருந்தது.
தமிழர் தாயகத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயரும் அøத் தொடர்ந்து ஒல்லாந்தரும் தமிழர் தாயகத்தை தமது ஆளுகையில் வைத்திருந்த போதும் அதனைத் தனி அரசாகவோ ஆண்டனர்.
ஆனால், அதன் பின்னர் தமிழர் தேசத்தையும் சிங்கள தேசத் தையும் ஒரே சமயத்தில் தமது ஆளுக்கைகுள் கொண்டு வந்த அடுத்த அந்நியரான ஆங்கிலேயர், 1833 இல் தமது வசதிக்காக இந்த இரண்டு தேசங்களையும் ஒன்றாக்கி ஒற்றையாட்சி முறையை நம்மீது திணித்தனர். இப்படித்தான் அந்தியக் குடியேற்ற வாதம் இந்தத் தீவில் ஒரு தேசிய இனத்தின்“ தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அடித்தளமிட்டது.
அப்படி அந்நியக் குடியேற்றத்தினால் பறிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வெளியேறும்போது இத்தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழர்களின் இறையாண்மை. அதை மீட்டெடுக்கவே தமிழர்கள் இப்போது போராடுகின்றார்கள் என்பதை விளக்குகிறார் தமிழ்ச்செல்வன்.
தமிழர் தரப்பின் இந்த நிலைப்பாட்டைத் தெளிவாகப் புரிந்துகொண்டு இன்றைய தேர்தல் குறித்துத் தென்னிலங்கை, தீர்மானம் எடுக்கவேண்டும்.
தென்னிலங்கையில் தெரிவு செய்யப்படப்போகும் தலைமையும், தமிழர் தரப்பின் யதார்த்த பூர்வமான இந்த நிலைப்பாட்டின் நியாயத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற முன்வரு மானால் எதிர்காலம் வளமாக அமையும். அப்படி இல்லாமல் அதுவும் பழைய மாதிரியே பௌத்தசிங்களப் பேரினவாதத்தில் ஊறித் திளைத்த நிலைப்பாட்டையே கைக்கொள்ளுமானால், தமிழ்ச் செல்வன் கூறியமை போன்று விபரீதவிளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கும்.
</b>
http://www.uthayan.com/editor.html
"" இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தனி அரசாக இருந்தது. இந்த வரலாற்று உண்மையை தென்னிலங்கைச் சிங்களம் ஏற்க மறுக்குமானால் அங்கீகரிக்கத் தவறுமானால் அதற்கான விலையை அது ஒருநாள் கொடுக்க நேரிடும். அந்த விலை அதற்கு மிகக் கடுமையானதாக ஈடு செய்யப்பட முடியாத பேரழிவாக இருக்கும்.'' என்று எச்சரித்திருக்கின்றார் அவர். சர்வதேச ஆங்கில ஊடகமான "ரைம்ஸ்' சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
""தமிழர் தாயகம் என்பது வராலாற்று உண்மை. வரலாற்றை ஒருதடவை தென்னிலங்கை திரும்பிப் பார்க்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டுவரை இலங்கைத் தீவில் தமிழர்களுக்கென இறையாண்மையுள்ள ஒரு நாடு இருந்தது. அது வெளிப்படையான உண்மை. உயர்ந்த பண்பாட்டுடனும் கலாசாரத்துடனும், தமிழ் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ்ந்தனர். இழந்துவிட்ட அந்த நாட்டை தமிழ் மக்கள் தற்போது மீட்டு எடுக்கிறார்கள். எமது தாயகத்தில் அறுபது முதல் எழுபது வீதமான எமது தாயகப் பகுதியை விடுதலை செய்துள் ளோம். இந்தச் செயற்பாடு அடுத்த கட்டத்துக்கு நகர்வதை எவ ராலும் தடுக்க முடியாது.'' என்று தெளிவுபடக் கூறியிருக்கின்றார் தமிழ்ச்செல்வன்.
அதுமட்டுமல்ல. இலங்கையின் அரசுக் கட்டமைப்புக் குறித் தும் அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து முக்கியத்துவமானது.
