11-15-2005, 12:00 PM
புத்தளத்தில் நடுவானில் எரிந்து வீழ்ந்தது விமானம்!
[செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2005, 16:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் புத்தளம் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு விமானம் ஒன்று எரிந்து வீழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து 140 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலந்தையடி கடல்நீரேரி பகுதியில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. மேற்கு புத்தளத்திலிருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நுரைச்சோலையை அண்மித்த பிரதேசம் இது.
ஆனால் சிறிலங்கா இராணுவத்தினது விமானமோ உலங்குவானூர்தியோ எதுவும் காணாமல் போகவில்லை என்று சிறிலங்கா விமானப் படையின் பேச்சாளர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிந்து விழுந்து விமானமா அல்லது உலங்கு வானூர்தியா என்பது குறித்தும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு சிறிலங்கா விமானப்படையும் கடற்படையினரும் விரைந்துள்ளனர்.
அதே நேரத்தில் விமானம் ஒன்று எரிந்து வீழ்ந்ததை நேரில் பார்த்ததாக அந்தப் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
நன்றி:புதினம்
[செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2005, 16:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் புத்தளம் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு விமானம் ஒன்று எரிந்து வீழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து 140 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலந்தையடி கடல்நீரேரி பகுதியில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. மேற்கு புத்தளத்திலிருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நுரைச்சோலையை அண்மித்த பிரதேசம் இது.
ஆனால் சிறிலங்கா இராணுவத்தினது விமானமோ உலங்குவானூர்தியோ எதுவும் காணாமல் போகவில்லை என்று சிறிலங்கா விமானப் படையின் பேச்சாளர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிந்து விழுந்து விமானமா அல்லது உலங்கு வானூர்தியா என்பது குறித்தும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு சிறிலங்கா விமானப்படையும் கடற்படையினரும் விரைந்துள்ளனர்.
அதே நேரத்தில் விமானம் ஒன்று எரிந்து வீழ்ந்ததை நேரில் பார்த்ததாக அந்தப் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
நன்றி:புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

