11-10-2005, 03:47 PM
<b>சுகாசினிக்கு எதிர்ப்பு வெடிக்கிறது</b>
தமிழ்ப் பெண்களின் கற்பை களங்கப்படுத்தும் விதத்தில் பேசி கண்டனத்துக்குள்ளான குஷ்புவிடம் தமிழக மக்கள் அனைவரின் சார்பாகவும் மன்னிப்பு கேட்பதாக உளறிய மாஜி நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுகாசினிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குஷ்புவையும் மேடையில் வைத்துக் கொண்டு பேசிய சுகாசினி,
தமிழ்நாட்டில் பிறந்தால் இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?. வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வாழ வந்த ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்காக ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும். அவரை அவமானப்படுத்தியதற்காக தமிழர்கள் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் இப்படி பேசினால் என்னை பரமக்குடிக்கு அனுப்பி விடுவீர்களா? என்று பேசினார்.
இதையடுத்து சுகாசினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் குஷ்பு.
இதைத் தொடர்ந்து சுகாசினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருமாவளவன்:
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக குஷ்பு மாதிரியான ஒரு நடிகையிடம் மன்னிப்பு கேட்க இவர் யார்? குஷ்புவை கண்டித்தற்காக தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று குஷ்பு பேசியிருக்கிறார். எந்தச் செயலுக்கும் வெட்கப்படாதவர்கள் இப்படிச் சொல்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை தான்.
குஷ்புவின் சாதனைகளுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைக்கச் செய்ய சுகாசினி போன்றவர்கள் வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம்.
தமிழ்ப் பெண்களை இழிவாக பேசுவதை சுகாசினி ஆதரித்தால் குஷ்புவுக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கும் ஏற்படும். தனது பேச்சுக்காக சுகாசினி தான் முதலில் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
கொம்பை காட்டினால்...
கவிஞர் மு.மேத்தா கூறுகையில், குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்து விட்டு எரிகிறது... அதை அணைக்கப் பார்ப்பது தான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக் கூடாது என்றார்.
இயக்குனர் கே.ஆர் கூறுகையில், குஷ்புவும் சுகாசினியும் பேசுவது துணிச்சலான செயல் மாதிரி அவர்களுக்கு வேண்டுமானால் படலாம். ஆனால், இதையெல்லாம் ஏற்க முடியாது. காரணம் இது கண்ணகி பிறந்த நாடு. எதையாவது தவறாகப் பேசினால் தங்களுக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்றார்.
திமுக பேச்சாளரான வெற்றி கொண்டான் கூறுகையில், கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்புவும் சுகாசினியும் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. இவர்களை எல்லாம் திருத்த முடியாது. ஆனால், தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்க முடியாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
இயக்குனர் சீமான் கூறுகையில், தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது என்று பேசியுள்ள சுகாசினி, தமிழர்கள் சார்பாக குஷ்புவிடம் போய் மன்னிப்பு கேட்பதாக சொல்வதை சகிக்க முடியவில்லை. இதற்காக சுகாசினி முதலில் மன்னிப்பு கேட்கட்டும் என்றார்.
பாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், தமிழ்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படுகிற தமிழக மக்களுக்கு சவால் விட்டுள்ளார் சுகாசினி என்றார்.
நடிகை மனோரமா கூறுகையில், முதல்வர் அம்மாவே ஒரு நடிகை தான். அவரே குஷ்பு பேசியது தவறு என்று சொல்லிவிட்ட பிறகு இந்தப் பிரச்சனையில் மீண்டும் பெரிதாக்குவது நல்லதல்ல. எனக்கு எய்ட்ஸ் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. படித்தவர்கள் என்பதால் அவர்கள் (சுகாசினி, குஷ்பு) இப்படி பேசுகிறார்கள். இவர்களது பேச்சு சரியல்ல. அதற்காக மன்னிப்பு கேட்பது தான் சரி என்றார்.
எப்படியோ குஷ்பு புண்ணியத்தில் சுகாசினிக்கும் இலவசமாய் கொஞ்சம் விளம்பரம்..
