Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதி தேர்தல் குசும்புகள்
#1
[size=15]<b>நம்ம குசும்பு என்ன குசும்பு
இதுவல்லவா குசும்பு </b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.lankaweb.com/news/Ranil.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.primeminister.gov.lk/images/mahinda1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.lankaweb.com/news/chandrika%20.jpg' border='0' alt='user posted image'>
<b>ரணில்:</b>
நம்ம நாட்டு விவசாயிகள் வெளி நாட்டு விவசாயிகள் மாதிரி ஆகணும்.

<b>மகிந்த :</b>
ரணில்
விவசாயிகளுக்கு டெனிம் டவுசர் - கோட் வாங்கிக் கொடுக்கப் பார்க்கிறார்.
நம்ம விவசாயிகளுக்கு தேவை அவர்களது உற்பத்திக்கு சரியான விலை

<b>ரணில் : </b>
நான் ஜனாதிபதியானால் விவசாயிகளது கடன்களை அவர்கள் கட்டத் தேவை இல்லை.

<b>சந்திரிகா: </b>
நான் வயதாகி ஜெயவர்தனா மாதிரி பொல்லூண்டுற வயசு வரைக்கும் அரசியலில் இருக்க மாட்டேன்.
நல்லா இருக்கும் போதே அரசியலை விட்டு விலகுவேன்.
இனி அரசியலுக்கு வெளியில இருந்துதான் மக்களுக்கு தொண்டு செய்வேன்.

<b>மகிந்த:</b>
நாங்கள் எங்கள் தலைவியை விட மாட்டோம்.
அவர் ஜனாதிபதியா இருந்து வெளியேறினாலும் எமது தலைவியாக அவரை எங்களோடு வைத்துக் கொள்வோம்.

<b>சந்திரிகா:</b>
ஜேவீபியினர் யுத்த நிறுத்தத்துக்கு எதிராக பேசுகிறார்கள் .
இவர்களது தலைவர் ரோகண விஜயவீரா யாழ்பாணத்தில் வைத்து தமிழருக்கு தமிழ் ஈழத்தை கொடுப்பேன் என்று சொன்னார்.
இவர்கள் அதை மறந்து தமிழருக்கு எதிராகப் பேசுகிறார்கள்.

<b>ஜேவீபி: </b>
நாங்கள் இவர்களைப் போல் தமிழர்களைத் தாக்கியதில்லை.
1981 கலவரத்துக்கு காரணமே ரணிலின் யுஎன்பீதான்.
அதேபோல 1953 கலவரத்துக்கு காரணமும் சந்திரகாவின் குடும்பத்தினர்தான்.

<b>மகிந்த: </b>
யாழ் நூலகத்தை ரணிலின் யுஎன்பீயினர் எரித்த போது நான் கலங்கி நின்றேன்.
ஒரு சிங்களக் கவிஞன் அழுது ஒரு கவிதை வடித்தான்.
அது இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது.

<b>ரணில்: </b>
நாங்கள்தான் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினோம்.

<b>ஜேவீபி:</b>
சமாதான ஒப்பந்தம் நாட்டைக் கூறு போடுகிறது.

<b>சந்திரிகா:</b>
சமாதான ஒப்பந்தத்தை கொண்டு வந்ததே நாங்கள்தான்.
யுத்த காலத்தில் ஒவ்வொரு நாளும் பிணங்கள் வந்து கொண்டிருந்தன.
இப்போது எங்கோ ஒன்று இரண்டு...........
ஒவ்வொரு வீடும் அழுத நிலை இன்று இல்லை.
இது சமாதானத்தால்தான்.
அதை ஜேவீபியினர் எதிர்க்கின்றனர்.
(இப்போது மகிந்தவுடன் (சந்திரிகா கட்சியான சுதந்திரக் கட்சி) இணைந்திருப்பவர்கள் ஜேவீபியினர்)

<b>ரணில்:</b>
பண்டாரநாயக்க குடும்பத்தினர்தான் தமிழ்-சிங்கள பிரிவினைக்கு அடி கோலியவர்கள்.

<b>சந்திரிகா:</b>
ரணிலின் மாமனார் ஜெயவர்தனாதான் செல்வா - பண்டா ஒப்பந்தத்தை கிழிக்கச் சொல்லி பாதை யாத்திரை போனவர்.

<b>மகிந்த: </b>
என்னை இனவெறியன் என்று சொல்கிறார்கள் .
நான் அனைத்து இனங்களையும் - மதங்களையும் மதிப்பவன்.

<b>சந்திரிகா: </b>
கொழும்பில் சும்மா இருந்த தமிழர்களை 1981ல் புலிகளாக சித்தரித்தது ஜெயவர்தனாதான்.

<b>ரணில்:</b>
மகிந்தவை பகிரங்கமாக தொலைக் காட்சி முன் விவாதிக்க அழைக்கிறேன்.

<b>மகிந்த :</b>
(கடைசி நேரத்தில்) தொலைக் காட்சிக்கு முன் அல்ல
மக்கள் முன் ஒரே மேடையில் சந்திக்க நான் தயார்.
ரணில் தயாரா?

கடைசி கூட்டத்துக்கு மகிந்த போகாதது வேறு கதை.......

இவை இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்துக் கூட்டங்களில்
சிங்கள மொழியில் உரையாற்றியதில் சில குசும்பு துளிகள்....................

உண்மைகளில் கொஞ்சத்தை உளறுகிறார்கள்.........
சே........காலம் போதவில்லைதான்........... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


-அஜீவன்
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
ஜனாதிபதி தேர்தல் குசும்புகள் - by AJeevan - 11-15-2005, 11:00 PM
[No subject] - by vasisutha - 11-15-2005, 11:09 PM
[No subject] - by Rasikai - 11-15-2005, 11:39 PM
[No subject] - by MUGATHTHAR - 11-16-2005, 05:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)