11-15-2005, 11:13 PM
விமானம் விழுந்ததாக தகவல்: கடற்படையினர் கடலில் தேடுதல்
(ஜப்ரல் அஸ்கான்)
கற்பிட்டிக்கும் நுரைச்சோலைக்கும் இடைப்பட்ட இலத்திடிய கடற்பரப்பில் சிறிய விமானமொன்று வெடித்து வீழ்ந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து, கடற்படையினர் அப்பகுதியில் பெரும் தேடுதலை நேற்று நடத்தியுள்ளனர்.சிறிய விமானமொன்று வெடித்து கடலில் வீழ்ந்ததாக மீனவர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப்படையின் ஹெலிகொப்டர், கடற்படையினரின் படகுகள் இத்தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நளின் ஆர்.விதாரணகே இலத்திடிய பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானமைக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
விமானப்படைக்குச் சொந்தமான எந்தவொரு விமானமும் கற்பிட்டி வான்பரப்பில் பயணிக்கவில்லை என்று விமானப்படை அறிவித்துள்ளது. எனினும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
-Veerakesari
(ஜப்ரல் அஸ்கான்)
கற்பிட்டிக்கும் நுரைச்சோலைக்கும் இடைப்பட்ட இலத்திடிய கடற்பரப்பில் சிறிய விமானமொன்று வெடித்து வீழ்ந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து, கடற்படையினர் அப்பகுதியில் பெரும் தேடுதலை நேற்று நடத்தியுள்ளனர்.சிறிய விமானமொன்று வெடித்து கடலில் வீழ்ந்ததாக மீனவர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப்படையின் ஹெலிகொப்டர், கடற்படையினரின் படகுகள் இத்தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நளின் ஆர்.விதாரணகே இலத்திடிய பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானமைக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
விமானப்படைக்குச் சொந்தமான எந்தவொரு விமானமும் கற்பிட்டி வான்பரப்பில் பயணிக்கவில்லை என்று விமானப்படை அறிவித்துள்ளது. எனினும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
-Veerakesari

