11-17-2005, 01:30 AM
சஞ்சீவ்காந்த் அவர்களின் 'உராய்வு' கவிதைத் தொகுப்பிலிருந்து ஓர் கவிதை..
செயற்படு(பொருள்)
<img src='http://tamilamutham.net/images/stories/kavithai/seyatpadu.jpg' border='0' alt='user posted image'>
இருட்டைக்
கவிழ்த்து
வெளிச்சத்தின் மேல்
ஏறி நில்.
சுதந்திரத்தை
விரி
உலகை அதில்
கிடத்து
பண்பாட்டால்
போர்த்து
சமுதாயத்தை
நிர்வாணப்படுத்து
அதன் காயங்களில்
முத்தமிடு
அழுக்குகளை
நக்கு.
உண்மைகளைக்
கட்டிப்பிடி
உன் சொல்லைக்
கவ்விப்பிடி.
காலத்தை
நடத்து
வேகத்தை
முந்து.
முரண்படு
முட்டிமோது
உடன்படு
ஒட்டி உரசு
திறன்படு
தீர அனுபவி.
வாழ்க்கையைக்
கொண்டாடு
வரலாற்றில்
நின்றாடு.
ஆசைகளோடு
உறவுகொள்
தேவைகளைக்
கருத்தரி
தேடல்களைப்
பிரசவி.
பழசை மென்று
புதுசாய்த் துப்பு.
செயற்படு(பொருள்)
<img src='http://tamilamutham.net/images/stories/kavithai/seyatpadu.jpg' border='0' alt='user posted image'>
இருட்டைக்
கவிழ்த்து
வெளிச்சத்தின் மேல்
ஏறி நில்.
சுதந்திரத்தை
விரி
உலகை அதில்
கிடத்து
பண்பாட்டால்
போர்த்து
சமுதாயத்தை
நிர்வாணப்படுத்து
அதன் காயங்களில்
முத்தமிடு
அழுக்குகளை
நக்கு.
உண்மைகளைக்
கட்டிப்பிடி
உன் சொல்லைக்
கவ்விப்பிடி.
காலத்தை
நடத்து
வேகத்தை
முந்து.
முரண்படு
முட்டிமோது
உடன்படு
ஒட்டி உரசு
திறன்படு
தீர அனுபவி.
வாழ்க்கையைக்
கொண்டாடு
வரலாற்றில்
நின்றாடு.
ஆசைகளோடு
உறவுகொள்
தேவைகளைக்
கருத்தரி
தேடல்களைப்
பிரசவி.
பழசை மென்று
புதுசாய்த் துப்பு.
.

