11-17-2005, 12:46 AM
<b>வலி தெரியாக் காயங்கள்....</b>
முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம்.
அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொழும்பில் இருந்து வந்த புதிய குடும்பம் டெக்னிக்கல் காலேஜ் படிக்கும் சிவில் இஞ்சினியர் பொடியன்" என்று சொன்னாள்.
"ஓ; சரி எங்கே இருக்கினம்" என்று ஆர்வமில்லாதவள் போல் அக்கறையாக கேட்டாள். "புதுவீடுகட்டினவை தானே அது இவர்கள் தான்" என்று சொன்னாள்.
ஒரு நாள் ரீயூசன் போய்வரும்போது பஸ்சை தவறவிட்டுவிட்டாள் நடந்துவந்து கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அவன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். "என்ன இனி பஸ் இல்லை நடந்தாபோகப் போறீங்கள்?" அவள் பதில் பேசவில்லை அவன் கண்ணியமாக "இஞ்ச பாருங்கோ நான் இந்த சினேகிதன் சைக்கிளில் வாறேன் நீங்கள் என் சைக்கிளில் வாங்கோ" என்று சைக்கிளை கொடுத்தான்.
10 கீ.மீ நடக்க நடுச்சாமம் ஆகும் என்று நினைத்து சைக்கிளை வாங்கி நன்றி சொல்லி விட்டு ஓடத் தொடங்கினாள். பின்னாலே பாதுகாப்பாக இடைத்தூரம் விட்டு அவனும் சினேகிதனும் யாரும் தப்பாக நினைக்காதபடி வந்தார்கள். வீட்டுக்கு கிட்டவந்ததும் அவளிடம் சொன்னான் "சரி நாங்கள் போறோம்" என்று அப்போ தான் வேணி "இல்லை கொஞ்சம் பொறுங்கோ" என்று கூறி அவர்களை தடுத்த நிறுத்தினாள்.
வீட்டு வாசலில் இருந்தபடியே "அப்பா இங்கை வாங்கோ" என்று தகப்பனை அழைத்தாள் என்ன பிள்ளை என்று கேட்டபடியே வந்த தகப்பன் முகம் சுருக்கினார் "யார் இந்த பொடியங்கள்? என்று யோசித்தபடி அப்பா இவர்கள் தான் நான் பஸ்சை விட்டு விட்டபோது தங்கள் சைக்கிளை தந்து உதவி பண்ணியவை" என்று அறிமுகபடுத்தினாள்
"ஓ மெத்த பெரிய உதவி தம்பியவை உள்ள வாங்கோ ரீ குடித்து விட்டு போங்கோ தம்பியவை" என்று அன்புடன் அழைத்தார் உள்ளே வந்து முற்றம் பார்த்த அவன் திகைத்துவிட்டான். அழகான முற்றம் குரோட்டன், மல்லிகை, கனகாம்பரம் என்று ஒரு நந்தவனத்தினுள் இருப்பது போன்ற ஒர் உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.
"தம்பி நீங்கள் நடா அண்னை மகன்தானே.? இதுயார் புது பையன்? என்று வேணியின் அப்பா கேட்டார். "அது வந்து இப்போ புதுவீடுகட்டி வந்து இருக்கும் கொழும்பு மகேந்திரன் டொக்டரின் மகன் பேர் சண்" என்று சொன்னான் அப்போ தேனீரும் தட்டில் பிஸ்கெட்டும் கொண்டுவந்த வேணிக்கும் அவன் பெயர் சொன்னது கேட்டது. அப்போ சண் கேட்டான் "அங்கிள் எங்கடவீட்டில் பூமரங்களே இல்லை எனக்கு கொஞ்சம் பதியன் தருவிங்களா?" என்று "கடவுளே தம்பி இது என்னோடது இல்லை என் மகள் தான் வைத்து இருக்கிறா அதில சாமிக்கு கூட என் மனிசி பூ பிடுங்கவிடமாட்டா எதுக்கும் அவளிடம் கேளுங்கோ ஆனால் தராவிட்டால் கவலைப் படவேண்டாம் கோண்டவிலில் ஒரு இடம் பூகன்றுகள் விற்கும் இடம் இருக்கு இடத்தைச் சொன்னால், நீங்களே போய் வாங்கலாம்" என்று வேணியின் அப்பா சொன்னர்.
முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம்.
அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொழும்பில் இருந்து வந்த புதிய குடும்பம் டெக்னிக்கல் காலேஜ் படிக்கும் சிவில் இஞ்சினியர் பொடியன்" என்று சொன்னாள்.
"ஓ; சரி எங்கே இருக்கினம்" என்று ஆர்வமில்லாதவள் போல் அக்கறையாக கேட்டாள். "புதுவீடுகட்டினவை தானே அது இவர்கள் தான்" என்று சொன்னாள்.
ஒரு நாள் ரீயூசன் போய்வரும்போது பஸ்சை தவறவிட்டுவிட்டாள் நடந்துவந்து கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அவன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். "என்ன இனி பஸ் இல்லை நடந்தாபோகப் போறீங்கள்?" அவள் பதில் பேசவில்லை அவன் கண்ணியமாக "இஞ்ச பாருங்கோ நான் இந்த சினேகிதன் சைக்கிளில் வாறேன் நீங்கள் என் சைக்கிளில் வாங்கோ" என்று சைக்கிளை கொடுத்தான்.
10 கீ.மீ நடக்க நடுச்சாமம் ஆகும் என்று நினைத்து சைக்கிளை வாங்கி நன்றி சொல்லி விட்டு ஓடத் தொடங்கினாள். பின்னாலே பாதுகாப்பாக இடைத்தூரம் விட்டு அவனும் சினேகிதனும் யாரும் தப்பாக நினைக்காதபடி வந்தார்கள். வீட்டுக்கு கிட்டவந்ததும் அவளிடம் சொன்னான் "சரி நாங்கள் போறோம்" என்று அப்போ தான் வேணி "இல்லை கொஞ்சம் பொறுங்கோ" என்று கூறி அவர்களை தடுத்த நிறுத்தினாள்.
வீட்டு வாசலில் இருந்தபடியே "அப்பா இங்கை வாங்கோ" என்று தகப்பனை அழைத்தாள் என்ன பிள்ளை என்று கேட்டபடியே வந்த தகப்பன் முகம் சுருக்கினார் "யார் இந்த பொடியங்கள்? என்று யோசித்தபடி அப்பா இவர்கள் தான் நான் பஸ்சை விட்டு விட்டபோது தங்கள் சைக்கிளை தந்து உதவி பண்ணியவை" என்று அறிமுகபடுத்தினாள்
"ஓ மெத்த பெரிய உதவி தம்பியவை உள்ள வாங்கோ ரீ குடித்து விட்டு போங்கோ தம்பியவை" என்று அன்புடன் அழைத்தார் உள்ளே வந்து முற்றம் பார்த்த அவன் திகைத்துவிட்டான். அழகான முற்றம் குரோட்டன், மல்லிகை, கனகாம்பரம் என்று ஒரு நந்தவனத்தினுள் இருப்பது போன்ற ஒர் உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.
"தம்பி நீங்கள் நடா அண்னை மகன்தானே.? இதுயார் புது பையன்? என்று வேணியின் அப்பா கேட்டார். "அது வந்து இப்போ புதுவீடுகட்டி வந்து இருக்கும் கொழும்பு மகேந்திரன் டொக்டரின் மகன் பேர் சண்" என்று சொன்னான் அப்போ தேனீரும் தட்டில் பிஸ்கெட்டும் கொண்டுவந்த வேணிக்கும் அவன் பெயர் சொன்னது கேட்டது. அப்போ சண் கேட்டான் "அங்கிள் எங்கடவீட்டில் பூமரங்களே இல்லை எனக்கு கொஞ்சம் பதியன் தருவிங்களா?" என்று "கடவுளே தம்பி இது என்னோடது இல்லை என் மகள் தான் வைத்து இருக்கிறா அதில சாமிக்கு கூட என் மனிசி பூ பிடுங்கவிடமாட்டா எதுக்கும் அவளிடம் கேளுங்கோ ஆனால் தராவிட்டால் கவலைப் படவேண்டாம் கோண்டவிலில் ஒரு இடம் பூகன்றுகள் விற்கும் இடம் இருக்கு இடத்தைச் சொன்னால், நீங்களே போய் வாங்கலாம்" என்று வேணியின் அப்பா சொன்னர்.
inthirajith

