11-10-2005, 07:52 PM
<span style='color:red'>என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்': குஷ்புக்கு ஆதரவாக சுகாசினி ஆவேசம்
சென்னை: ""குஷ்புக்கு பிரச்னை ஏற்பட்ட போது அவருக்கு எதிரானவர்களிடம் மட்டுமே பத்திரிகைகள், "டிவி'கள் கருத்து கேட்டு அதனை பரபரப்பாக வெளியிட்டன. குஷ்புக்கு ஆதரவாளர்களிடம் கருத்து ஏதும் கேட்கவில்லை. என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்,'' என்று நடிகை சுகாசினி ஆத்திரத்துடன் கூறினார்.
உலக சினிமா அகடமி மற்றும் செவன்த் சேனல் நிறுவனத்தின் சார்பில் "தமிழ்நாடு உலகத் திரைப்பட விழா 2005' நேற்று சென்னையில் பிலிம் சேம்பர் தியேட்டரில் துவங்கியது. இவ்விழாவினை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துப் பேசியதாவது:
திரைப்படத் துறையினர் எது பேசினாலும் அவைகள் பத்திரிகைள் மூலமாகவும், "டிவி'க்கள் மூலமாகவும் பரபரப்பாக வெளிவந்து விடுகிறது. இதைப் பார்க்கும் போது ஏதும் பேசாமல் இருந்து விடலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. விழா வேண்டாம், பேட்டி வேண்டாம், அறிக்கை வேண்டாம் என்று இருந்து விடலாம் என்று தான் தோன்றுகிறது. இருந்தாலும் விழாக்களுக்கு வரும் போது ஏதாவது பேச வேண்டியதாகி விடுகிறது. கலைஞர்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். உண்மையை பேசுபவர்கள். இதனால் மனதில் பட்டதை பேசி விடுகின்றனர். கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு. ஆனால், மற்றவர்கள் பேசுவதை விட, திரையுலகத்தினரின் பேச்சு தான் அதிகமாக கண்காணிக்கப்பட்டு செய்தியாக பரபரப்பாக வந்து விடுகிறது. இதனால் ஏதும் பேச வேண்டாம் என்று தவிர்க்க நினைத்தாலும் விழாக்களில் ஏதாவது பேச வேண்டியதாகி விடுகிறது.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
குஷ்பு பேசும் போது, ""நான் பேசியது புரிந்திருக்க வேண்டியவர்களுக்கு புரிந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. நான் ஒவ்வொரு தடைக் கல்லையும் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்கிறேன். வாழ்க்கையில் பல தடைகள் எதிர்ப்பட்ட போதும் வெற்றியடைய இதுதான் காரணம்,'' என்றார்.
நடிகை சுகாசினி பேசியதாவது:
குஷ்புக்கு பிரச்னை ஏற்பட்ட போது அவருக்கு எதிரானவர்களிடம் மட்டுமே பத்திரிகைகள், "டிவி'கள் கருத்து கேட்டு அதனை பரபரப்பாக வெளியிட்டன.
குஷ்புக்கு ஆதரவாளர்களிடம் கருத்து ஏதும் கேட்கவில்லை. என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்.
நான் அப்போது வெளிநாட்டிலிருந்ததால் இந்த விவகாரத்தை கேள்விப்பட்டு சங்கடப்பட்டேன். "போராட்டத்தை வெற்றிகரமாக சந்தியுங்கள்' என்று குஷ்புக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியிருந்தேன்.
இந்தியாவிற்கு 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் தானா, பெண்களுக்கு இல்லையா? பெண்கள் கருத்து சொல்ல சுதந்திரம் கிடையாதா? குஷ்பு வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் தமிழ்நாட்டிற்கு வாழ வந்தவர். அவர் பேசியதை பிரச்னையாக்கியவர்கள் அவரை மாநிலத்தை விட்டு ஓடு, நாட்டை விட்டு ஓடு என்றெல்லாம் சொல்கின்றனர்.
நான் தமிழ்நாட்டு பெண். நான் ஏதும் பேசியிருந்தால் என்னை பரமக்குடிக்கு ஓடிவிடு என்று சொல்லி விடுவார்களா? குஷ்பு பேட்டியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பதில் சொல்லியிருந்தார். இதனை புரிந்துகொள்ளாமல் யார், யாரோ எத்தனையோ அவமானங்களை அவருக்கு ஏற்படுத்தி விட்டனர். தமிழ்நாட்டிற்கு வாழ வந்த குஷ்பு நிறைய வேதனைபட்டு விட்டார். இதற்காக நான் தமிழர்களின் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சுகாசினி பேசினார்.
இத்திரைப்பட விழா வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 20 பிரபல திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் ஜனரஞ்சக படம் ஆகிய பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.
விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.தியாகராஜன், செயலர் ஏ.எல்.அழகப்பன், தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்னம் ஆகியார் கலந்து கொண்டனர். முன்னதாக மாலாமணியன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் உலகத் தமிழ் சினிமா அகடமியின் தலைவர் "செவன்த் சேனல்' மாணிக்கம் நன்றி கூறினார்.