Thatstamil
தமிழ்ப் பெண்களின் கற்பை களங்கப்படுத்தும் விதத்தில் பேசி கண்டனத்துக்குள்ளான குஷ்புவிடம் தமிழக மக்கள் அனைவரின் சார்பாகவும் மன்னிப்பு கேட்பதாக உளறிய மாஜி நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுகாசினிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குஷ்புவையும் மேடையில் வைத்துக் கொண்டு பேசிய சுகாசினி,
தமிழ்நாட்டில் பிறந்தால் இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?. வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வாழ வந்த ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்காக ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும். அவரை அவமானப்படுத்தியதற்காக தமிழர்கள் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் இப்படி பேசினால் என்னை பரமக்குடிக்கு அனுப்பி விடுவீர்களா? என்று பேசினார்.
இதையடுத்து சுகாசினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் குஷ்பு.
இதைத் தொடர்ந்து சுகாசினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருமாவளவன்:
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக குஷ்பு மாதிரியான ஒரு நடிகையிடம் மன்னிப்பு கேட்க இவர் யார்? குஷ்புவை கண்டித்தற்காக தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று குஷ்பு பேசியிருக்கிறார். எந்தச் செயலுக்கும் வெட்கப்படாதவர்கள் இப்படிச் சொல்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை தான்.
குஷ்புவின் சாதனைகளுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைக்கச் செய்ய சுகாசினி போன்றவர்கள் வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம்.
தமிழ்ப் பெண்களை இழிவாக பேசுவதை சுகாசினி ஆதரித்தால் குஷ்புவுக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கும் ஏற்படும். தனது பேச்சுக்காக சுகாசினி தான் முதலில் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
கொம்பை காட்டினால்...
கவிஞர் மு.மேத்தா கூறுகையில், குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்து விட்டு எரிகிறது... அதை அணைக்கப் பார்ப்பது தான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக் கூடாது என்றார்.
இயக்குனர் கே.ஆர் கூறுகையில், குஷ்புவும் சுகாசினியும் பேசுவது துணிச்சலான செயல் மாதிரி அவர்களுக்கு வேண்டுமானால் படலாம். ஆனால், இதையெல்லாம் ஏற்க முடியாது. காரணம் இது கண்ணகி பிறந்த நாடு. எதையாவது தவறாகப் பேசினால் தங்களுக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்றார்.
திமுக பேச்சாளரான வெற்றி கொண்டான் கூறுகையில், கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்புவும் சுகாசினியும் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. இவர்களை எல்லாம் திருத்த முடியாது. ஆனால், தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்க முடியாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
இயக்குனர் சீமான் கூறுகையில், தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது என்று பேசியுள்ள சுகாசினி, தமிழர்கள் சார்பாக குஷ்புவிடம் போய் மன்னிப்பு கேட்பதாக சொல்வதை சகிக்க முடியவில்லை. இதற்காக சுகாசினி முதலில் மன்னிப்பு கேட்கட்டும் என்றார்.
பாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், தமிழ்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படுகிற தமிழக மக்களுக்கு சவால் விட்டுள்ளார் சுகாசினி என்றார்.
நடிகை மனோரமா கூறுகையில், முதல்வர் அம்மாவே ஒரு நடிகை தான். அவரே குஷ்பு பேசியது தவறு என்று சொல்லிவிட்ட பிறகு இந்தப் பிரச்சனையில் மீண்டும் பெரிதாக்குவது நல்லதல்ல. எனக்கு எய்ட்ஸ் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. படித்தவர்கள் என்பதால் அவர்கள் (சுகாசினி, குஷ்பு) இப்படி பேசுகிறார்கள். இவர்களது பேச்சு சரியல்ல. அதற்காக மன்னிப்பு கேட்பது தான் சரி என்றார்.
எப்படியோ குஷ்பு புண்ணியத்தில் சுகாசினிக்கும் இலவசமாய் கொஞ்சம் விளம்பரம்..
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