""தென்னிலங்கைத் தரப்பினர் கூறுவது போல ஒற்றையாட்சிக் கோட்பாடு என்பது கற்பனையானது; அர்த்தமற்றது. இந்த உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால் அதற் கான உரிய விலையை கடுமையான, பேரழிவைத் தரக்கூடிய விலையை அவர்கள் கொடுக்க வேண்டியதாயிருக்கும்'' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் இலக்கு முழுமையான அரசியல் விடுதலைதான். அதைப் பேச்சுகளின் ஊடாக அமைதி முயற்சிகள் வாயிலாக அடைய முடியுமானால் அதற்கும் தாங்கள் தயார் என்றும், எனினும் இதில் முடிவெடுப்பது தென்னிலங்கை அரசைச் சார்ந்த விடயம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆக மொத்தத்தில், தமிழர் தாயகம், அவர்களின் தேசியம், சுயநிர்ணயம் ஆகிய விடயங்களை ஏற்பதற்கு தென்னிலங்கைத் தலைமைகள் இணங்காவிடின் விளைவு விபரீதமாகும் என்பதே தமிழ்ச்செல்வன் கூறியுள்ள கருத்துக்களின் சாரமாகும்.
தொன்மைவாய்ந்த புராதனமான இரு நாகரிகங்களின், தேசியங்களின் வரலாற்றுத் தாயகமாகவே இலங்கைத்தீவு விளங்கி வந்திருக்கிறது. பண்பாட்டில், பாரம்பரியத்தில், மொழி யில், கலாசார வேர்களில், வாழிட நிலப்பரப்புகளில், வெவ் வேறான வேறுபட்ட இரு தேசிய இனங்களின் சரித்திர பூர்வத்தயாக மாக களமாக இலங்கைத்தீவு இருந்து வந்திருக்கிறது.
1605 நவம்பர் 18 ஆம் திகதி அதாவது சரியாக நாளைய தினத்துக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தீவில் போர்த்துக்கீசர்கள் காலடி எடுத்துவைத்தபோது இந்த நாட்டில் தமிழர், சிங்களவர் ஆகிய இரு தேசிய இனங்களும் தனித்தனி அரசுகளோடு தனித்தனி இராச்சியங்களோடு வெவ்வேறு நாடுகளாக வசித்துக் கொண்டிருந்ததைக் கண் டார்கள்.
போர்த்துக்கேயர்கள் 1619 இல் தமது அந்நியப்படை எடுப் பின்மூலம் வடக்கைக் கைப்பற்றும்வரை இந்தத் தீவில் தமிழர் தேசம் தனியாகக் கோலோச்சிக்கொண்டிருந்தது.
தமிழர் தாயகத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயரும் அøத் தொடர்ந்து ஒல்லாந்தரும் தமிழர் தாயகத்தை தமது ஆளுகையில் வைத்திருந்த போதும் அதனைத் தனி அரசாகவோ ஆண்டனர்.
ஆனால், அதன் பின்னர் தமிழர் தேசத்தையும் சிங்கள தேசத் தையும் ஒரே சமயத்தில் தமது ஆளுக்கைகுள் கொண்டு வந்த அடுத்த அந்நியரான ஆங்கிலேயர், 1833 இல் தமது வசதிக்காக இந்த இரண்டு தேசங்களையும் ஒன்றாக்கி ஒற்றையாட்சி முறையை நம்மீது திணித்தனர். இப்படித்தான் அந்தியக் குடியேற்ற வாதம் இந்தத் தீவில் ஒரு தேசிய இனத்தின்“ தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அடித்தளமிட்டது.
அப்படி அந்நியக் குடியேற்றத்தினால் பறிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வெளியேறும்போது இத்தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழர்களின் இறையாண்மை. அதை மீட்டெடுக்கவே தமிழர்கள் இப்போது போராடுகின்றார்கள் என்பதை விளக்குகிறார் தமிழ்ச்செல்வன்.
தமிழர் தரப்பின் இந்த நிலைப்பாட்டைத் தெளிவாகப் புரிந்துகொண்டு இன்றைய தேர்தல் குறித்துத் தென்னிலங்கை, தீர்மானம் எடுக்கவேண்டும்.
தென்னிலங்கையில் தெரிவு செய்யப்படப்போகும் தலைமையும், தமிழர் தரப்பின் யதார்த்த பூர்வமான இந்த நிலைப்பாட்டின் நியாயத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற முன்வரு மானால் எதிர்காலம் வளமாக அமையும். அப்படி இல்லாமல் அதுவும் பழைய மாதிரியே பௌத்தசிங்களப் பேரினவாதத்தில் ஊறித் திளைத்த நிலைப்பாட்டையே கைக்கொள்ளுமானால், தமிழ்ச் செல்வன் கூறியமை போன்று விபரீதவிளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கும்.
</b>
http://www.uthayan.com/editor.html
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