குஷ்பு முத்தம்: குஷ்புவிற்கு ஆதரவாக சுகாசினி மேடையில் உருக்கமாகவும், ஆவேசமாகவும் பேசிக் கொண்டிருந்தை குஷ்பு புன்
முறுவல் பூத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
சுகாசினி பேசி முடித்ததும் உடனே குஷ்பு எழுந்து சென்று சுகாசினியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
[size=9]நன்றி>தமிழ்மண்றம்</span>
சென்னை: ""குஷ்புக்கு பிரச்னை ஏற்பட்ட போது அவருக்கு எதிரானவர்களிடம் மட்டுமே பத்திரிகைகள், "டிவி'கள் கருத்து கேட்டு அதனை பரபரப்பாக வெளியிட்டன. குஷ்புக்கு ஆதரவாளர்களிடம் கருத்து ஏதும் கேட்கவில்லை. என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்,'' என்று நடிகை சுகாசினி ஆத்திரத்துடன் கூறினார்.
உலக சினிமா அகடமி மற்றும் செவன்த் சேனல் நிறுவனத்தின் சார்பில் "தமிழ்நாடு உலகத் திரைப்பட விழா 2005' நேற்று சென்னையில் பிலிம் சேம்பர் தியேட்டரில் துவங்கியது. இவ்விழாவினை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துப் பேசியதாவது:
திரைப்படத் துறையினர் எது பேசினாலும் அவைகள் பத்திரிகைள் மூலமாகவும், "டிவி'க்கள் மூலமாகவும் பரபரப்பாக வெளிவந்து விடுகிறது. இதைப் பார்க்கும் போது ஏதும் பேசாமல் இருந்து விடலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. விழா வேண்டாம், பேட்டி வேண்டாம், அறிக்கை வேண்டாம் என்று இருந்து விடலாம் என்று தான் தோன்றுகிறது. இருந்தாலும் விழாக்களுக்கு வரும் போது ஏதாவது பேச வேண்டியதாகி விடுகிறது. கலைஞர்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். உண்மையை பேசுபவர்கள். இதனால் மனதில் பட்டதை பேசி விடுகின்றனர். கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு. ஆனால், மற்றவர்கள் பேசுவதை விட, திரையுலகத்தினரின் பேச்சு தான் அதிகமாக கண்காணிக்கப்பட்டு செய்தியாக பரபரப்பாக வந்து விடுகிறது. இதனால் ஏதும் பேச வேண்டாம் என்று தவிர்க்க நினைத்தாலும் விழாக்களில் ஏதாவது பேச வேண்டியதாகி விடுகிறது.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
குஷ்பு பேசும் போது, ""நான் பேசியது புரிந்திருக்க வேண்டியவர்களுக்கு புரிந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. நான் ஒவ்வொரு தடைக் கல்லையும் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்கிறேன். வாழ்க்கையில் பல தடைகள் எதிர்ப்பட்ட போதும் வெற்றியடைய இதுதான் காரணம்,'' என்றார்.
நடிகை சுகாசினி பேசியதாவது:
குஷ்புக்கு பிரச்னை ஏற்பட்ட போது அவருக்கு எதிரானவர்களிடம் மட்டுமே பத்திரிகைகள், "டிவி'கள் கருத்து கேட்டு அதனை பரபரப்பாக வெளியிட்டன.
குஷ்புக்கு ஆதரவாளர்களிடம் கருத்து ஏதும் கேட்கவில்லை. என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்.
நான் அப்போது வெளிநாட்டிலிருந்ததால் இந்த விவகாரத்தை கேள்விப்பட்டு சங்கடப்பட்டேன். "போராட்டத்தை வெற்றிகரமாக சந்தியுங்கள்' என்று குஷ்புக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியிருந்தேன்.
இந்தியாவிற்கு 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் தானா, பெண்களுக்கு இல்லையா? பெண்கள் கருத்து சொல்ல சுதந்திரம் கிடையாதா? குஷ்பு வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் தமிழ்நாட்டிற்கு வாழ வந்தவர். அவர் பேசியதை பிரச்னையாக்கியவர்கள் அவரை மாநிலத்தை விட்டு ஓடு, நாட்டை விட்டு ஓடு என்றெல்லாம் சொல்கின்றனர்.
நான் தமிழ்நாட்டு பெண். நான் ஏதும் பேசியிருந்தால் என்னை பரமக்குடிக்கு ஓடிவிடு என்று சொல்லி விடுவார்களா? குஷ்பு பேட்டியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பதில் சொல்லியிருந்தார். இதனை புரிந்துகொள்ளாமல் யார், யாரோ எத்தனையோ அவமானங்களை அவருக்கு ஏற்படுத்தி விட்டனர். தமிழ்நாட்டிற்கு வாழ வந்த குஷ்பு நிறைய வேதனைபட்டு விட்டார். இதற்காக நான் தமிழர்களின் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சுகாசினி பேசினார்.
இத்திரைப்பட விழா வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 20 பிரபல திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் ஜனரஞ்சக படம் ஆகிய பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.
விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.தியாகராஜன், செயலர் ஏ.எல்.அழகப்பன், தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்னம் ஆகியார் கலந்து கொண்டனர். முன்னதாக மாலாமணியன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் உலகத் தமிழ் சினிமா அகடமியின் தலைவர் "செவன்த் சேனல்' மாணிக்கம் நன்றி கூறினார்.
குஷ்பு முத்தம்: குஷ்புவிற்கு ஆதரவாக சுகாசினி மேடையில் உருக்கமாகவும், ஆவேசமாகவும் பேசிக் கொண்டிருந்தை குஷ்பு புன்
முறுவல் பூத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
சுகாசினி பேசி முடித்ததும் உடனே குஷ்பு எழுந்து சென்று சுகாசினியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
[size=9]நன்றி>தமிழ்மண்றம்</span>
.
.
.

